நள்ளிரவு வேளையில் வேதாளத்தை சுமந்து நடந்து கொண்டிருந்த விக்கரமாதித்தனிடம் வேதாளம் இந்த கதையை சொல்ல ஆரம்பித்தது.
சந்திரசேனன் என்ற மன்னன் நாகபுரி என்கிற நாட்டை ஆண்டு வந்தான். இவருடைய மகளும், இளவரசியுமான ரூபாவதி-க்கு திருமணம் செய்து வைக்க ஒரு இளவரசனை தேடிக்கொண்டிருந்தார் மன்னன் சந்திரசேனன். இதையறிந்த ரூபாவதி தன் தந்தை தேர்ந்தெடுக்கும் இளவரசனை தான் திருமணம் செய்து கொள்ள முடியாதென்றும், மாறாக எந்த இளவரசன் அவனது திறமையை தன்னிடம் நிரூபிக்கின்றானோ, அந்த இளவரசனையே தாம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் திட்டவட்டமாக கூறிவிட்டாள். அவளின் முடிவை ஏற்று சந்திரசேனன் மற்ற நாட்டு இளவரசர்களுக்கு தன் மகளின் சுயம்வரத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.
அந்த சுயம்வரத்தில் 'உபேந்திரன், யோகேந்திரன், தனஞ்செயன்' என்ற மூன்று வேறு வேறு நாடுகளை சேர்ந்த இளவரசர்கள் கலந்து கொண்டார்கள். அதில் முதலில் உபேந்திரன் ரூபாவதியிடம் சென்று தனக்கு எந்த ஒரு விஷயத்திலும் அதன் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தை அறியக்கூடிய திறன் இருப்பதாக கூறினான். இரண்டாவதாக வந்த யோகேந்திரன் தன்னிடம் தான் தயாரித்த அற்புதமான ரதம் ஒன்று இருப்பதாகவும், அது நிலம், நீர், ஆகாயம் என மூன்று வழிகளிலும் பயணம் செய்யக்கூடியது என்று கூறினான். மூன்றாவதாக வந்த தனஞ்செயன் தான் உருவாக்கிய 'அற்புத வாள்' ஒன்று தன்னிடம் இருப்பதாக கூறினான்.
இதையெல்லாம் கேட்ட ரூபாவதி அந்த மூவரில் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவது யார்? என்பதை மறுநாள் கூறுவதாக கூறி தன் அந்தப்புரம் சென்றாள். ஆனால் மறுநாள் ரூபாவதி அரண்மனையில் எங்கு தேடியும் இல்லை என்ற செய்தி வந்தது.
அப்போது இளவரசன் உபேந்திரன் தன் முக்கால ஞானத் திறனைக் கொண்டு ரூபாவதி சில அரக்கர்களால் கடத்தப்பட்டு, யாருமே எளிதில் செல்ல முடியாத ஒரு மலையுச்சியில் சிறை வைக்கப்பட்டிருப்பதாக கூறி, அங்கு செல்வதற்கான வரைபடத்தையும் வரைந்து கொடுத்தான்.
இதைக் கேட்ட யோகேந்திரன் தன்னுடைய அதிசய ரதத்தின் மூலம் யாருமே செல்ல முடியாத அந்த மலைக்கோட்டைக்கு செல்ல முடியும் என்று கூறினான். அப்போது உபேந்திரனும், தனஞ்செயனும், யோகேந்திரனின் அந்த ரதத்தில் ஏறிக்கொண்டனர். உடனே அந்த ரதம் பறந்து அந்த மலை உச்சியை அடைந்தது. அப்போது அங்கிருந்த அரக்கர்கள் இந்த மூன்று இளவரசர்களையும் தாக்க முற்பட்டனர்.
அப்போது தனஞ்ஜெயன், தன்னிடம் இருந்த அற்புத வாளைக்கொண்டு அரக்கர்களுடன் சண்டையிட்டு, கொன்று அங்கு சிறை வைக்கப்பட்ட ரூபாவதியை மீட்டான். பின்பு நால்வரும் அந்த ரதத்தில் நாகபுரிக்கு திரும்பினர். இப்போது அம்மூன்று இளவரசர்களும் ஆளாளுக்கு தங்களுடைய திறனால் தான் இளவரசி ரூபாவதி மீட்கப்பட்டதாக கூறி தனக்கு தான் ரூபாவதியை திருமணம் செய்யும் உரிமையுள்ளது என ஒரே நேரத்தில் உரிமை கோரினர்.
கதையின் மையக்கருத்து:
விக்ரமாதித்தா இந்த மூவரில் யாருக்கு உண்மையில் ரூபாவதியை திருமணம் செய்ய உரிமை உள்ளது? என அந்த வேதாளம் கேட்டது. உபேந்திரன் அந்த மலையில் இளவரசி சிறை வைக்கப்பட்டிருப்பதையும், அங்கு செல்வதற்கான வழியை மட்டுமே கூறினான். யோகேந்திரன் மற்ற இரண்டு இளவரசர்களுடன் சேர்ந்து, அந்த மலைக்கு தன் அற்புத ரதத்தைக் கொண்டு அங்கு செல்வதற்கு மட்டுமே உதவினான். ஆனால் தனஞ்ஜெயன் தன் அற்புத வாளைக்கொண்டு, வீரத்தோடு அத்தனை அரக்கர்களுடனும் சண்டையிட்டு அவர்களைக் கொன்று, இளவரசி ரூபாவதியை மீட்டான். தன்னை நம்பியவர்களை தன் உயிரை பணயம் வைத்து காப்பவன் தான் சிறந்த மனிதன். எனவே இளவரசன் தனஞ்ஜெயனே ரூபாவதியை திருமணம் செய்து கொள்ளும் தகுதி உடையவன் என்ற விக்ரமாதித்தனின் பதிலைக் கேட்டதும் வேதாளம் அவனது பிடியிலிருந்து தப்பி, பறந்து சென்றது.
வார ராசிபலன்கள் (01.04.2019 - 07.04.2019) PDF வடிவில் !! 8ல் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? இரக்க குணம் கொண்டவர்கள் இவர்களே! தேர்வு எழுதுவது போல் 18.09.2020 Rasipalan in PDF Format!! மூன்றாம் பிறை love goat may 03 . கத்தரிக்கோலை கனவில் கண்டால் என்ன பலன்? gurupeyarchi palangal பஞ்சமி அன்று தொழில் தொடங்கலாமா? விசயன் பெண்கள் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் கனவில் பெண்கள் வந்தால் என்ன பலன்? சனி மஹாப்பிரதோஷம் ரிஷப ராசி 25.11.2019 rasipalan in pdf format sugarcane