சீவக சிந்தாமணி... சீவகனின் இரண்டாவது திருமணத்திற்கு அவன் தந்தை ஒப்புகொண்டாரா..!!
🌟 பருவ வயதிற்கு உண்டான ஆசைகள் அவளிடத்தில் வெளிப்பட துவங்கி விட்டது. அவளுடைய மனதை கள்வன் ஒருவன் கவர்ந்து விட்டான் என்று என்னிடமே கூறுகிறாள்.
🌟 அட இவ்வளவு தானே. எவ்வளவு மகிழ்ச்சியான விஷயத்தை இவ்வளவு சோர்வாக கூறுகிறாய். யார் அந்த அதிர்ஷ்டசாலி? குபேரமித்திரன் பெண்ணை மணந்து கொள்ள போகும் பாக்கியசாலி யார்? எந்த இளைஞனுக்கு கொடுத்து வைத்திருக்கின்றது இந்த பாக்கியம் என்றார்.
🌟 கொடுத்து வைத்தது குணமாலையா? அல்லது மணந்து கொள்ளக்கூடிய வாலிபனா? என்று தான் தெரியவில்லை. ஏனென்றால் வாலிபனை பற்றி விசாரிக்கையில் அவன் குணமாலையை விட சிறந்தவனாக இருக்கின்றான் என்று கூறுகின்றார்கள் என்றார்.
🌟 யார் அந்த வாலிபன்? ஏன் இவ்வளவு பொடி வைத்து பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள்? பெயரை சொல்லும் குபேரமித்திரா? நானும் தெரிந்து கொள்வேன் அல்லவா!
🌟 உங்களுக்கும் தெரிந்த நபர்தான். புதிய நபர் ஒருவரும் இல்லை என்றான்.
🌟 எனக்கு தெரிந்த நபரா! ஆச்சரியமாக இருக்கின்றதே என்னிடத்தில் யாரும் இதை கூறவில்லையே... யார் அந்த வாலிபன்? என்றார் கந்துக்கடன்.
🌟 வேறு யாரும் இல்லை. உங்கள் மகன் சீவகன் தான் என்று கூறினான் குபேரமித்திரன்.
🌟 குபேரமித்திரனின் கூற்றுக்களை கேட்டதும் கந்துக்கடன் மிகவும் ஆச்சரியம் கொண்டான். உங்கள் வீட்டு சம்பந்தம் கிடைப்பது பாக்கியமாக இருந்தாலும் சீவகனுக்கு இதில் விருப்பம் இருக்கிறதா? என்பதை நான் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா! அப்பொழுது தானே நான் உங்களுக்கு தெளிவான முடிவை கூற முடியும்.
🌟 அப்படி என்றால் உடனே சீவகனிடம் கேளுங்கள் என்று குபேரமித்திரன் கூறினார்.
🌟 அவர்கள் இருவரும் உரையாடி கொண்டிருந்த பொழுது சற்றும் எதிர்பாராத விதமாக சீவகன் அவ்விடத்திற்கு வருகை தந்தான்.
🌟 கந்துக்கடனோ தனது மகனான சீவகனிடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை பற்றி கூறி இதில் உன்னுடைய விருப்பம் என்ன? என்பதை பற்றி வினவினார்.
🌟 சீவகனுக்கு மனதில் ஆசைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் பெரியோர்கள் விருப்பம் என்னவோ அதற்கு அடிபணிந்து செயல்படுகின்றேன் என்று கூறினான்.
🌟 கந்துக்கடனுக்கோ என்ன சொல்வது என்று புரியாமல் அவ்விடத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.
🌟 சீவகனின் கூற்றை கேட்டது குபேரமித்திரன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். பிறகு என்ன கந்துக்கடனே இனிமேல் நாம் இருவரும் சம்மந்திகளாவோம்... மிக்க மகிழ்ச்சி. வந்த காரியம் இனிதே நிறைவேறியது. இனிமேல் திருமணத்திற்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டியது தான் என்று கூறினார் குபேரமித்திரன்.
🌟 சீவகனுக்கு திருமணம் என்ற செய்தி ஊர் முழுவதும் காட்டு தீ போல பரவியது. ஒவ்வொருவரும் சீவகனை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
🌟 ஊரிலிருந்த மற்ற இளைஞர்களுக்கு சீவகனின் மீது மிகுந்த பொறாமையும், கோபமும் தோன்றிய வண்ணமாக இருந்தது. சீவகனுக்கு யாருக்கும் தெரியாமல் அதிர்ஷ்டமான மச்சம் இருக்குமோ என்னவோ, அவன் முதல் மனைவியான காந்தருவதத்தையோ பேரழகியாக இருக்கின்றாள், இப்பொழுது திருமணம் செய்ய போகின்றவளோ அழகில் சிறந்தவளாக இருக்கின்றாள் என்று அனைவரும் புகழ்ந்த வண்ணமாக பேசிக் கொண்டிருந்தனர்.
தடுப்பூசி தினம் சந்திர திசை நடந்தால் என்ன பலன்? காவலர் துரத்துவது போல் கனவு கண்டால் மஞ்சள் 2023 மேஷ ராசி பலன்கள்.! சந்திரன் மற்றும் குரு இணைந்திருந்தால் என்ன பலன்? april 10 8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்? கார்த்திகை நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு காலம் எவ்வளவு காலம்? அக்டோபர் 15 தேவேந்திரன் பிரம்ம தேவரை காணுதல் மனைவியின் கர்ப்பக்காலத்தில் வீட்டை மாற்றலாமா? நரேந்திர மோடி santhiran PACHI டிசம்பர் 27 துணி கடக லக்னம் உடையவர்கள் என்ன தொழில் செய்யலாம்? வழிபடுதல் Sunday Horoscope - 29.07.2018