No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - குணமாலையும் சுரமஞ்சரியும்.. இவர்களில் யார் சிறந்தவர்?

Feb 24, 2023   Ramya   124    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... குணமாலையும் சுரமஞ்சரியும்.. இவர்களில் யார் சிறந்தவர்?

🌟 ஓ.. அவ்வளவு அற்புதம் நிறைந்ததா உமது பொடி? என்னிடத்தில் இருக்கும் பொடியை விட உன்னிடத்தில் இருக்கும் பொடி அவ்வளவு சிறப்பு வாய்ந்ததா? வாய்ப்புகளே இல்லை. நான் வைத்திருக்கும் பொடிக்கு உன்னுடைய பொடி ஈடாகவே முடியாது? என சுரமஞ்சரி கூறினாள்.

🌟 அதற்கு குணமாலையோ, இல்லை... சுரமஞ்சரி நீ வைத்திருக்கும் பொடியை விட நான் தயாரித்திருக்கும் பொடி மிகவும் அற்புதமானது. ஒரு வேலை தேவர்கள் தயாரித்திருந்து அவர்கள் என்னிடத்தில் போட்டிக்கு வந்தாலும் அவர்களை விட என்னுடையதே சிறந்தது என்று தேவர்களே கூறுவார்கள். தேவர்களே என்னிடத்தில் போட்டிக்கு வர மாட்டார்கள் என்று இயல்பாக கூறினாள்.


🌟 அப்படியானால் என்னிடத்தில் போட்டிக்கு வருகிறாயா? யாருடைய பொடி உயர்ந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்? என்று கூறினாள் சுரமஞ்சரி. போட்டி எல்லாம் நமக்குள் எதற்கு? என்றாள் குணமாலை.

🌟 இதை பேசுவதற்கு முன்பாகவே நீ சிந்தித்திருக்க வேண்டும். இப்பொழுது போட்டியெல்லாம் வேண்டாம் என்றால் உன்னுடைய பொடியானது என்னிடத்தில் இருக்கும் பொடியை விட குறைவான சிறப்பு உடையது தான் என்பதை ஒத்துக் கொள்கிறாயா? என்று கன்னம் சிவக்க பேசினாள் சுரமஞ்சரி.

🌟 இவர்கள் இருவரும் பேசி கொண்டிருப்பது பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்பதை புரிந்து கொண்ட அவர்களுடைய மற்ற தோழியர்கள் இந்த போட்டியை தவிர்க்க உரையாடினார்கள். இருப்பினும் எவ்விதமான பயனும் அவர்களிடத்தில் ஏற்படவில்லை.

🌟 முடியவே முடியாது உன்னுடைய ஆணவத்தை இதிலேயே நான் அடக்கி விடுகிறேன் என்று கூறி, யார் போட்டியில் தோற்கின்றார்களோ அவர்கள் இந்த அருவியில் குளிக்கவே கூடாது என்றும், இவ்வூரில் உள்ள அருகனுகன் கோவிலுக்கு கோடி தங்க நாணயங்களை கொடுக்க வேண்டும் என்றும் சுரமஞ்சரி கூறினாள்.

🌟 குணமாலைக்கு சுரமஞ்சரியின் கோபம் ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறத்தில் சிரிப்பாகவும் இருந்தது. ஆமாம் இந்த இரண்டு பொடிகளில் யார் சிறந்த பொடியை தயாரித்து இருப்பார்கள்? என கூறப்போகின்ற இந்த போட்டிக்கான நடுவர்கள் யார்? என்றாள்.

🌟 சிறிது சிந்தித்தவள் இரண்டையும் தனித்தனி தட்டுகளில் எடுத்து செல்லுங்கள். நகர மக்களிடத்தில் இதை கொடுத்து கேளுங்கள். அவர்களுடைய முடிவே இறுதி தீர்ப்பாகும் என்றாள் சுரமஞ்சரி.

🌟 சுரமஞ்சரி கூறியதை கேட்ட இரண்டு சேடியர்கள் தனித்தனி தட்டுகளில் பொடிகளை எடுத்துக்கொண்டு மக்களிடத்தில் சென்று, இந்த பொடிகளின் தன்மைகளை யாரிடம் சென்று கேட்பது? என இருவரும் எண்ணி கொண்டிருந்தனர்.

🌟 அவர்கள் எதிரில் இளம் காளையர்கள் சிலர் வந்து கொண்டிருப்பதை பார்த்ததும் அவர்களிடத்தில் தங்கள் தட்டுகளை இருவரும் நீட்டினார்கள்.

🌟 காளையர்களோ எதையும் சொல்லாமல் அந்த பெண்களையே பார்த்த வண்ணமாக நின்று கொண்டிருந்தனர். தட்டை கொஞ்சம் பாருங்கள் என்று அப்பெண்கள் கூறினார்கள்.


🌟 அதற்கு அந்த காளையர்களோ, இல்லை இல்லை நாங்கள் உங்களை தான் பார்த்து கொண்டிருந்தோம் என்று அவர்களுக்குள் கூறிக்கொண்டு சிரித்து கொண்டிருந்தனர்.

🌟 இதை கண்டதும் சேடி பெண்கள் கோபத்துடன், எம்முடைய தலைவியர்கள் இருவரும் பெரிய வீட்டு பெண்கள். அவர்களுக்குள் சுண்ணம் செய்வதில் யார் சிறந்தவர்? என்று ஒரு சிறு விவாதம் ஏற்பட்டு விட்டது.

🌟 அதாவது அவரவர்கள் தங்களது கைகளால் இடித்து பூசிக்கொள்ளும் சுண்ணம் இது. இதில் எது சிறந்தது? என்று நீங்கள் கூற வேண்டும் என்றனர்.

🌟 நீங்கள் கூறுவதை பார்த்தால் பெரிய இடத்து விஷயம் போல தெரிகின்றது. அப்படி இருக்கும் பொழுது இதில் ஒருவருடைய சுண்ணம் மட்டும் நன்றாக இருக்கின்றது என்று கூறினால், மற்றொருவர் எங்களிடத்தில் கோபித்து கொள்வார். எங்களுக்கு எதற்கு இந்த வீண் விளையாட்டு என்று கூறி விட்டனர்.

🌟 நீங்கள் எல்லாம் எதற்கும் சரியான முடிவுகளையே எடுக்க மாட்டீர்களா? என்று கூறினார்கள் சேடி பெண்கள்.

🌟 நாங்கள் கூற வந்தது இதுவல்ல. எங்களாலும் எது சிறந்தது என்று கூற முடியும். என்ன பெரிய இடத்து பெண்கள் விஷயமாக இருக்கின்றது என்பதால் தான் வேண்டாம் என்று உங்களிடத்தில் கூறினோம். எங்களால் முடியாதது எதுவுமில்லை, எங்களாலும் கூற முடியும். தட்டை கொடுங்கள் பார்க்கின்றோம் என்று கூறினர்.


Share this valuable content with your friends


Tags

வீடு தேடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (03.06.2020) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை today rasipalan 29.03.2020 in pdf format measham வீட்டிற்குள் பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிறந்த தேதி மற்றும் நேரம் தெரியாமல் ஜாதகம் எழுத முடியுமா? சிம்ம ராசிக்கு 12ல் ராகு இருந்தால் என்ன பலன்? மணப்பெண் பிறந்த தமிழ் மாதத்தில் திருமணம் செய்யலாமா? சர லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? dhinasari horoscope 18.04.2020 in pdf format jasmine இவரின் அனுக்கிரகம் இருந்தால்... விரும்பிய பட்டம்... உங்கள் கையில்...!! 12ம் இடத்தில் குளிகன் சிந்தனைகள் மேம்படும் 03.12.2020 Rasipalan in PDF Format!! என் சொந்த அக்காவின் மகளை திருமணம் செய்து கொள்ளலாமா? ப வடிவ கட்டிட அமைப்பின் தீமைகள்...! பொட்டு மற்றும் சந்தனம் போன்றவற்றை பெண்ணிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் நல்லதா? ரோலண்ட் ஹில்