சீவக சிந்தாமணி... மகிழ்ச்சி அடைந்த கட்டியங்காரன்… சிறைச்சாலையில் நடந்தது என்ன?
🌟 சிறையின் கதவை திறந்து பார்த்த மதனனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. உடனே அங்கிருந்த காவலாளிகளை பார்த்து, எங்கே சீவகன்? என்று கேட்டான்.
🌟 அதற்கு அங்கிருந்த காவலாளிகள், அவன் இவ்வளவு காலம் இங்கே தான் இருந்தான் என்றார்கள்.
🌟 இங்கே தான் இருந்தான் என்றால் இப்பொழுது எங்கே போனான்? என்ன வேலை பார்த்து கொண்டிருக்கின்றீர்கள்? உள்ளே இருந்தவன் எப்படி வெளியே சென்றான்? எந்த பகுதியும் உடைபடவில்லை. வெளியிலே நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களை மீறி அவன் எப்படி சென்றிருக்க முடியும்? என்று கோபத்தோடு உரையாடி கொண்டிருந்தான்.
🌟 மதனன் பேசி கொண்டிருக்க, காவலர்களோ என்ன செய்வது? என்று தெரியாமல் அவனையே பாவமாக பார்த்து கொண்டிருந்தனர்.
🌟 இன்னும் அவனை தேடாமல் என் கண்முன்னே நின்று கொண்டிருக்கின்றீர்கள்? அவன் எங்கே சென்றான்? என்று தேடுங்கள் என காவலாளிகளுக்கு கட்டளையிட்டான் மதனன்.
🌟 மதனனுக்கு கட்டியங்காரனை எண்ணி பயம் அதிகரிக்க துவங்கியது. ஒருவேளை சீவகன் சிறைச்சாலையில் இருந்து தப்பித்து விட்டான் என்ற செய்தி அவனுடைய காதுகளுக்கு எட்டினால் தான் உயிரோடு இருக்க முடியாது என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது.
🌟 இப்பொழுது என்ன செய்வது? என்று அவன் மனதில் சிந்திக்க தொடங்கினான். சீவகனை தேட சென்ற அனைத்து காவலாளிகளும் அப்பொழுது மதனனிடத்தில் வந்து, எங்கு தேடியும் சீவகன் அகப்படவில்லை என்று கூறினார்கள்.
🌟 அதுவரையிலும் என்ன செய்ய வேண்டும்? என்று சிந்தித்தவன், உடனே அருகில் இருக்கக்கூடிய கைதியை அழைத்து வரும்படி கூறினான்.
🌟 காவலாளிகளும் அருகில் இருக்கும் அறையில் உள்ள கைதியை அழைத்து வந்து மதனன் முன் நிறுத்தினர். சிறிதும் யோசிக்காமல் தன்னுடைய வாளால் அவனுடைய தலையை துண்டாக்கினான் மதனன். கீழே விழுந்தவன் முகத்தில் அடையாளம் தெரியாத அளவில் வேகமாக பல கோடுகளை போட்டு சிதைத்தான்.
🌟 அங்கிருந்த காவலாளிகளை நோக்கி இறந்த இவன் தான் சீவகன் என்றும், இவன் சீவகன் இல்லை என்று கூறுபவர்களுக்கும் இதே கதி தான் என்றும் கூறினான்.
🌟 காவலர்களும் உடனடியாக இறந்தவனை பார்த்து, அவரவர்கள் தலைதப்பினால் போதும் என்று இவன் தான் சீவகன் இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் என்று கூறினார்கள்.
🌟 சீவகன் இறந்த செய்தி கட்டியங்காரனுக்கு தெரிவிக்கப்பட்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். தனக்கென இருந்த ஒரு எதிரியும் இருக்கின்ற இடம் தெரியாமல் அழிந்து போய் விட்டான். மைத்துனன் என்றால் அது நீ மட்டும் தான் மதனா என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். பின் எனக்கு இதில் ஒரேயொரு கவலை தான் மதனா! என்றான்.
🌟 இதில் உங்களுக்கு என்ன கவலை மன்னா? எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறுங்கள் என்று மதனன் கேட்டான்.
🌟 கடைசியாக நம்முடைய எதிரியின் முகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற கவலை தான் மதனா என்றான் கட்டியங்காரன்.
🌟 இல்லை மன்னா, நீங்கள் அவன் முகத்தை பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நீங்கள் பார்ப்பதற்கு முன்னால் அவன் உயிரை எடுத்து விட்டேன் என்று கூறினான் மதனன்.
சூரியன் ராசமாபுரம் sunday rasipalan முட்டைகளை கனவில் கண்டால் என்ன பலன்? இந்த வருஷ மேஷ ராசிபலன்.! sweets ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாத செயல்கள் எவை?< மீன்கள் அமாவாசை அன்று குலதெய்வ கோவிலுக்கு போகலாமா? மார்கழியில் நிச்சயதார்த்தம் செய்யலாமா? சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 25.10.2018 rasipalan in PDF kanni kaannvu மார்ச் 03 சந்திர கிரகணம் அன்று வாஸ்து நாளும் வந்தால் அன்று வாஸ்து செய்யலாமா? தினசரி ராசிபலன்கள் (22.04.2020) காரணம் அறிதல் rajanagam சிறுத்தொண்ட நாயனார்