No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - கன்னிமாடத்திற்கு சென்ற குணமாலை..!!

Feb 28, 2023   Ramya   166    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... கன்னிமாடத்திற்கு சென்ற குணமாலை..!!

🌟 நீங்கள் பதற்றம் அடைகின்ற அளவுக்கு அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. அன்று நடந்த உங்களுடைய சிறு விளையாட்டுத்தனமான போட்டியில் சீவகன் ஒரு தீர்ப்பை சொன்னார் அல்லவா? அதில் இருந்துதான் இந்த பிரச்சனையே ஆரம்பம்.

🌟 அந்த பிரச்சனை தான் அன்றே முடிந்து விட்டதே! திரும்ப அதனால் என்ன நிகழ்ந்தது? என்று எனக்கு தெளிவாக கூறு என்றாள் குணமாலை.

🌟 நான் என்ன சொல்வது? நீங்களே இங்கு நிகழ்வதை வந்து பாருங்கள் என்று கூறி அவளை அழைத்து சென்றாள். வாயில் கதவை கடக்கும் பொழுது தான் பார்த்தாள். அந்த வாயிலை பாதுகாக்கக்கூடிய காவலர்கள் கூட ஆண்கள் இல்லாமல் பெண்களாகவே நியமிக்கப்பட்டு இருந்தனர்.

🌟 சுரமஞ்சரி தங்கி இருந்த வீட்டிற்கு சென்றதும் அவளுக்கு அந்த இடமே புதிதாக காணப்பட்டது. அனைத்தும் புதிதாகவே இருந்தன. இதற்கு முன்பு ஒருமுறை இவ்விடத்திற்கு வந்த பொழுது, நுழைவாயிலில் ஒரு ஆணின் சிலையும், ஒரு பெண்ணின் சிலையும் இருந்தது. ஆனால் இப்பொழுது இரு சிலைகளும் பெண் சிலைகளாகவே இருக்கின்றது. இது என்ன புது சிலைகளை வாங்கி வைத்திருக்கின்றீர்களா? என்று குணமாலை வினவினாள்.

🌟 புதிய சிலைகள் எதுவும் வாங்கவில்லை. அதை நன்றாக பாருங்கள் ஆண் சிலையே இப்பொழுது பெண் சிலையாக மாற்றப்பட்டு இருக்கின்றது என்று கூறினாள்.

🌟 இன்னும் எதிலெல்லாம் மாற்றங்களை செய்து வைத்திருக்கின்றீர்களோ? என்று கூறிய வண்ணம் சுரமஞ்சரி இருக்கும் இடத்திற்கு குணமாலை சென்றாள்.

🌟 குணமாலை சுரமஞ்சரியை பார்க்க வந்த பொழுது, அவ்வளவு பெரிய வீட்டில் சுரமஞ்சரி மட்டும் தன்னந்தனியாக எதையோ சிந்தித்த வண்ணமாக, வாழ்க்கையில் இழக்கக்கூடாததை இழந்துவிட்டது போல வெறுமையுடன் அமர்ந்திருந்தாள். அப்பொழுது யாரோ வருவது போல சத்தத்தை கேட்டு திரும்பி பார்க்க குணமாலை அவளின் அருகில் வந்து கொண்டிருந்தாள்.

🌟 சுரமஞ்சரி குணமாலையை பார்த்ததும் உன்னை யார் இங்கு வர சொன்னது? உன்னை நான் பார்க்க விரும்பவில்லை? நீ இவ்விடத்திலிருந்து விரைவாக சென்றுவிடு என்று மிகுந்த கோபத்தோடு கூறினாள்.

🌟 சுரமஞ்சரி உனக்கு என்ன தான் ஆயிற்று? ஏன் இப்படி யாரும் இல்லாமல் தனியாக இருக்கின்றாய்? கூட்டம் நிறைந்திருக்கக்கூடிய தெருவே இப்படி வெறிச்சோடி இருக்கின்றதே? எதற்காக இப்படி செய்தாய்? என்று குணமாலை கேட்டாள்.

🌟 ஏதும் அறியாத சிறு குழந்தை போல் என்னிடம் கேட்காதே! சீவகனை உன்னுடைய எண்ணத்திற்கு தகுந்தாற் போல மாற்றி, உன்னுடைய சுண்ணம் தான் சிறந்தது என்றும், என்னுடைய சுண்ணம் தரம் கெட்டது என்றும் சொல்ல வைத்து விட்டாய். என் மனம் எவ்வளவு பாடுபடுகின்றது என்பது உமக்கு புரியுமா? புரிந்திருந்தால் இதை செய்து தான் இருப்பாயா? என்றாள் சுரமஞ்சரி.

🌟 என்னது நான் சீவகனை என்னுடைய விருப்பத்திற்கு தகுந்த விதத்தில் மாற்றி விட்டேன் என்று கூறுகிறாயா? இது உனக்கே அபாண்டமாக இல்லையா? என்று குணமாலை கேட்க,


🌟 இறுதியாக கூறுகிறேன் குணமாலை தெளிவாக கேட்டுக்கொள். நான் அந்த சீவகனை தவிர வேறு எந்த ஆண்மகனையும் பார்க்கவும் மாட்டேன்! மணக்கவும் மாட்டேன்! என்றாள் சுரமஞ்சரி.

🌟 ஏன்? எதற்கு இவ்வளவு கோபம் கொள்கிறாய் சுரமஞ்சரி? கோபம் அளவுக்கு அதிகமானால் இழப்பும் அதைவிட அதிகமாகும் என்பது உமக்கு தெரியும் அல்லவா! இது தெரிந்தும் இந்த தவறை நீ செய்யலாமா? இந்த கோபத்தை விட்டுவிடு என்றாள் குணமாலை.

🌟 என்னுடைய கோபம் உன்னுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையை அழித்துவிடும் என்று பயம் கொள்கின்றாயா? இனியும் என் முன் நிற்காதே! இப்பொழுதே இவ்விடத்தை விட்டு செல்வது தான் உமக்கு நல்லது என்று கூறி முகத்தை திருப்பி கொண்டாள் சுரமஞ்சரி.

🌟 அதற்கு மேல் சுரமஞ்சரியிடம் உரையாட குணமாலையும் விருப்பம் கொள்ளவில்லை. அவளுடைய கூற்றுக்கள் அனைத்தும் குணமாலைக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தின.

🌟 ஒரு சாதாரண சுண்ணம் அவளுக்கு இவ்வளவு துன்பத்தை அளித்து விட்டதே! அதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கின்றேனே! என்று எண்ணும் பொழுதே அவள் விழிகளில் கண்ணீர் துளிகள் அதிகரித்த வண்ணம் இருந்தது.

🌟 குணமாலையால் அதற்கு மேல் அவள் தோழியை இவ்வாறு பார்க்க முடியவில்லை. இதற்கு ஏதேனும் மாற்று வழியை செய்து இவளை இவ்விடத்திலிருந்து வெளிக்கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய வண்ணமாக அவ்விடத்திலிருந்து விடை பெற விருப்பம் இல்லாமல் விடை பெற்றாள்.


Share this valuable content with your friends