சீவகனை கண்டு மங்கையர் மனம் மயங்குதல்...
🌟 குருநாதர் சீவகனை விட்டு சென்றதும் தன்னுடைய நாட்டிற்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் நிகழ்ந்த இந்த கொடுமையை எவ்விதத்திலாவது சீர் செய்ய வேண்டும் என்று எண்ணினான். அதற்கு தனித்திருந்து போராடினால் மட்டும் போதாது என்பதை அவருடைய குருநாதர் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். தனக்கான ஒரு அமைப்பை உருவாக்குவதில் சீவகனும் சிறுவயது முதலே முயற்சியில் இறங்கினான்.
🌟 எதிர்ப்புகளை வெற்றி கொள்ள வேண்டும் எனில் பலதரப்பட்ட அனுபவங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து இருந்தான். அதற்காக பலதரப்பட்ட கேள்விகள் மற்றும் அனுபவங்கள் நிறைந்தவர்களின் பேச்சுக்களை தன் மனதில் ஆழப்பதித்துக் கொண்டான். அதுமட்டுமல்லாது கலை சார்ந்த துறைகளிலும் தன்னை வல்லவனாக வளர்த்துக் கொண்டான்.
🌟 வீணை இசைப்பதிலும், வாசிப்பதிலும் சிறந்தவனாக அனைவராலும் அறியப்பட்டு இருந்தான். கல்வி கற்பதனால் ஞானம் அதிகரிக்கும். எவரிடத்தில் ஞானம் அதிகரிக்க தொடங்குகின்றதோ அவரிடத்தில் அழகும் அதிகரிக்கும். பருவ வளர்ச்சியுடனும் வீர தீர செயல்பாடுகளில் ஈடுபட்டு காண்போர்கள் வியக்கும் வண்ணம் நடந்து கொண்டு இருந்தான்.
🌟 எதிரிகள் இடத்தில் அச்சத்தை உருவாக்கும் வகையில் வேலை கொண்டு வெற்றி வாகையை சூடிக் கொள்ளக்கூடிய மார்புகளை கொண்ட சீவகனை காணும் போதெல்லாம் அவ்வூரில் இருக்கக்கூடிய கன்னிப் பெண்கள் அனைவரும் சீவகனுடைய லாவண்யா தோற்றத்தினால் மதிமயங்கி இருந்தார்கள்.
🌟 ஒவ்வொருவரும் சீவகன் தனக்கானவனாக இருக்கக்கூடாதா? என்று எண்ணும் அளவில் கன்னி மங்கையர்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு நிரம்பியவனாக இருந்தான்.
🌟 தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல அவனது சகோதரனான நந்தட்டன் சீவகனுக்கு உற்ற துணையாக பல விஷயங்களில் இருந்தான். ராமருக்கு லட்சுமனன் என்பது போல எப்பொழுதும் அவனை பிரியாமல் அவன் மேற்கொண்டு இருந்த செயல்கள் அனைத்தையும் நன்கு கவனித்து அவனுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொண்டிருந்தான். சுருங்கச் சொன்னால் அவன் நிழல் போல அவனுடனே இருந்து வந்தான்.
🌟 இந்நிலையில் கந்துக்கடனுக்கு வாழ்க்கை துணையாக சுநந்தையும், அவனுக்குத் தேவையான நேரங்களில் சுகத்தை அளிக்கும் வகையில் சில கன்னிகளும் இருந்து வந்தனர். அரசு கணக்கில் மனைவியும், பதுக்கல் கணக்கில் சில விருப்பமுள்ள மாதர்கள் என குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அதனுடைய விளைவின் காரணமாக நபுலன், விபுலன் என்ற நன்மக்கள் இருவரையும் பெற்றெடுத்தான்.
🌟 சீவகன் தன்னுடைய சகோதரர்கள் இடத்தில் எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் ஒருவர் போலவே எண்ணி அவர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் ஒருங்கே கொடுத்தான். சகோதரர்கள் அவனுக்கு துணையாக எப்பொழுதும் இருக்கும் வகையில் அவர்களையும் தம்முடைய இலக்கை நோக்கிய பயணத்தில் அழைத்துச் செல்லும் நோக்கோடு செயல்பட்டான்.
🌟 எண்ணம் உயர்வானதாக இருக்கும் பொழுது அதற்கான உதவிகளும் சரியாக கிடைக்கும் என்பது போலவே அவனுடைய எண்ணத்திற்கேற்ப அவனுடைய சகோதரர்களும் அவனுக்கு துணையாக நின்றார்கள், அவர்களை அறியாமலேயே.
🌟 நாளும் கோளும் மாறுவது போல சீவகனின் குணநலன்களிலும் மாற்றம் காணப்படத் துவங்கியது. பதுமுகன் என்பவனும், புத்திசேனன் என்பவனும் இவனது வலது கரமாகச் செயல்பட்டனர். தம்பியரும், தோழர்களும் அறிவு மிக்க அமைச்சராகவும், செயலாற்றும் வீரர்களாகவும் செயல்பட்டனர்.
🌟 வேளைக்குச் சோறு, துணிமணிகள் மற்றும் அடிதடி, நாளைக்கு ஒரு நாடகம். கவலையில்லாத கட்டவிழ்ந்த வாழ்வு இவர்களை கவ்வியது. ஆனால் சீவகன் கொண்ட இலக்கில் மட்டும் மாற்றம் ஏற்படாமல் காலதிற்காக காத்துகொண்டு இருந்தது.
🌟 இராசமாபுரத்தில் பேசுவதற்கும், பேசியதை சிந்திப்பதற்கும், சிந்திப்பதை செயல்படுத்துவதற்கும் ஏதேனும் ஒரு சில நேரங்களில் அதற்குண்டான நிகழ்வுகளும், வாய்ப்புகளும் தோன்றாமல் இருந்ததில்லை. பூக்கள் நிறைந்த ஒரு தோட்டத்திற்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றால், யார் வேண்டுமானாலும் தோட்டத்தில் புகுந்து பூவினை பறித்துக் கொள்ளலாம்.
இராசமாபுரத்தின் நிலையை வேடுவர்கள் அறிதல்...
🌟 அதைப்போல தான் பாதுகாப்பு கொடுக்க இல்லாத வகையில் இருக்கக்கூடிய ஆட்சியாளரான பலருடைய நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து தனக்கான சுகத்தையும், தன்னை சார்ந்தவர்களின் நன்மைக்காகவும் ஆட்சியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தும் நம்பிக்கைத் துரோகியான கட்டியங்காரனின் கரங்களில் ஆட்சிப் பொறுப்புகளில் இருக்க பாதுகாப்பில்லாமல் வளமும், கனிகளும் நிறைந்த தோட்டமாக இராசமாபுரம் இருந்துகொண்டே இருக்கின்றது.
🌟 கார் இருள் நிறைந்த கார்காலம் முடியப் போகின்றது என்பதை அறிந்துகொண்ட கொடிகள் நிறைந்த முல்லையானது தன்னிடத்தில் இருந்துவந்த மொட்டுக்களை பூக்கச் செய்தது. தன்னுடைய கன்றுகளை எண்ணிய ஆநிரையும் (பசுக்கள்) தன்னுடைய மடிகளில் பாலை பொழியச் செய்தது.
🌟 மற்ற நகரங்களில் இருந்து பொருட்களைக் கவர்ந்து வந்து மலையின் உச்சியிலே அரசு நடத்தும் சில வேடுவர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கக்கூடிய இராசமாபுரத்தைப் பற்றி அறிந்து கொண்டனர். சரியான பாதுகாப்பு இல்லாத நகரம் என்றும் வலிமை இல்லாத அரசன் தான் நாட்டை ஆளுகின்றான் என்ற தகவல் வரை அவர்கள் சேகரித்து கொண்டனர்.
🌟 வறியவன் என்றால் வலியவனுக்கு மகிழ்ச்சி தானே என்பது போல நாட்டின் நிலைகளை அறிந்ததும், நகரத்தில் வளமை நிறைந்த காலக்கட்டங்களை அறிந்து அந்த தினங்களில் வந்து தமக்கு தேவையான ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதற்காக மேய்ச்சல் இடத்தில் பதுங்கி காத்துக்கொண்டு இருந்தனர்.
daily horocope விருச்சிக லக்னத்தில் சந்திரன் சனிப் பெயர்ச்சி பலன்கள்.! ராகு மே 21 09.09.2018 rasipalan in PDF format வீட்டில் மாமரம் வைக்கலாமா? இன்றைய வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகள்..! pandangal ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக இறப்பு வருவதற்கு வாஸ்து குறைபாடுகள் காரணமா? thiruvannamalai kozhi கருப்பண்ணசாமி போட்டோவை வீட்டில் வைத்து வழிபடலாமா? வானியல் தினம் ஏப்ரல் 08 நாவல்பழம் தினசரி ராசிபலன் (12.02.2022) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையான நாள் ? குருபகவான் 4ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்? நவம்பர் உண்மை