No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மன்னரை சந்தித்த சீதத்தன்..!!

Feb 20, 2023   Ramya   139    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மன்னரை சந்தித்த சீதத்தன்..!!

🌟 காந்தருவதத்தையை வீட்டில் தங்கவைப்பதற்கு பதுமையோ வேண்டாம் வயதிற்கு வந்த பெண்ணாக இருக்கிறாள். ஊரில் இருப்பவர்கள் எல்லாம் அவரவர்கள் வாய்களுக்கு என்ன அகப்படுகின்றதோ அதை எல்லாம் வைத்து கதை கட்டி விடுவார்கள். நாம் நம்முடைய மகளை கன்னி மாடத்திற்கு (கன்னி மாடம் : பெண்கள் தங்கும் இடம்) அனுப்பி வைப்போம். அங்கு அவள் சுதந்திரமாக இருக்க முடியும் என்றாள்.

🌟 ஆமாம். ஆமாம்... இறங்கிய சிறுபொழுதுக்குள் நமக்குள்ளே பெரிய கலவரத்தை உருவாக்கி விட்டார்கள். மகளும் இவ்விடத்தில் தங்கி விட்டால் அவ்வளவு தான். நீ சொல்வதும் உண்மைதான்.

🌟 அவள் சுகமாக சுற்றித்திரிந்து பாடிக்கொண்டிருப்பாள். அவள் பாடல்கள் நம்முடைய நித்திரையை கெடுக்கும். அதுமட்டுமல்லாது ஆட்கள் வேறு இங்கு அதிகமாக இருக்கின்றார்கள். அவளைப் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இந்த வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தை எல்லாம் இங்கு வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது என்றான்.

🌟 பிறகு காந்தருவதத்தையும் அவளுடன் வந்திருந்த அவளுடைய தோழி ஆகிய இருவரையும் கன்னி மாடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். சீதத்தன் நீண்ட நாள் பயணங்களுக்கு பின்பு தனது மனைவியோடு இணைந்து நடந்த நிகழ்வுகளை எல்லாம் கூறிக்கொண்டே ஒருவருக்கு ஒருவர் சிரித்து புன்னகைத்துக் கொண்டு அன்றைய இரவுப் பொழுதை ரம்மியமான உற்சாகம் நிறைந்த பொழுதாக கழித்துக் கொண்டிருந்தனர்.

🌟 ஆதவனை நோக்கிய பூமியின் பயணம் தொடர இருள் விலகி சூரிய ஒளியினால் பொழுதுகள் யாவும் விடியத் துவங்கின.

🌟 ஊரில் ஒரு போட்டி வைக்க வேண்டுமென்றால் நாட்டை ஆண்டு கொண்டிருக்கக்கூடிய மன்னனுக்கு அது சார்ந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் அல்லவா. அதற்காக சீதத்தன் கட்டியங்காரனை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தான் ஈட்டி வந்த பொருட்களில் விலை உயர்ந்த கற்கள் நிறைந்த அணிகலன்களை மன்னனுக்கு சமர்ப்பிப்பதற்காக எடுத்துச் சென்றான்.

🌟 அரண்மனைக்குச் சென்று கட்டியங்காரனிடம் தான் எடுத்து வந்த பொருட்களை கொடுத்து மன்னனின் ஆதரவை பெற்றான்.

🌟 கட்டியங்காரனோ என்ன தொழில் செய்கின்றாய்? இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொடுக்கின்றாய் என்று ஏதும் அறியாதது போல வினவினான்.


🌟 மன்னா நான் கடல் கடந்து வாணிபம் செய்து வருகின்றேன். அதில் ஈட்டிய பொருட்கள் தான் இவைகள் எல்லாம் என்று கூறினார்.

🌟 ம்ம்ம்..... பரவாயில்லையே, குறைந்த நாட்களில் இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை ஈட்டுகின்றாய். கெட்டிக்காரன் தான் என்று கூறினார். ஆமாம்! என்னை சந்திப்பதற்கு என்ன தேவை உமக்கு இருக்கின்றது. ஒருவேளை ஈட்டிய பொருட்களில் எவரிடமும் காட்ட முடியாத அளவில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் இருக்கின்றதா? என்று வினவினான்.

🌟என்னை சந்திப்பதற்கு என்ன தேவை உமக்கு இருக்கின்றது. ஒருவேளை ஈட்டிய பொருள்களில் எவரிடமும் காட்ட முடியாத அளவில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதேனும் இருக்கின்றதா என்பது போலவும் வினாவினான்.

🌟ஆமாம் மன்னரே! நான் ஈட்டிய பொருட்களில் காட்ட முடியாத அளவில் ஒரு பொருளை கொண்டு வந்திருக்கின்றேன்.

🌟அப்படியானால் அந்த பொருளை முன்னமே என்னிடம் காட்டி இருக்க வேண்டுமல்லவா! என்பதுபோல கூறினார்.

🌟இல்லை மன்னரே! அது பொருள் அல்ல. நம் நாட்டவர்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வழியில் ஒரு அழகு நிறைந்த பதுமையை அழைத்து வந்து இருக்கின்றேன் என்று கூறினான்.

🌟அவ்வளவு அழகு நிறைந்த கணிகையாக இருக்கும் பட்சத்தில் அவளை எனக்கு காணிக்கையாக்கி விடு என்று கூறினான் மன்னன்.

🌟இல்லை மன்னா! அவள் கலுழவேகன் மன்னனின் மகள் ஆவாள். அதுவும் ஒரே மகள். வித்யாதரன் அரசனின் மகளாவாள். அவளுக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நம் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவள் வீணையில் சிறந்து விளங்குபவள். அந்த வீணை போட்டியில் யார் அவளை வெல்கிறார்களோ அவனையே அவள் நாயகனாக கொண்டு இல்லற வாழ்க்கை நடத்த வேண்டுமென்று குறிக்கோளாடு இருக்கின்றாள். ஆகவே, அவள் பொருட்டு இசைப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்ய தாங்கள் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டி நின்றான்.


Share this valuable content with your friends


Tags

துலாம் லக்னக்காரர்கள் மரகதப் பச்சைக்கல் மோதிரம் அணியலாமா? யானை மீது அமர்ந்து செல்வது போல் கனவு aani month என்னுடைய தோழி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடைபெறுவதற்கு காரணமான வாஸ்து தவறுகள்....!! daily horsocope in pdf format உஷை தனது காதலனை காணுதல் தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விஷ்ணுபகவான் கா.நமச்சிவாயம் womens day சீமந்தம் 6 மாதத்தில் செய்யலாமா? neem tree சம்பந்தர் எல்லிஸ் ஆர்.டங்கன் தினசரி ராசிபலன் (06.04.2022) - வறுமை ஏற்படுவதற்கு எது காரணம்? இறந்து போன என்னுடைய தாய் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 2019 டிசம்பர் மாத வரலாறு Vaasthu