சீவக சிந்தாமணி... பயணம் மேற்கொள்ளக்கூடிய பாதையை பற்றி அறிந்து கொண்ட சீவகன்...!!
🌟 சுதஞ்சணன் சீவகனை பார்த்து, இப்பொழுது நாம் இருக்கும் இடம் என்பது சங்கவெண் மலை என்பதை நினைவில் வைத்துக்கொள். இங்கிருந்து இரண்டு காத தூரம் நடந்து சென்றால் அரணபாதம் என்ற மலை ஒன்று வரும். அந்த மலையில் சமண முனிவர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
🌟 அந்த முனிவர்கள் அனைவரும் துறவு நிலையில் இருக்கக்கூடியவர்கள். பின்பு அந்த மலையை கடந்து இருபத்தைந்து காத தூரம் சென்றால் பெரிய ஆறு ஒன்று வரும். இந்த ஆறு பார்ப்பதற்கு கடலை போன்றிருக்கும். அந்த ஆறு தான் மிகவும் அபாயம் நிறைந்த பகுதியாகும். அந்த ஆற்றை கடந்து செல்பவர்கள் என்பது மிக குறைந்தளவு மட்டுமே. அந்த பாதையின் வழியாக நிறைய பொய்கைகளும், அருவிகளும் இருக்கும். அந்த அருவியில் இருந்து வலது பக்கமாக நீ செல்ல வேண்டும்.
🌟 பின்பு இன்னும் இரண்டு காத தூரம் நடந்து சென்றால், அடர்ந்த காடு வரும். அந்த காட்டில் பேய்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அவ்விடத்தில் நீ மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் செல்ல வேண்டும் என்றான்.
🌟 அப்பொழுது சீவகன், இறந்து போய் பேயாக இருக்கக்கூடியவர்களால் என்னை என்ன செய்ய இயலும்? என்றான்.
🌟 பேயாக இருக்கக்கூடியவர்களில் மோகினி பிசாசுகளும் உள்ளன. அவைகள் உன்னை கவர்ந்திழுக்க பார்க்கும். அதனுடைய அசைவுகளிலும், அழகிலும் சிக்கி கொள்ளாமல், ஒரு காத தூரம் நடந்து சென்றால் எழில்மிகு நகரம் ஒன்று தென்படும்.
🌟 அந்த நகரத்தின் பெயர் பல்லவ நாடு என்றும், அந்த நகரத்தில் நீ இரண்டு மாத காலம் தங்கியிருக்க வேண்டிய சூழல் உண்டாகும் என்றும் சுதஞ்சணன் கூறினான்.
🌟 ஏன் அங்கு மட்டும் நான் இரண்டு மாதம் தங்க வேண்டும்? அப்படி என்ன அந்த இடத்தில் தனித்துவம் இருக்கின்றது? என்று கேட்டான் சீவகன்.
🌟 நான் இப்பொழுது சொன்னால் உனக்கு எதுவும் புரியாது. நேரில் அங்கு சென்று நீயே காணும் பொழுது புரிந்து கொள்வாய் என்று சுதஞ்சணன் புன்னகையுடன் கூறினான்.
🌟 அதை கடந்து இன்னும் நீ பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த பாதையில் மரங்கள் என்பது துளியும் இல்லாமல், பாறைகள் யாவும் நிறைந்திருக்கும். கதிரவனின் ஒளிக்கதிர்கள் உன்னை வாட்டி எடுத்து விடும்.
🌟 ஆகவே அவ்விடத்தில் பொறுமையாக இருந்து உன்னுடைய பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளவும். அதன் பிறகு நீ அடையும் நகரம் என்பது மத்திய தேசமாகும். அந்த தேசத்தில் உனக்கு பல ஆச்சரியங்களும், அறிமுகங்களும் காத்திருக்கின்றன என்று கூறினான் சுதஞ்சணன்.
🌟 சுதஞ்சணன் பாதையை பற்றி கூறி முடித்ததும், நீ கூறிய அனைத்தையும் என் மனதில் பதிய வைத்து கொண்டேன். இப்பொழுது பயணத்திற்கான ஏற்பாடுகளை நான் மேற்கொள்கின்றேன் என்றான் சீவகன்.
🌟 பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக நான் உனக்கு சில மந்திரங்களை கற்று தருகின்றேன். அந்த மந்திரங்களை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள். உனக்கு ஏதேனும் துன்பமும், ஆபத்தும் ஏற்படும் பொழுது அந்த மந்திரத்தை பயன்படுத்தி உனக்கான துன்பத்தை போக்கிக்கொள் என்று சுதஞ்சணன் கூறினான்.
🌟 ஆமாம், எனக்கு மந்திரம் எதற்கு? நீ கூற போகின்ற இந்த மந்திரத்தினால் எனக்கு என்ன பயன்கள் ஏற்பட போகின்றன? என்று கேட்டான் சீவகன்.
🌟 அதற்கு சுதஞ்சணன், நான் உனக்கு மூன்று மந்திரங்கள் பற்றி தெளிவாக கூறுகிறேன். முதல் மந்திரம் உன்னுடைய குரலில் இருக்கக்கூடிய கடினத்தன்மையை குறைத்து, எளிமையை அதிகப்படுத்தும். இரண்டாவது மந்திரம் பாம்பு விஷத்தினை முறிக்கக்கூடிய மந்திரமாகும். மூன்றாவது மந்திரம் நீ விரும்பிய உடலை பெற்று தரும் என்றான்.
🌟 எல்லா மந்திரங்களும் மிகவும் பயன்படும் விதத்தில் தான் இருக்கின்றன. அது என்னென்ன மந்திரங்கள் என்று கூறு, நான் தெளிவாக நினைவில் வைத்து கொள்கின்றேன் என்றான் சீவகன்.
🌟 சுதஞ்சணனும் சீவகனுக்கு பயன்படக்கூடிய மந்திரங்களை பற்றி கூற தொடங்கினான். சுதஞ்சணன் கூற சீவகன் அந்த மந்திரங்களை தெளிவாக தனது மனதில் பதிய வைத்து கொண்டான்.
🌟 மந்திரங்களை பற்றி தெளிவாக அறிந்ததும், சீவகன் தன்னுடைய தோழனான சுதஞ்சணன் மற்றும் அவனது குடும்பத்திடம் இருந்து விடைபெற்று தனது பயணத்தை மேற்கொண்டான்.
நரசிங்க முனையரைய நாயனார் பௌர்ணமியில் இறைச்சி சாப்பிடலாமா? கருட புராணத்தை வீட்டில் ஏன் இருக்கவோ Dream palan முன்னோர் வழிபாடு பெண் பார்க்க செல்வது போல் கனவு வந்தால் என்ன பலன்? வியாழக்கிழமை விரதம் vishnu October month Rasipalan in PDF Format!! சரண் சிங் கந்த சஷ்டி கவசத்தை எல்லா இடங்களிலும் படிக்கலாமா? மார்கழி மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? மாமன் மகன் கனவில் வந்தால் என்ன பலன்? meesham T ஜங்ஷன் தெருக்குத்து இடம் வாங்கலாமா? koburam 16.07.2020 rasipalan in pdf format தினசரி ராசிபலன் (12.02.2022) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையான நாள் ? former 7ல் புதனும்