பணம் தேவையில்லாமல் செலவாகாமல் இருக்க இதை செய்யுங்கள்...!!
💰 பொதுவாக வீட்டில் நான்கு பேர் இருந்தாலும், ஐந்து பேர் இருந்தாலும் அப்பா மட்டுமே வேலைக்கு சென்று வருவார்.
💰 ஆனால் இந்த காலகட்டத்தில் அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என வீட்டில் இருக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை வேலைக்கு செல்கின்றனர்.
💰 இப்படி பெறப்படும் பணத்தை சேமிக்க முடியாமல் செலவாகிறது என்ற கவலை அனைவருக்கும் உண்டு.
💰 இனியும் பணம் தேவையில்லாமல் விரயம் ஆவதை தடுக்க ஒரு சிறந்த பரிகாரத்தை பார்க்கலாம் வாங்க.
பணம் தேவையில்லாமல் விரயம் ஆவதை தடுக்க என்ன செய்வது?💰 பணம் தேவையில்லாமல் விரயம் ஆவதை தடுப்பதற்கு பரிகாரம் செய்ய நல்ல நாள் அல்லது புதன், வியாழன் போன்ற நாட்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
💰 தேர்ந்தெடுத்த நாளின் நல்ல நேரத்தில் பணம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு உங்கள் கையால் ஒரு சிறிய தொகையை தானமாக கொடுக்க வேண்டும்.
💰 இந்த பரிகாரத்திற்கு பணத்தை தான் தானமாக கொடுக்க வேண்டும். ஏனென்றால் பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்காக தான் இதை செய்கிறோம்.
💰 எனவே பணத்தை மட்டும் தான் கொடுக்க வேண்டும் வேறு எந்த பொருளையும் வாங்கிக் கொடுக்கக்கூடாது.
💰 அதே நாளில் வாழ்க்கையில் நியாயமாக நடப்பவர்கள், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்படி தான் வாழ வேண்டும் என்று நேர்மையுடன் இருப்பவர்கள், இப்படி நல்லவர்கள் என்று உங்கள் மனதிற்கு யார் தோன்றுகிறார்களோ அவர்கள் கையால் சிறு தொகையை நீங்கள் தானமாக பெற வேண்டும்.
💰 இப்படி யாரும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் சிவயோகிகள், சித்தர்கள் போன்றவர்கள் இடத்தில் இருந்து பெறலாம்.
💰 பணம் என்றால் பெரியதாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை ஒரு ரூபாயாக இருந்தால் கூட போதும்.
💰 இந்த பரிகாரத்தை நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமாலும் செய்யலாம். நீங்கள் கொடுப்பதும் சரி வாங்குவதும் சரி உங்களுக்கு தோன்றும் பொழுது செய்யலாம் ஆனால் கொடுத்து வாங்கும் நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் நேரம் நல்ல நேரமாக இருக்க வேண்டும்.
பலன்கள்:💰 இந்த பரிகாரத்தை நாம் தொடர்ந்து செய்யும் போது நம்மையும் அறியாமல் வீணாக பணத்தை செலவு செய்வது குறையும்.
💰 பணம் வீணாக செலவாகவில்லை என்றால் பணம் சேர்கிறது என்று தான் அர்த்தம். பணத்தை சேமிக்கும் எண்ணமும் நம் மனதில் தோன்ற ஆரம்பிக்கும்.
💰 கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை நல்ல முறையில் செலவழித்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்வோம்.