No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கஷ்டங்கள் நீங்க... தூப வழிபாடு..!!

Feb 10, 2023   Rathika   137    ஆன்மிகம் 


கஷ்டங்கள் நீங்க... தூப வழிபாடு..!!


💸 வெள்ளிக்கிழமை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது மகாலட்சுமி தான். நம் வாழ்வில் செல்வங்களை அள்ளி தரும் மகாலட்சுமியை அனைத்து தினத்திலும் வணங்கலாம். ஆனால் வெள்ளிக்கிழமையில் வணங்குவது இன்னும் சிறப்பானது.

💸 அதன்படி, தை மாத வெள்ளிக்கிழமையான நாளை அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள்.

💸 பணம் நமக்கு கிடைப்பது போல இருக்கும். ஆனால் கடைசியில் எல்லாம் கைநழுவி போய்விடும். வீட்டு வாசல் வரைக்கும் வந்த மகாலட்சுமி, நம் வீட்டிற்குள் வந்திருக்க மாட்டாள்.

💸 இது நமக்கு நடக்கும் கெட்ட நேரமாக கூட இருக்கலாம் அல்லது இதற்கு கண் திருஷ்டியும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஒரு சிறந்த வழிபாட்டினை பார்க்கலாம்..

மகாலட்சுமியை வழிபட உகந்த கிழமை:

🙏 மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்க வெள்ளிக்கிழமை ஒரு சிறந்த நாளாகும். மற்ற கிழமையில் மகாலட்சுமியை வழிபட்டாலும் சிறப்பு தான். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தினந்தோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடுங்கள்.


வழிபடும் முறை :

💭 பூஜை அறையை சுத்தப்படுத்தி, இறைவனின் திருவுருவப் படங்களுக்கு பொட்டு மற்றும் பூ வைத்து கொள்ளவும்.

💭 ஒரு மஞ்சள் நிற துணியில் சிறிதளவு கல் உப்பு, ஒரு சின்ன வசம்பு துண்டு, மூன்று மிளகு வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை பூஜை அறையில் மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பு வைத்து விடுங்கள்.

💭 விளக்கேற்றி பூஜை செய்த பின் அந்த முடிச்சு மகாலட்சுமியின் திருவுருவப் படத்திற்கு முன்பு அப்படியே சிறிது நேரம் இருக்கட்டும்.

💭 பூஜை முடிந்த பின்பு தூப காலில் இந்த முடிச்சை எடுத்து வைத்து, இந்த முடிச்சில் கொஞ்சமாக நெய் விட்டு மேலே ஒரு பச்சை கற்பூரம் வைத்து பற்ற வைத்து விடுங்கள். எரியும்போது கொஞ்சமாக தேன் விடலாம் (தேன் நெருப்பை சாந்தி செய்வதற்காக).

💭 இந்தப் புகையை உங்களுடைய வீடு முழுவதும் காண்பித்து விட்டு, மீண்டும் பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

💭 பின் அந்த புகை சூழ்ந்த இடத்தில் ஐந்து நிமிடங்கள் அமர்ந்து, உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களெல்லாம் சரியாக வேண்டும், துன்பங்கள் எல்லாம் தவிடுபொடியாக வேண்டும், தடைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

💭 இந்த வழிபாட்டினை 3 வெள்ளிக்கிழமைகளில் முயற்சி செய்து பாருங்கள். நல்ல முன்னேற்றம் தெரியும்.

வழிபாட்டின் நன்மைகள் :

🌺 இந்த வழிபாட்டின் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு நிம்மதியான சூழ்நிலை உண்டாகும்.

🌺 சண்டைகள் நீங்கி வீட்டில் சகல ஐஸ்வர்யமும் பெறுவீர்கள்.

🌺 பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

🌺 சுபகாரிய தடை அல்லது குழந்தைகள் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரியாகிவிடும்.


Share this valuable content with your friends