சச்சந்தன் பற்றி சீவகன் அறிதல்...
🌟 நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த நாட்டின் சூழ்நிலை என்பது இன்றைய நிலையில் மிகவும் சீர்குலைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? என்று வினவினார்.
🌟 சீவகனும் நாட்டு மக்களின் நலனையும், நாட்டின் முன்னேற்றத்திலும் அதிக முக்கியத்துவம் தராமல் இருக்கக்கூடியவர் மன்னன். அதனால்தான் நம் நாட்டின் சூழ்நிலை இன்று இவ்விதமாக உள்ளது என்று கூறினான்.
🌟 ஆசிரியரோ, நீ கூறுவது உண்மைதான். ஏனென்றால் மன்னன் என்பவன் மக்களுக்கு உயிர் போன்றவன் ஆவான். வலிமை இழந்து இருக்கக்கூடிய மக்களை காக்க வேண்டிய பாதுகாவலன் அவன்தான். ஒரு நாட்டின் சிறப்பு என்பது அந்த நாட்டில் இருக்கக்கூடிய நீர், நில, கால்நடை வளங்களால் மட்டும் உயர்வது இல்லை.
🌟 அங்கு வாழக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தை பொறுத்துதான் அமைகின்றது. அந்த வாழ்வாதாரம் என்பது அரசன் எவ்விதத்தில் செங்கோல் செய்கின்றான் என்பதை பொருத்தே அந்த நாட்டின் சிறப்பும், அறமும், மக்களின் வாழ்வும் இருக்கின்றது என்று கூறினார்.
🌟 அதுமட்டுமல்லாது உண்பதற்கு உணவும், குடிப்பதற்கு நீரும், உடுப்பதற்கு உடையும், வாழ்வதற்குத் தேவையான வசதிகள் மட்டும் இருந்துவிட்டால் போதுமா ஒரு நாடு மேன்மை அடைய... என்று தன்னுடைய மாணவனை பார்த்து கேட்டார்.
🌟 இவை மட்டும் போதாது ஒரு நாடு சிறப்புற்று விளங்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் ஒழுக்கம் மிக்கவராக இருக்க வேண்டும் என்று கூறினான் சீவகன்.
🌟 சீவகனின் பதிலைக் கேட்டு ஆசிரியரோ மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தன்னுடைய மாணவன் சிறந்து விளங்குவது ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகும். அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை என்பது எதுவும் அல்ல.
🌟 நீ கூறுவது போல நாட்டு மக்களும் ஒழுக்கம் உடையவராக இருக்க வேண்டும். ஆனால் இன்று நம் நாட்டின் நிலை என்ன? நம் நாட்டை ஆளக்கூடிய அரசன் ஒழுக்கம் தவறி நடந்து கொண்டு இருக்கின்றான். காம கன்னியர்களை அடைந்து இன்ப கேளிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் வளர்ச்சிக்கு தேவைப்படக் கூடிய பொருட்கள் அனைத்தையும் தவறான முறைகளில் செலவு செய்து வருகின்றான்.
🌟 அதுமட்டுமல்லாது நாட்டு மக்களுடைய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான நாச செயல்களையும் செய்கின்றான். நல்லோர் உரைகளைக் கேட்டு நடக்காமல் தவறான கருத்துக்களை சொல்லக்கூடிய இழி சொற்களைக் கேட்டு நெறி தவறுகின்றான். இந்த நிலையானது மாற வேண்டும் அப்பொழுது தான் நம்முடைய நாடு வளம் பெறும் என்று கூறினார்.
🌟 சீவகனோ அவன் நாட்டு அரசன் ஆயிற்றே அவனை எவ்விதத்தில் அகற்ற முடியும் என்று வினவினான்.
🌟 அச்சணந்தி சீவகனை நோக்கி அதுதான் இல்லை. இவ்விடத்தில் ஒரு வரலாறு மறைந்து இருக்கின்றது. இந்த நாட்டை ஆண்டவன் சச்சந்தன் என்பவன் ஆவான்.
🌟 சீவகன் தனது ஆசிரியர் கூறும் செய்தியை கேட்டதும் மிகுந்த ஆச்சரியம் கொண்டான். இதுவரை யாரும் என்னிடத்தில் இவ்விஷயத்தை எடுத்துரைக்கவும் இல்லையே? யாவரும் இதைப் பற்றி வெளியில் பேசி கேட்டதும் இல்லையே? என்று ஆசிரியர் கூறுவதை பொறுமையுடனும், கவனமாகவும் கேட்டான்.
🌟 அச்சணந்தி, சச்சந்தன் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் எடுத்துரைக்க தொடங்கினார். அவன் ஆட்சி காலத்தில் நாடு வளமையும், சிறப்பும் பெற்று இருந்தது. இளமை நிறைந்த வீரம் செறிந்திருந்த பருவத்தில் அவன் ஒரு தவறு செய்துவிட்டான்.
🌟 அதாவது தன்னுடைய மாமன் மகளை மணந்து அவளுடைய அழகில் மயங்கி, அவளுடனே காலத்தை செலவு செய்து வந்தான். தன்னுடைய கடமைகளில் இருந்து சிறு காலம் விடுப்பு எடுப்பது போல தன்னுடைய ஆட்சி பொறுப்புகள் அனைத்தையும் கட்டியங்காரனிடம் ஒப்படைத்து விட்டு தன்னுடைய மனைவியுடன் இன்பமாக காலம் கடத்தினான்.
🌟 அதுவரையில் அமைச்சராக இருந்தவன் அரசனுடைய அதிகாரத்தை ஏற்றது முதல் அனுபவித்த சுக போகங்கள் மீது பற்றுக்கொண்டான். நாளடைவில் அவன் தன்னுடைய நிலையையும் மறக்க துவங்கினான்.
🌟 ஒருவேளை நாளை உண்மையான மன்னன் வந்து தன்னுடைய அதிகாரத்தை கேட்டால் என்ன செய்வது? என்ற சிந்திக்கவும் செய்தான். அதற்காக அவரை கொலை செய்யக்கூடிய துரோக நிகழ்வையும் நிகழ்த்தினான். அரசன் இறந்ததும் அவருடைய ஆட்சியை தன்னுடைய உடைமை ஆக்கிக் கொண்டான் என்று கூறினார்.
🌟 இதைக் கேட்டதும் சீவகனுக்கு இனம்புரியாத ஒரு கவலை அவனுடைய முகத்தில் வெளிப்படத் துவங்கியது. தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் அல்லவா! என்பது போல அவன் விழிகளில் இருந்து அவனை அறியாமல் சிறு துளிகளும் விழத் துவங்கின. பின்பு தன்னுடைய ஆசிரியரை நோக்கி அந்த மன்னனுக்கு குழந்தை ஏதேனும் பிறக்கவில்லையா? என்று வினவினான்.
சீவகன் தன் பிறப்பு பற்றி தெரிந்து கொள்ளுதல்...
🌟 அச்சணந்தி அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. தன்னுடைய அமைச்சர் நம்பிக்கை துரோகம் செய்யப் போகிறான் என்பதை உணர்ந்து கொண்ட மன்னன் தன்னுடைய வாரிசை அதாவது தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கின்ற பொழுது மயில் பொறி ஒன்றில் ஏற்றி அவளை அனுப்பி வைத்தான். அந்த மயில் பொறி வாகனமானது இடுகாட்டில் இறங்கியது. அவ்விடத்திலேயே அவனுடைய மனைவியும் ஒரு மகனை பெற்றாள் என்று கூறினார்.
🌟 அவருடைய மனைவி ஈன்றெடுத்த அந்த புதல்வன் இன்று உயிரோடு இருக்கிறானா? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவன் எங்கே இருக்கிறான்? என்று வினவினான் சீவகன்.
🌟 ஆசிரியரும் சீவகனை நோக்கி அவன் உயிரோடுதான் இருக்கிறான். அவனுக்கு ஏறக்குறைய உன்னுடைய வயது தான் இருக்கும். அவன் தாய் என்ன ஆனார்கள் என்று எதுவும் தெரியவில்லை என்று கூறினார்.
🌟 குருவே! அவன் இருக்குமிடம் எங்கே என்று கூறுங்கள். அவனை அழைத்து வருகின்றேன். அவனை வைத்து மக்களிடத்தில் புரட்சி செய்ய சொல்லி நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கக்கூடிய போலி அரசனை அரியணையில் இருந்து இறங்க செய்து அவனிடத்தில் ஆட்சி பொறுப்பை ஒப்படைப்பேன் என்று கூறினான் சீவகன்.
🌟 சீவகன் கொண்டிருக்கக்கூடிய வேகத்தினையும், துடிப்பையும் பார்த்த குரு அவசரப்படாதே. இன்னும் ஒரு வருஷம் போகட்டும். அதற்குப் பிறகு தான் இவனை எதிர்க்க முடியும் என்றார்.
🌟 சீவகன் தன்னுடைய ஆசிரியரை நோக்கி முதலில் அவனை எப்படித் தேடுவது? அதை சொல்லுங்கள் என்று கேட்டான்.
🌟 அவனை கண்டுபிடிப்பது மிகவும் எளிது என்று கூறினார். காலம் தாமதிக்காமல் நேராக உன்னுடைய வீட்டிற்கு போ. உன் வீட்டில் இருக்கக்கூடிய நிலைக்கண்ணாடி முன் நில், அதில் ஒருவன் நிழல் தோன்றும். அவன் தான் அந்த இளைஞன். சச்சந்தன் அரசனுக்கும், அவனுடைய மனைவிக்கும் பிறந்த உண்மையான அரச வாரிசு அவன்தான். அவன் பெயர்தான் சீவகன் என்று கூறினார்.
🌟 சற்றும் எதிர்பாராத இந்த பதிலைக் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தான். ஆசிரியர் கூறுவது உண்மையா? தன்னுடைய தந்தையும், தாயும் அவர்கள்தான் என்றால் இவர்கள் யார்? என்ற பலவிதமான கேள்விகளோடு எதுவும் பேச முடியாமல் நின்று கொண்டிருந்தான்.
🌟 தன்னுடைய மாணவன் என்ன எண்ணுகின்றான் என்பதைப் புரிந்து கொண்ட ஆசிரியரும் அவனுடைய ஐயத்தை போக்கும் விதத்தில் சில விஷயங்களையும் கூறத் துவங்கினார்.
குழந்தைக்கு பால் கொடுப்பது tail month மாமனிடமிருந்து பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுடுகாட்டில் பிணம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெருவெள்ளம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தென்னை மட்டையில் சிறுவன் தூங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? rent home சலீம் அலி புரட்டாசி மாதம் குலதெய்வக் கோவிலில் ஆடு பலியிட்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு காலதாமதம் உண்டாகும்? கடுகு கனவில் வந்தால் என்ன பலன்? திருமலை திருப்பதி கோவில் கோபுரத்தில் சிவன் உருவம் தெரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்திற்கு 2-ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்? வீட்டினுள் செங்குளவி கூடு கட்டுவது நன்மையா? தீமையா? சூனியத்தால் ஏற்படும் விளைவுகள் பழிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? Jeṉma saṉi.! உதவிகள் கிடைக்கும் வார ராசிபலன் (15.06.2020 -21.06.2020) PDF வடிவில் !! kanvu palangal