No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மயானத்தில் பிறந்த சிந்தாமணி...!!

Feb 01, 2023   Nandhini   165    சீவக சிந்தாமணி 


நேரில் தோன்றிய காவல் தெய்வம்...

🌟 நாம் வாழும் பொழுது என்னென்ன புண்ணியங்கள் செய்கின்றோமோ... அந்த புண்ணியங்களே அவர்களை காப்பாற்றும் என்பது போல, திக்கு தெரியாத அந்த மயானத்தின் நடுஇரவில் யாரும் இல்லாமல் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த பேதையின் இன்னல்களை காணமுடியாமல், புறக் காட்டில் காவல் தெய்வமாக இருந்துவந்த கர்மத்தின் கணக்கினை மாற்றி அமைக்கும் வல்லமை கொண்ட தெய்வமே மனித வடிவில் விசையையின் தோழியான சண்பகமாலை என்பவள் போல கூனி ரூபம் கொண்டு அவள் முன் தோன்றினாள்.

🌟 எங்கோ பழகிய முகம் போல தெரிகின்றது என்று விசையை எண்ணினாலும் தெய்வமே தன்னை காப்பதற்காக வந்திருக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டாள். ஏனென்றால் தான் இருப்பது எங்கே என்று தனக்கே தெரியாத போது தன்னுடைய தோழி இங்கே வந்திருப்பது என்பது மிகுந்த ஆச்சரியமும், அதிசயமாகவும் இருந்தது.

🌟 தெய்வமும் மானிட ரூபம் என்பது போல கருவில் இருக்கும் குழந்தையை வெளியே எடுப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தாள்.


🌟 மருத்துவர்கள் பலர் சூழ்ந்து இருந்து அலங்காரம் செய்யப்பட்ட படுக்கை அறையில் பிறக்க வேண்டியவன்... சாம்பலும், மணலும், எலும்புகளும் நிறைந்த மயானத்தில் பிறந்தான். பிறந்த அவனுடைய அழு குரலை கேட்டதும் அவள் அனுபவித்த அத்தனை வேதனைகளும், துன்பங்களும் கணப்பொழுதில் மறந்து உள்ளம் மகிழ்ந்தாள்.

🌟 இருள் சூழ்ந்த கரும்புகை நிறைந்த அந்த இடுகாட்டில் சிறு ஒளியான மின்னலைப் போன்றதொரு ஒரு மிகச்சிறிய ஆறுதல் அவளுக்கு ஏற்பட்டது. கணவனை இழந்த பேதையானவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற வழியும் பிறந்தது.

🌟 நாட்டை விட்டு தனித்து பிரிந்து எதிரிகளால் தேடப்பட்டு வரும் நிலையில் இருப்பவள், தன்னுடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த கணவனையும் இழந்தவள், சொல்ல முடியாத அளவில் துன்ப நிலையிலும், துயரத்திலும் ஆழ்ந்து இருக்கக்கூடியவள் தான் ஈன்றெடுத்த மகனைக் கண்டதும் மகிழ்ச்சி கொண்டாள்.

🌟 தன்னுடைய குழந்தையை கண்ணே! மணியே! என்று கொஞ்சி அழைக்காமல் தன்னுடைய வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய 'சிந்தாமணியே' என்று அழைத்து தன்னுடைய மகிழ்ச்சியை அந்த இன்னல்கள் நிறைந்த நிலையில் வெளிப்படுத்தினாள்.

🌟 கேட்டது தரும் கற்பகத்தரு போலவும், கேட்டது கொடுக்கும் காமதேனு போலவும் நல்கும் ஒளிமிக்க சிந்தாமணியாக அவன் அவளுக்கு விளங்கினான். தன்னுடைய குழந்தையிடத்தில் கொஞ்சி பேசி விளையாடக்கூடிய சூழ்நிலையிலும் அவள் இல்லை. அவள் உடல்நிலையும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று அஞ்சி நிற்கக்கூடிய சூழ்நிலையில் அவள் இருந்தாள்.

🌟 அவள் அருகில் சண்பகமாலை ரூபத்தில் நின்று கொண்டிருந்த தெய்வ ரூபம், அவளுடைய மனதில் ஓடிக் கொண்டே இருக்கக்கூடிய சிந்தனைகளின் ஓட்டங்களை புரிந்து கொண்டாள். அவளின் அருகில் சென்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கத் தொடங்கினாள்.

🌟 பூமியில் பிறந்த எவன் ஒருவனும் பிறப்பினால் உயர்வு அடைவதில்லை. அவன் வளருகின்ற சூழ்நிலையின் மூலமாகவே மேன்மை நிலையை அடைவான். உன்னுடைய குழந்தையை இவ்விடத்திலேயே விட்டுவிட்டு சென்றால், இங்கே இருக்கக்கூடிய வெட்டியான் எடுத்து சென்று வளர்ப்பான்.

🌟 ஒருவேளை தப்பித் தவறிப் போனாலும் அவன் அரிச்சந்திரனாக வளருவான். நீ அவனை வளர்க்க முற்பட்டால் உங்கள் இருவரின் விவரங்களையும் கட்டியங்காரன் அறிந்துகொண்டால் முளையிலேயே களை எடுத்து விடுவான். அதனால் இவனை சிறந்த ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது தான் நல்லது என்று கூறினாள்.

🌟 என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு இறைவனின் சொரூபமாக இருந்த அவளுடைய தோழி எடுத்துரைத்தது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக காட்டியது.

மயானத்தை நோக்கி திடீரென்று வந்த சத்தம்..

🌟 தன்னுடைய குழந்தையை செல்வ செழிப்புமிக்க ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணினாள். இப்பொழுது இருக்கும் நிலையில் தன்னால் எதுவும் செய்ய இயலாத தன்னுடைய இயலாமையை எண்ணி வருத்தம் அடைந்தாள்.

🌟 அப்பொழுது அந்த மயானத்தை நோக்கி ஒருவர் வந்து கொண்டு இருக்கும் சத்தத்தை இருவரும் அறிந்தனர். வந்து கொண்டு இருப்பவன் யார்? என்று முன்னரே அறிந்திருந்தாள் தெய்வ ரூபமாக இருந்த சண்பகமாலை.

🌟 சண்பகமாலை விசையையிடம் குழந்தையின் எதிர்காலம் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்றால் நான் கூறுவதை இப்போதே செய்ய வேண்டும் என்று கூறினாள்.

🌟 மனதில் குழப்பமும், வலியும் விழிகளில் தன்னுடைய புதல்வனை கண்டு கொண்டு இருக்கின்ற மகிழ்ச்சியான சூழலில் இருந்துவந்த விசையைக்கு வேறு வழியில்லாத காரணத்தினால் இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டாள்.

🌟 உடனே சண்பகமாலை விசையையிடம் இவ்விடத்தில் குழந்தையை வைத்து விட்டு இருவரும் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் மறைந்து கொள்வோம் என்று கூறினாள்.

🌟 இதை கேட்டதும் சற்றும் பொறுத்து கொள்ள முடியாத விசையை முடியாது, யாரும் இல்லாத பேய்கள் நிறைந்த இந்த இடுகாட்டில் என்னுடைய புதல்வனை தனியே விட்டு செல்வதா? முடியாது என்று மறுத்து கூறினாள்.


Share this valuable content with your friends


Tags

காதலர்களை பிரித்து மற்றவருக்கு திருமணம் செய்து வைப்பவர்களுக்கு எந்த பாவங்களின் வகைக்கு உள்ளாவார்கள்? today horoscope 06.04.2020 in pdf format பசு மாடு முட்டுகிற மாதிரி கனவு கண்டால் என்ன பலன்? கருநாகம் வலது கையை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வலதுக்கை விரலில் பல்லி விழுந்தால் என்ன பலன்? கிழிந்த துணியை தூக்கி எறிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நிறைய விலங்குகள் மெட்டி தொலைந்து போனால் கஷ்டங்கள் ஏற்படுமா? எதிர்பார்ப்புகள் நிறைவேறும் 7ம் வீட்டில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணைந்திருந்தால் என்ன பலன்? ஜூலை 02 தினசரி ராசிபலன் (24.02.2022) அர்த்தாஷ்டம சனி எந்த ராசிக்கு வரப்போகிறது?.. என்ன செய்யும்? march 16 காகமும் வீட்டிற்குள் வந்தால் நல்லதா? கெட்டதா? vaikunda egathaisi jothider question and anwer daily horoscope 18.04.2020 in pdf format ஆடி அமாவாசை Raagu