No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனின் மீது காதல் கொண்ட குணமாலை..!!

Feb 28, 2023   Ramya   211    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனின் மீது காதல் கொண்ட குணமாலை..!!

🌟 குணமாலை கூறியதை கேட்ட சுரமஞ்சரியோ, எனக்காக நீ காதலிக்கிறாயா? இன்னும் எங்களிடத்தில் நீ உன்னை மறைத்து கொண்டுதான் இருக்கின்றாயா? அவன் மீது உனக்கு ஆசை இருக்கின்றது என்பது எனக்கு தெரியும். ஏழு நாட்கள் யாழிசை போட்டி நடந்தது. ஆனால் ஏழாம் நாள் மட்டும் நீ அங்கு வந்தாய். அவன் வந்ததும் ஏழாவது நாளே. அவன் பாடியதும் ஏழாவது நாளே.

🌟 காந்தருவதத்தை பாடிய பொழுது உன்னுடைய கை கால்களில் எந்தவித இயக்கமும் இல்லாமல் அமைதியாக தான் இருந்தாய். ஆனால் அவன் பாடும் பொழுது மட்டும் உன் கைகள் தாளம் தட்டியது. உன் உடலும் அசைந்தது. அந்த போட்டியில் சீவகன் வென்று, காந்தருவதத்தை அவன் மீது மாலை அணிவித்த பொழுது நீயோ எதையோ இழந்தது போல மிகுந்த மௌனத்தோடு இருந்தாயே! ஏன் உன்னுடைய இலக்கு தவறிவிட்டது என்றா? என்று சுரமஞ்சரி கூறினாள்.

🌟 சுரமஞ்சரி யாழிசை போட்டி அன்று குணமாலையின் செயலை பற்றி கூறி கொண்டிருக்க, குணமாலையின் உள்ளத்தில் அந்த வசைகள் அனைத்தும் சீவகனின் மீது காதலை உருவாக்க வைத்தது. நிச்சயம் தனக்கொரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவளும் என்ன துவங்கினாள். தனக்கு சீவகன் கிடைப்பான் என எண்ணி பார்க்காத குணமாலை, மனதில் இருக்கும் ஆசைகளை வெளிக்காட்டாமல் கோபத்தோடு இருந்தாள். ஆனால் மனதில் தன்னிடத்தில் இப்படி ஒரு ஆசையை உருவாக்கிய சுரமஞ்சரியை மனதார வாழ்த்தினாள்.

🌟 சுரமஞ்சரியோ, காதலில் தோல்வியுற்றவர் சரண் அடையும் சரணாலயம் ஆகிய கன்னிமாடத்தில் தனிமையில் இருக்க விரும்பினாள். தன் தந்தையிடம் சொல்லி தனக்கென்று ஏன் ஒரு கன்னிமாடம் கட்டி தர சொல்லக்கூடாது என்று துணிந்தாள். அவனை நெஞ்சில் வைத்து வழிபட அது ஒரு ஆலயமாக அமையும் என்று கருதினாள். அதுமட்டுமின்றி தன்னைப் போல் அடிபட்டு முடம்பட்டுப் போன இளஞ்சிட்டுகள் வந்து தங்குவதற்கு அது ஒரு கூடாக அமையுமே என்றும் நினைத்தாள்.

🌟 நீராடி வர ஒற்றுமையாக சென்றவர்கள் தனியாக திரும்பி வருகின்றாள். இருவரில் ஒருத்தி மட்டும் வருவதை கண்ட அவளுடைய தாய் மற்றொருத்தி எங்கே? என்று வினவினாள்.

🌟 தாயின் கேள்விக்கு சுரமஞ்சரி நேற்றுவரை இருந்த உறவு இன்றுவரை நீடிக்கவில்லை என்றாள். என்ன சொல்கிறாய்? என்ன நடந்தது இருவருக்கும் இடையில்? என்றாள் அவளின் தாய்.

🌟 சுண்ணத்தின் காரணமாக இருவருக்கும் இடையே எண்ணம் வேறுபட்டன என்று சுரமஞ்சரியின் சேடி பெண்கள் விளக்கினர்.

🌟 அவளுக்கு முகமூடி ஏன் என்று சுரமஞ்சரியின் தாய் கேட்க, மற்றவர்கள் யாரும் தன் முகத்தை பார்க்கக்கூடாது! தான் மட்டும் இரண்டு துளைகள் கண்ணுக்கு வைத்துக்கொண்டு மற்றவர்களை பார்க்க போகிறாளாம் என்று சேடி பெண்கள் கூறினார்கள்.

🌟 கன்னிமாடம் ஒன்று தனக்காக கட்டி தரவேண்டும். அன்னியர்கள் யாரும் அங்கே வரக்கூடாது என்று சுரமஞ்சரி கூறினாள்.

🌟 கட்டி கொடுக்க வேண்டியவள் நீ அங்கே ஒட்டி கொண்டிருந்தால் எப்படி? என அவளின் தாய் கேட்க, என்னை கொஞ்சம் அழவிடு. அழுவதற்கு ஒரு இடம் வேண்டும். அதற்குத்தான் நான் தனி இடம் கேட்கிறேன் என்றாள்.

🌟 சிரிப்பதற்கு இடம் கிடைக்கும் வரை சீராக சுரமஞ்சரி அங்கேயே இருக்கட்டும் என்று அவள் மனப்போக்கின் படி அவள் தாய் விட்டு விட்டாள்.

🌟 அதுமட்டும் அல்லாமல் அந்த தெருவழியே ஆடவர்கள் யாரும் வரக்கூடாது என்றும், இதை அரசரிடம் சொல்லி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் சுரமஞ்சரி கூறினாள்.


🌟 சுரமஞ்சரியின் தந்தையும் அவள் சொல்லிற்கு இணங்க, கட்டி தங்கத்தை கொண்டு போய் கட்டியங்காரனுக்கு கொடுத்து அவ்வாறே அனுமதி வாங்கினார்.

🌟 ஆண்கள் யாரும் இந்த தெருவின் பக்கம் வரக்கூடாது என்று ஒரு பலகையும் மாட்டி வைக்கப்பட்டது. அது மிகப்பழைய கட்டிடம். அங்கே இரண்டு சிற்பங்கள் இருந்தன. ஒன்று கிழக்கு பார்த்தவாறும், மற்றொன்று மேற்கு பார்த்தவாறும் இருந்தன. இது ஆண், இது பெண் என்று அவளின் தோழி வேறுபடுத்தி காட்டினாள்.

🌟 சிற்பங்களில் கூட ஆண் சிற்பம் இருக்கக்கூடாது. இவற்றை அகற்றி விட்டு ஒரு பெண் சிலையை இங்கே வை என்றாள். முடியாது என்றால் இந்த சிலையை பெண் சிலையாக மாற்றி விடு என்றாள் சுரமஞ்சரி.

🌟 அகன்று இருந்த குபேரதத்தன் தெருவில் ஒருவர் மட்டும் செல்லும் வகையில் நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தெருவின் வாயில் இந்த மாதிரி மாற்றப்பட்டு இருப்பதை கண்டதும் குணமாலை ஆச்சரியமடைந்தாள். அவள் அவ்வாயிலை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் சுரமஞ்சரியின் சேடி பெண் வந்து கொண்டிருந்ததை கண்டாள்.

🌟 அவளிடம் சென்று, இங்கு என்ன ஆயிற்று? ஏன் தெருவை அடைத்து வைத்திருக்கின்றார்கள்? இந்த தெருவில் இருப்பவர்களுக்கு யாருக்கேனும் உடல்நிலை சரியில்லையா? அல்லது ஏதேனும் நிகழ்ந்து விட்டதா? என்றாள் குணமாலை.

🌟 இந்த தெருவில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இதற்கெல்லாம் காரணம் உங்களுடைய தோழியான சுரமஞ்சரி தான். அவளுக்கு என்ன? அவள் நன்றாக தானே இருக்கின்றாள்? உடல்நிலை ஏதாவது சரியில்லையா? என்று பதற்றம் அடைந்தாள் குணமாலை.


Share this valuable content with your friends