கேள்வி :
🏡நான் சொந்தமாக வீடு கட்ட ஒரு மனை வாங்க இருக்கிறேன். நான் எப்படிப்பட்ட மனையை தேர்வு செய்ய வேண்டும்.
பதில் :
🏡சராசரி மனிதனின் வாழ்நாள் கனவே 'சொந்தமாக வீடு' கட்டி அதில் வசிக்க வேண்டும் என்பதே. அதுவே வாழ்நாள் லட்சியமாக உள்ளது. அதற்காகவே தனது பெரும் பகுதி வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான்.
🏡எல்லா நிலங்களிலும் விவசாயம் செய்ய முடியாது. அதுபோல எல்லா மனையும் வீடு கட்டி வசிப்பதற்கு ஏற்ற மனை அல்ல.
🏡பல நிறுவனங்கள் தங்களது மனையை விற்பனை செய்ய பெரிய பள்ளிக்கு அருகில், மருத்துவமனைக்கு மிக அருகில், பேருந்து நிலையம் பக்கத்தில் என்பதை மட்டுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி விளம்பரம் செய்கின்றனர். இது மக்கள் மனதில் பதிந்து உள்ளது.
🏡மக்களுக்கு குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரியை தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனம் வீடு கட்டும் மனையை தேர்ந்தெடுப்பதில் இருப்பது இல்லை.
கவனிக்க வேண்டிய விஷயங்கள் :
1. மலைகள், குன்றுகள், கோவில், செல்போன் டவர், ஓடை, ஆறு, கிணறு, உயரமான மரங்கள், பொது குளம், பாலம், பள்ளிக்கூடம், பூங்கா, பொது போர், பெரிய கட்டிடங்கள், கல்லூரி, ரயில்வே தண்டவாளம், மின்மயானம், காவல் நிலையம் போன்றவை நாம் வாங்கும் இடத்திற்கு அருகில் வரலாமா?.... வருவதாய் இருந்தால் எந்த திசையில் வர வேண்டும்? எந்த திசையில் வரக்கூடாது? எவற்றின் அருகே நாம் குடியிருக்கக்கூடாது?
2. சாலை தெரு, மனைக்கு எந்த பக்கம் வருகிறது?
3. தெருக்குத்து அல்லது தெருப்பார்வை மனைக்கு இருக்கின்றதா?
4. பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மனைக்கு நல்ல விளைவுகளை கொடுக்குமா?
5. மனையின் வடிவத்தை கவனிக்க வேண்டுமா?
🏡இதுபோன்ற பல நுணுக்கங்களை ஆராய்ந்து தெளிந்த பின்னரே இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
இடத்தை தேர்வு செய்வதில் வாஸ்து நிபுணர்களின் பங்கு :
🏡ஒரு இடத்தை பார்த்து அங்கு வாழப்போகும் மக்கள் எப்படி இருப்பார்கள்? அந்த இடம் எந்த வகை தொழில் செய்வோருக்கு உகந்தது? எந்த குணநலன்கள் உடையவர்கள் அவ்விடத்தில் வாழலாம்? என்பனவற்றை அனுபவமிக்க வாஸ்து நிபுணரால் மட்டுமே கூற முடியும்.
🏡தெருக்குத்து, தெருப்பார்வை ஒரு மனை தேர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. அனுபவமிக்க வாஸ்து நிபுணரால் இதை கண்டுபிடித்து சொல்ல முடியும்.
🏡வாஸ்து நிபுணரின் ஆலோசனையின்படி மனையை தேர்வு செய்வதில் கவனம் கொண்டு சிறந்ததொரு வாஸ்து பலம் கொண்ட வீட்டை கட்டி சிறப்பான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.