சீவக சிந்தாமணி... சீவகனை காப்பாற்றிய சுதஞ்சணன்…!!
🌟 இவர்களை கொல்வதால் மட்டும் எனக்கு என்ன நன்மை ஏற்பட போகின்றது? எனக்கான வேலை செய்வதற்கு இன்னும் காலம் வரவில்லையே. அந்த காலம் வரும் வரை நான் காத்திருக்க வேண்டும் அல்லவா!
🌟 நாட்டை எரித்து தான், நான் வெளியே வருவது என்றால் என்னை நானே எரிப்பதற்கு சமமாகும். நானும், என்னுடைய நாடும் வேறல்ல. இந்த யோசனை எனக்கு பிடிக்கவில்லை என்றும், உன்னுடைய யோசனை மிகவும் நல்ல யோசனையாக இருந்தாலும் அதில் என் மனம் லயப்படவில்லை என்றும் கூறினான்.
🌟 எங்களிடமிருந்து எந்த உதவியும் வேண்டாம் என்று கூறுகின்றீர்கள். அப்படியென்றால் என்ன செய்ய போகின்றீர்கள்? இந்த சிறைச்சாலையிலேயே இருக்க போகின்றீர்களா? அதற்கும் இப்பொழுது காலமில்லையே.. உங்கள் முடிவு தான் என்ன? என்று கேட்டாள் காந்தருவதத்தை.
🌟 காந்தருவதத்தையே ஒருவேளை நான் நண்பர்களின் உதவியை நாடினால் அது ஒரு பெரிய போரில் அல்லவா போய் முடியும். எனது குருநாதர் கூறிய காலமும் இன்னும் வரவில்லை. நான் இங்கேயும் இருக்க போவதில்லை. என்னுடைய மறைவு யாரையும் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் இருக்க போகின்றது என்றான்.
🌟 என்ன கூறுகின்றீர்கள்? உங்களுடைய மறைவா..! என்று அதிர்ச்சியாக கேட்டாள் காந்தருவதத்தை.
🌟 மறைவு என்றால் அந்த மறைவு அல்ல. ஒளிவு என்றும் பொருள் உள்ளது. யாரையும் பாதிக்காமல், என்னை காப்பாற்றுவது யார் என்றால்? அது சுதஞ்சணன் (நாயாய் இருந்து சீவகனால் மோட்சமடைந்த தேவன்) தான். சுதஞ்சணால் மட்டுமே முடியும். அவனை நினைத்தாலே போதும், நொடியில் இங்கு வந்து என்னை காப்பாற்றி விடுவான் என்றும், சரியான நேரத்திற்காக தான் இப்பொழுது காத்து கொண்டிருக்கின்றேன் என்றும் கூறினான்.
🌟 சீவகன் கூறியதை கேட்ட காந்தருவதத்தை, என்னது சரியான நேரமா? அதென்ன சரியான நேரம் என்று கேட்டாள்.
🌟 உடனே நீ இங்கிருந்து புறப்படு. இன்னும் சிறிது நேரத்தில் மதனன் இங்கே வருவான். இது அவன் வரும் நேரம், இது தான் எனக்கும் சரியான நேரமாக இருக்கும் என்று கூறி சிரித்தான் சீவகன்.
🌟 சுதஞ்சணன் மூலமாக நீங்கள் இந்த சிறைச்சாலையில் இருந்து தப்பித்து சென்றால், மீண்டும் நாம் எப்பொழுது சந்திக்க முடியும் என்று குரலில் வீரம் இருந்தாலும் விழியில் நீர் ததும்ப வினவினாள் காந்தருவதத்தை.
🌟 நான் ஏற்கனவே கூறி இருக்கின்றேன் அல்லவா! எல்லாம் விதிப்படி தான் நடக்கும். எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். நான் எங்கிருந்தாலும் பலத்துடன் தான் இருப்பேன். சரியான நேரம் வந்ததும் நானே வெளிவருவேன் என்று கூறினான் சீவகன்.
🌟 அப்பொழுது எதிர்பாராத விதமாக மதனன் சிறைச்சாலைக்குள் வந்தான். எங்கே அந்த சீவகன்? அவனுடைய கடைசி காலங்கள் மிகவும் அருகாமையில் இருக்கின்றது போல தெரிகிறது. ஏனென்றால் அவனை கொல்வதற்கு யானை தயாராக இருக்கின்றது என்று கூறி கொண்டே சீவகனிருக்கும் சிறையை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
🌟 மதனனுடைய குரலை கேட்டதும் சீவகன் தனக்கான நேரம் வந்துவிட்டது என்பதை புரிந்து கொண்டு, காந்தருவதத்தையிடம் இவ்விடத்திலிருந்து உடனடியாக யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் மறைந்து செல்வாயாக என்று கூறினான்.
🌟 காந்தருவதத்தை, நீர் நிறைந்த விழிகளுடன் தன்னுடைய மாய மந்திரத்தின் மூலம் யார் கண்களுக்கும் அகப்படாமல் கணப்பொழுதில் அவ்விடத்திலிருந்து மறைந்து சென்றாள்.
🌟 காந்தருவதத்தை மறைந்து சென்றதும் சீவகன் தன்னுடைய நண்பனான சுதஞ்சணனை மனதில் எண்ணிய விதமாக அழைத்தான்.
🌟 சீவகனின் அழைப்பு நீண்ட நெடும் தொலைவில் இருக்கக்கூடிய சுதஞ்சணனுக்கு புரிந்தது. நண்பன் ஏதோ துன்பத்தில் அகப்பட்டு கொண்டிருக்கின்றான். ஆகவே உடனடியாக செல்ல வேண்டும் என்று எண்ணி மின்னல் வேகத்தில் சீவகனிருக்கும் சிறையில் தோன்றினான்.
🌟 சீவகனை சிறைச்சாலையில் கண்டதும், சீவகனுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலைக்கு யார் காரணம்? என்றும், அதற்கு இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டான்.
🌟 நண்பா சுதஞ்சணா! உன்னை இக்கட்டான சூழ்நிலையில் அழைத்திருக்கின்றேன் என்று சீவகன் கூறி கொண்டிருக்கும் பொழுதே,
🌟 இப்பொழுது நமக்கு பேசுவதற்கு நேரமில்லை. நாம் உடனடியாக இவ்விடத்திலிருந்து புறப்பட வேண்டும் என்றான் சுதஞ்சணன். பின் இருவரும் அவ்விடத்திலிருந்து எந்தவிதமான தடயங்களும் இல்லாமல் மறைந்து சென்றனர்.
குடும்ப ஒற்றுமை பூராடம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? சித்தர்களின் ஜீவ சமாதிகள் உலக தொலைகாட்சி தினம் 24.12.2022 important days வார ராசிபலன்கள் (17-01-2022 - 23-01-2022) PDF வடிவில்...!! 11ல் செவ்வாய் இருந்தால் waaka thoosam wednesday வீட்டின் மாடியில் தூங்கிய அனைவருக்கும் ஒரே நேரத்தில் பேய் கனவு வந்தால் என்ன பலன்? mappilai ஏப்ரல் மாதத்தில் குழந்தை பிறக்கலாமா? நிறைய பாம்புகளை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பணத்தை கனவில் கண்டால் என்ன பலன் மிதுனத்தில் சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை வலம்புரி சங்கு எந்த திசையில் இருக்க வேண்டும்? பங்குனி மாதத்தில் திருமணம் செய்யாலமா? மாதுளைப்பழம் முன்னாள் மனைவி எதையோ கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூனையை கனவில் கண்டால் என்ன பலன்?