சீவக சிந்தாமணி... திருமணத்தை நிறுத்த திட்டம் தீட்டிய கட்டியங்காரன்..!!
🌟 குணமாலைக்கும், சீவகனுக்கும் திருமணம் நடைபெற போகின்றது என்ற செய்தி, கட்டியங்காரனின் செவிகளுக்கு எட்டியதும் இந்த திருமணத்தை எவ்விதத்தில் தடுத்து நிறுத்துவது? என்று சிந்தித்தான்.
🌟 ஏற்கனவே மணம் முடித்தவன் மீண்டும் மணம் முடித்தால் அவனுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று எண்ணினான். இருந்தாலும் அந்த எண்ணம் கட்டியங்காரனுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் வண்ணமாகவே இருந்தது. ஏனென்றால், அந்தப்புரத்தில் பல பெண்கள் இருந்தனர்.
🌟 இவன் நாளுக்கு நாள் நம்மை விட மக்களிடத்தில் பிரபலமாக வளர்ந்து கொண்டே வருகின்றான். இவனை எவ்விதத்திலாவது அழித்தே தீர வேண்டும்! என்று அவனுடைய சிந்தனைகள் சீவகனை பற்றியே இருந்தது.
🌟 சீவகன் காந்தருவதத்தையை மணந்த போது என்னால் எதையும் தடுக்க முடியாமல் போய்விட்டது என்றும், இனியும் அவனை இப்படியே விடக்கூடாது என்றும் எண்ணினான்.
🌟 குபேரமித்திரனின் மகளான குணமாலை தெருவில் நடந்து வந்தாலே, அவளை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் அங்கு அலைமோதும் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அவ்வளவு லாவண்யம் நிறைந்த குணமாலையை இவன் திருமணம் செய்து கொள்ள போகின்றான் என்பதை என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. இவனை இப்படியே விடக்கூடாது. இவன் மீது ஏதாவது பழி சுமற்றி இவனை சிறைப்படுத்த வேண்டும் என்று எண்ணினான். அதற்கான வாய்ப்பும் அவனுக்கு கிடைக்க துவங்கியது.
🌟 திருமணத்திற்கான ஏற்பாடுகள் யாவும் நன்முறையில் நடைபெற்று கொண்டிருந்தன. சீவகனும், குணமாலையும் தங்கள் திருமணத்திற்கான நாட்களை எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
🌟 சீவகன் தனது தாயிடம், இப்பொழுது நடைபெறும் இந்த திருமணத்தினால் தன் மனைவியான காந்தருவதத்தைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் உண்டாகக்கூடாது, ஒருவேளை பாதிப்புகள் உண்டாவதை அறிந்தால் மூவரின் திருமண வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகி விடும் என்றும் கூறினான்.
🌟 சீவகனின் கூற்றுக்களுக்கு அவனுடைய தாயான சுநந்தை, சமையல் அறையில் இருந்த வண்ணமாக காந்தருவதத்தைக்கு இந்த திருமணத்தால் எந்தவிதமான பாதிப்புகளும் உண்டாகாது என்று வாக்குறுதி அளித்தார். அதன் பின்பே சீவகனும் (மனதில் குணமாலையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தும்) பெற்றோர்களின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தான்.
🌟 ஒருபுறம் சீவகன் தன் தாயிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, மறுபுறம் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பும், காரணமும் கட்டியங்காரனுக்கு கிடைத்தது.
🌟 மனதளவில் கோபமும் என்ன செய்வது? என்று தெரியாமல் அரண்மனையில் உலாவி கொண்டிருந்த பொழுது காவலன் ஒருவன் வந்து, மன்னா! தங்களை பார்க்க யானை கூடத்தில் இருந்து பாகன்கள் வந்திருக்கின்றார்கள் என்று கூறினான்.
🌟 காலம் நேரம் தெரியாமல் தான் இவர்கள் என்னை பார்க்க வருவார்கள் என்று கடிந்து கொண்டு, அவர்களை சிறிது நேரம் கழித்து வந்து என்னை பார்க்க சொல் என்று கட்டியங்காரன் கூறினான்.
🌟 மன்னனின் கூற்றுக்களை கேட்டு கொண்ட காவலன், யானை பாகன்களிடம் சென்று மன்னன் கூறியதை கூறினான். அவர்களும் வேறு வழியின்றி சிறிது நேரம் மன்னரை பார்ப்பதற்காக காத்து கொண்டிருந்தனர்.
🌟 இந்த குணமாலையை இவன் திருமணம் செய்வதை எப்படி தடுப்பது? என்று சிந்தித்த வண்ணமாக இருக்க, அவ்விடத்தில் யானை பாகன்கள் சிலர் காத்து கொண்டிருந்ததை பார்த்து, யார் அங்கே? நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கட்டியங்காரன் வினவினான்.
🌟 அங்கு இருந்தவர்கள், மன்னா! நாங்கள் யானை பாகன்கள் என்று கூறினார்கள். அப்பொழுது தான் கட்டியங்காரனுக்கு காவலன் கூறியது நினைவுக்கு வந்தது. பின் அவர்களை பார்த்து என்ன செய்தி? என்று கேட்டான்.
🌟 அதற்கு யானை பாகன்கள், அசனி வேகம் (சீவகன் அடக்கிய மதம் பிடித்த யானையின் பெயர்) என்ற யானை உணவு உட்கொள்ள மறுக்கின்றது என்று கூறினார்கள்.
🌟 யானை உணவு உட்கொள்ளவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? அதற்கு தானே நீங்கள் அனைவரும் இருக்கின்றீர்கள் என்று கட்டியங்காரன் கடிந்து கூறினான்.
🌟 யானை பாகன்களோ, மன்னா! நாங்கள் பலமுறை முயற்சி செய்து பார்த்து விட்டோம். எவ்வளவு முயற்சி செய்தாலும் யானை கொஞ்சம் கூட உணவு உண்ணவில்லை என்று கூறினார்கள்.
🌟 கரும்பை கொஞ்சம் அதிகம் கொண்டு வந்து போட்டு பாருங்கள் என்று மன்னன் கூற, பாகன்களோ மன்னா கரும்பையும் அதிகம் கொண்டு வந்து போட்டு பார்த்தோம், யானை அதையும் உண்ணவில்லை என்றார்கள்.
கேது பகவான் சுரமஞ்சரி 29.04.2019 Rasipalan in pdf format!! Sunday rasipalan மணமக்களின் நட்சத்திரங்கள் இருக்கும் நாட்களில் திருமணம் செய்யலாமா? 11ல் சூரியன் இருந்தால் என்ன பலன்? அசைவ விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ராகு இங்கு இருந்தால்... குடும்பத்தின் மீது பாசத்தை அள்ளிக் கொட்டுவார்கள்...! லக்னத்தில் குருவுடன் விந்திய நாட்டு மன்னன் நாரதரை உபசரித்தல் பாதச்சனி.! jothider ஜார்ஜ் ஸ்டீபன்சன் சந்திரனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்? இறந்தவர்களை கனவில் வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறக்கலாமா சர்வதேச ஆண்கள் தினம் ராசமாபுரத்திற்கு சென்ற சீவகன் tattoo weekly rasipalan 24.02.2020-01.03.2020 in pdf format