சீவக சிந்தாமணி... சிறைச்சாலையில் சீவகனும் காந்தருவதத்தையும்..!!
🌟 இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசி கொண்டிருந்த பொழுது, நானும் என்னுடைய கருத்துக்களை கூறலாமா? என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க, அங்கிருந்த அனைவரும் மிகுந்த பதற்றத்தோடு திரும்பி பார்த்தார்கள்.
🌟 அந்த குரலுக்கு சொந்தக்காரி வேறு யாருமில்லை. சீவகனின் முதல் மனைவியான காந்தருவதத்தையே.
🌟 பின் காந்தருவதத்தை சீவகனின் நண்பர்களை பார்த்து, யானையின் பிடியில் சிக்கி கொண்ட பெண்ணை காப்பாற்றுவதற்கு முடியாமல் அனைவரும் ஓடினார்கள். என் கணவன் தான் அப்பெண்ணை காப்பாற்றினார். அப்பெண்ணை காப்பாற்றியதற்கு தகுந்த மரியாதைகள் எதுவும் கொடுக்கப்படாமல், அவரை அவமதிக்கும் வழியில் மன்னன் செயல்பட்டு கொண்டிருக்கின்றான். இதை எவ்விதம் ஏற்று கொள்வது என்று கோபம் கொண்டாள்.
🌟 காந்தருவதத்தையே பொறுமை கொள்வாயாக! சீவகனை மீட்பது பற்றி தான் நாங்கள் அனைவரும் சிந்தித்து கொண்டிருக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்கொண்டு அவனை எப்படியும் சிறையிலிருந்து விடுவித்து விடுவோம் என்று கூறினார்கள் சீவகனின் நண்பர்கள்.
🌟 நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்கள் அனைத்தும் எனக்கு தெரியும். யாரையும் எதற்காகவும் தீயிலிட்டு எரிக்கவும் வேண்டாம்.. யாருடைய உயிரையும் எடுக்கவும் வேண்டாம்.. அவரை மீட்பதற்கு தேவையான மந்திரங்கள் அனைத்தும் எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் அனைவரும் பொறுமையுடன் செயல்படுவதே போதுமானது என்று கூறினாள் காந்தருவதத்தை.
🌟 அங்கிருந்த சீவகனின் நண்பர்களில் ஒருவன், உன்னுடைய மந்திரத்தின் மூலமாக சீவகன் வெளியே வந்தால் அது அவனுக்கு ஒரு பழி சொல்லாகவே அமைந்து விடும். மனைவி செய்த உதவியின் மூலமாக தானே இவன் உயிர் பிழைத்தான் என்று யாவரும் பேசி கொள்வார்கள் என்று கூறினான்.
🌟 இதை கேட்ட காந்தருவதத்தை, மற்றவர்கள் கூறும் பழி சொல்லுக்கு பயந்து அவர் என்னுடைய உதவிகளை பெறாமல், உயிர் பிழைக்காமல் போவது தான் சிறந்தது என்று நீங்கள் விரும்புகின்றீர்களா? என்றாள்.
🌟 உடனே பதுமுகன், இல்லை காந்தருவதத்தை. நாங்கள் அவ்விதம் கூறவில்லை. அன்று சீதை நினைத்திருந்தால் ராவணனை அவளுடைய சொல்லினாலே கொன்றிருக்க முடியும். ஆனால் அது ராமருடைய வில்லுக்கு இழுக்காகும் என்று அங்கு ஏற்பட்ட அனைத்து கொடுமைகளையும் பொறுத்து கொண்டிருந்தாள் அல்லவா! அதைப்போல தான் உன்னையும் பொறுமை காத்து அமைதி கொள்ள வேண்டும் என்று கூறுகின்றோம் என்று கூறினான்.
🌟 உடனே அங்கிருந்த புத்திசேனன், எதற்கு நாம் நமக்கிடையே உரையாடி கொண்டே இருக்க வேண்டும்? காந்தருவதத்தை சிறைக்கு சென்று சீவகனை பார்த்து, இங்கு நிகழ்ந்த நிகழ்வுகளை அவள் எடுத்துரைக்கட்டும். பின் சீவகன் என்ன முடிவு எடுக்கின்றான்? என்பதை நாமும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று கூறினான்.
🌟 இதுவும் நல்ல யோசனையாக தான் இருக்கின்றது. இதையே நாம் முதலில் செயல்படுத்துவோம் என்று கூறினாள் காந்தருவதத்தை.
🌟 தன்னுடைய மந்திர ஜாலத்தின் மூலமாக யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் சீவகனிருக்கும் சிறைச்சாலையை அடைந்தாள் காந்தருவதத்தை.
🌟 சிறைச்சாலையில் காந்தருவதத்தையை கண்ட சீவகன் புன்னகை பூத்த வண்ணமாக அவள் அருகில் வந்தான். இருவரும் ஒரு நொடியில் ஓருயிராக இருந்து பின்பு ஈருயிராக பிரிந்து நின்றனர்.
🌟 பின்பு சீவகனிடம் நண்பர்களுடைய திட்டத்தை பற்றியும், தன்னுடைய திட்டத்தை பற்றியும் எடுத்து கூறினாள்.
🌟 காந்தருவதத்தை மற்றும் நண்பர்களின் திட்டத்தை கேட்ட சீவகன், இந்த மதனன் மற்றும் சிறை காவலர்களை கொன்று விட்டு வெளியே வருவதற்கு எனக்கு சிறு நொடிகள் ஆகாது.
வில்லெம் ரோண்ட்கன் தென்னை மரத்தினை கனவில் கண்டால் என்ன பலன்? lasknam daily horoscope 25.06.2020 பறவை என் மீது மலம் கழிப்பது போல் கனவு 02.01.2023 history Intha varuṭa arttāṣṭama saṉi.! death parents april month horoscope in pdf format weekly rasipalan in PDF Format!! கருத்தரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஆகஸ்ட் 03 27.03.2019 Rasipalan in pdf format!! சுக்கிரன் புத்தி நடந்தால் பலன் என்ன? கோவிலில் பாடல் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 26.09.2018 Rasipalan in PDF Format!! 15.12.2018 Rasipalan in PDF Format!! வடகிழக்கு மனை வளர்த்து இருந்தால் என்ன பலன்? 11.10.2019 rasipalan in pdf format!! PDF 19.10.2018