சீவக சிந்தாமணி... இராசமாபுரத்திற்கு புறப்பட்ட சீதத்தனும் காந்தருவதத்தையும்..!!
🌟 நிகழ் காலத்திற்கு வந்த சீதத்தன் காந்தருவதத்தை பார்ப்பதற்கு அவள் தாயைப் போலவே இருந்தாள். ஆனால் பெண்களுக்கு உரிய அனைத்து நளினமும், அழகில் விண்ணுலக தேவதைகளும் தோற்றுப்போகும் அளவில் இருந்தாள்.
🌟 இவ்வளவு அழகு நிறைந்த பேரழகிக்கு நான் எப்படி தகுந்த மணாளனை தேடுவேன்? என்று கேட்டார்.
🌟 ஆனால் காந்தருவதத்தையோ அழகில் சிறந்தவன் எனக்கு வேண்டாம். கலைகளில் சிறந்தவனே எனக்கு வேண்டும் என்று கூறினாள்.
🌟 கலைகளில் சிறந்தவன் என்றால் என்ன? என்று சீதத்தன் வினவினான்.
🌟 நான் இசையில் சிறந்த வல்லவனாக இருக்க கூடியவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன். ஒரு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் வெற்றி கொள்பவனை நான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறினாள்.
🌟 கலுழவேகன் சீதத்தனை நோக்கி என் மகளின் விருப்பங்களை நீங்களே புரிந்து கொண்டீர்கள். இனி நான் எடுத்துக் கூறவேண்டும் என்ற சூழ்நிலை கிடையாது. எனவே அதற்கு தகுந்த ஏற்பாடுகளை நீங்கள் உங்கள் ஊரில் செய்து தாருங்கள்.
🌟 நான் கொண்டு வந்த பொருட்களையும், என்னுடன் வந்தவர்களையும் இழந்து தனிமையில் நிற்கின்றேன். என்னிடம் நீங்கள் போய் இவ்விதம் கூறுகின்றீர்களே இது நியாயமா? என்று கூறினார் சீதத்தன்.
🌟 உன்னுடைய பொருட்களை இழந்தாய் என்பதும், உன்னுடன் வந்தவர்களும் இறந்துவிட்டனர் என்று கூறுவதும் முறையல்ல. அவைகள் அனைத்தும், அனைவரும் நீ வைத்த இடத்திலேயே அப்படியே இருக்கின்றனர் என்று கூறினார் கலுழவேகன்.
🌟 என்ன அவைகள் அனைத்தும் அப்படியே இருக்கின்றனவா? என்னுடன் வந்தவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? நான் புயலில் மாட்டிக்கொண்டு தத்தளித்தது எல்லாம் பொய்யா? என்று வினவினார் சீதத்தன்.
🌟 ஆம். நீ புயலில் மாட்டிக்கொண்டு தத்தளித்தது எல்லாம் எங்களுடைய கட்டு வித்தைகள் மட்டுமே. நீ கலத்தில் வந்து கொண்டு இருக்கின்றாய் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரிந்தது. ஆகையால் உன்னை இவ்விடத்திற்கு வர வைக்க எங்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாயத் தோற்றமே அது. எங்களுடைய மந்திர சக்தியால் இவைகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டன.
🌟 மன்னருடைய கூற்றுகளை கேட்டதும் மகிழ்ச்சி அடைவதா... அல்லது சூழ்ச்சியில் சிக்கி கொண்டோம் என நினைத்து கவலைப்படுவதா... என்பது புரியாமல் நின்று கொண்டிருந்தான் சீதத்தன். இருப்பினும் தன்னுடன் வந்தவர்களும், தன்னுடைய பொருட்களும் பத்திரமாக இருப்பதை அறிந்ததும் அவன் மனம் திருப்தி அடைந்தது.
🌟 காந்தருவதத்தையை சீதத்தனோடு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. தந்தையும், தாயும் தன்னுடைய மகளை பிரிந்து செல்வதற்கு மனமே இல்லாமல் அவளுடைய எதிர்காலத்தை எண்ணி, கங்கை பிறப்பது ஓர் இடமாக இருந்தாலும், அது சென்றடைவது என்னவோ கடலில் தான்.
🌟 அதனால் பயன் அடையும் நகரங்கள் எண்ணற்றவைகள் ஆகும். அதுபோல தான் நம்முடைய மகளும். அவள் மூலம் பல எண்ணற்ற மாயங்கள் இந்த உலகம் காண இருக்கின்றது என்று கூறி பிரியா விடை கொடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விமானத்தில் ஏற்றினார்கள்.
🌟 வீணாபதி என்ற அவளுடைய நெருங்கிய தோழியும், யாழிசையில் நுட்பமான கூறுபாடுகளை அறிந்தவளும் அவளுடன் சென்றாள். அதுமட்டுமல்லாது அவள் பழக பயன்படுத்திய யாழ் கருவிகள் பலவும் விமானத்தில் ஏற்றப்பட்டன.
🌟 விமானத்தில் அனைவரும் சென்று பழைய தீவில் ஒதுங்கிய மரக்கலத்தினை அடைந்தார்கள். அதில் இருந்தவர்கள் எந்தவிதமான குறையும், ஆபத்தும் இல்லாமல் இருப்பதைக் கண்டதும் இவன் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத அளவில் இருந்தது.
மனோகாரகன் sorkkam குளிகையில் முகூர்த்தம் வைக்கலாமா? மார்கழி மாதம் வளைகாப்பு நடத்தலாமா? jothder question and answer தினசரி ராசிபலன் (23.02.2022) norteast டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினம் மார்கழி மாதம் fox சனி ஓரையில் பழைய பொருட்களை வாங்கலாமா? ideas வைகுண்ட ஏகாதசி விரதம் அநங்கமா வீணை . தெரியாத ஒருவர் எனக்கு முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மயில் இறகுகளை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாமா? மக்கள் கூட்டம் அதிகமான இடத்தில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? sambanthar வடக்கு திசையில் தலை வைத்து உறங்கலாமா? வாகனத்தில் செல்லும்போது பாதையில் முள் பரப்புவது போல் கனவு கண்டால் என்ன பலன்?