No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நன்மைகளை தரும் விஜயா ஏகாதசி… விரதங்களும் பலன்களும்..!!

Mar 18, 2023   Ramya   143    ஆன்மிகம் 


விஜயா ஏகாதசியான இன்று இதைச் செய்ய மறக்காதீர்கள்!!


🌟 ஒவ்வொரு ஏகாதசி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. அது அந்த ஏகாதசி திதியின் தன்மையைச் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டது. அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "விஜயா ஏகாதசி" என அழைக்கப்படுகிறது.

🌟 "விஜயா" என்றாலே வெற்றி என்று பொருள். இந்த விஜயா ஏகாதசியில் 7 தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்பி கலசம் வைத்து மகாவிஷ்ணுவைப் பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவர் என்பது ஐதீகம். விஜயா ஏகாதசியை ஸ்ரீ ராமபிரானே கடைபிடித்ததாக புராணம் கூறுகிறது.

🌟 கடினமான சூழலில், போராட்டமான வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஏகாதசி விஜயா ஏகாதசி.

🌟 விஜயா ஏகாதசி நாளில் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி முழு உபவாசம் இருந்து இறைவனை வழிபடுவது சிறந்தது.

🌟 விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உரைக்கும் சகஸ்ரநாமத்தை இந்த நாளில் கேட்பது பயன்தரும். குறைந்தபட்சம் இன்று கட்டாயம் ஆலயம் சென்று பெருமாளை வழிபட்டு அங்கு அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்து வழிபடுவதன் மூலம் விஜயா ஏகாதசி விரதத்தின் பலனை முழுமையாகப் பெறலாம்.

செய்யக்கூடாதவை...

🌟 பெருமாளைத் துதித்து வழிபடுவோர் ஏகாதசி அன்று அசைவம் சாப்பிடக்கூடாது. இன்றைய தினம் துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கு வேண்டிய துளசியை ஏகாதசிக்கு முன் தினமே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியவை...

🌟 இன்றைய தினம் பெருமாளின் நாமங்களை ஜெபிப்பது சிறப்பு. விஷ்ணு பகவானின் புராண நூல்களைப் படிப்பதும் சிறப்பானது. ஏகாதசியன்று காலையில் விஷ்ணு பகவானுக்கு உகந்த விஷ்ணு சகஸ்ரநாமம், வெங்கடேச சுப்ரபாதம் போன்ற துதிகளை வீட்டிலும், வியாபார தலங்களிலும் ஒலிக்கச் செய்யலாம்.

🌟 பூஜைக்குப் பறித்து வைத்திருந்த துளசியை பெருமாளுக்குச் சாற்றி வழிபடலாம். அதன் பயனாக தடைகள் நீங்கி நல்வழி பிறக்கும். பணவரவு அதிகரிக்கும்.

விஜயா ஏகாதசி விரத பலன்கள் :

🌟 இந்த ஏகாதசியை சரியான முறையில் அனுஷ்டிப்பவர்கள் இல்வாழ்க்கையிலும் அதற்குப் பின்னரும் வெற்றி பெறுவார். இந்த ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவ வினைகளையும் அழித்துவிடும். விஜயா ஏகாதசியின் கதையை கேட்டாலோ அல்லது படித்தாலோ அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

🙏விஜயா ஏகாதசி விரதத்தை அனுசரித்து வாழ்வில் வெற்றியையும், பாவங்களில் இருந்து விடுதலையையும் பெறுவோம்...!🙏


Share this valuable content with your friends


Tags

இலை வேண்டுதலுக்காக திருமாங்கல்யத்தை உண்டியலில் போடலாமா? எந்த ஒரு நிலையும் இல்லாத நிலையை அடைய என்ன செய்ய வேண்டும்? இளையராஜா குபேரலட்சுமி படத்தை எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்? இயற்கை காட்சிகள் bying coconut தங்க நகை அணிவது போல் கனவு கண்டால் சூனியம் என்பது உண்மையா? பாழடைந்த வீட்டை கனவில் புதியத்துணி எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 4-ல் சூரியன் தினசரி ராசிபலன்கள் (20.07.2020) april 6 விபூதி இடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? venaiyakar கிருத்திகையில் புதிய துணி எடுக்கலாமா? கிணற்றில் இருந்து நிறைகுடம் தண்ணீர் இறைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? எந்தெந்த நட்சத்திரங்களில் பணம் கொடுக்கக்கூடாது? தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?