No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - எட்டுத் திக்கிலும் வெற்றி முரசு...!!!

Jan 31, 2023   Nandhini   151    சீவக சிந்தாமணி 


🌟 விசையை மயிலேறிச் செல்லும் விமானமானது பறக்கும் தட்டாகப் பறந்து சென்றது. அது நகர் விட்டு விண்ணில் புறநகர் நோக்கிச் சென்றது.

🌟 வீரத்தின் மூலமாக வெற்றி கொள்வது என்பது முடியாமல் நயவஞ்சகமாக செயல்பட்டு வெற்றி அடைந்தாலும் அதை மகிழ்ச்சியான முறையில் மாறு தட்டிக் கொண்டான். வெற்றி முரசு ஒலிகள் எட்டுத் திக்கிலும் ஒழிக்கப்பட்டன. துரோகத்தின் ஆளுமைக்கு கீழ் மக்கள் அனைவரும் அடிமையாகினர்.

🌟 புறநகர் பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்த விமானத்தில் இருந்த விசையை வெற்றி முரசொலியை கேட்டதும் நிகழ்ந்திருப்பது என்னவாக இருக்கும் என்பதை ஓரளவு கணித்துக் கொண்டாள். அவளுடைய கணிப்பு சரியாகும் விதத்திலேயே சிறிது கால இடைவெளியில் அவல ஒலியும் கேட்கத் துவங்கியது.

🌟 தன்னுடைய கணவன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அறிந்ததும் அவளுடைய உடலில் ஒருவிதமான பதற்றமும், இத்தனை நாள் தனக்கு துணையாக இருந்த தன்னுடைய கணவர் இல்லையே என்ற எண்ணமும் அவளுடைய செயல்பாடுகளை மறக்க வைக்க துவங்கியது.

தனித்து நின்ற விசையை:

🌟 இனி என்ன செய்யப் போகின்றோம்? தன்னுடைய கருவில் இருக்கக்கூடிய தன்னுடைய புதல்வனின் எதிர்காலம் என்னவாக இருக்கப் போகின்றது? இனி யார் நம்மை காப்பாற்றப் போகிறார்கள்? என்ற பலவிதமான கேள்விகள் அவளுடைய உள்ளத்தில் ஊற்றெடுக்க விமானத்தினை செலுத்த மறந்தாள்.

🌟 என்ன செய்வது என்பது புரியாமல் திகைத்து மெய்மறந்து நின்று கொண்டிருந்தாள். யாரும் இல்லாமல் தனியாக இருக்கக்கூடிய பேதை அல்லவா! அந்த சிந்தனைகளின் விளைவினால் அவள் எதையும் செய்ய முடியாத மயக்க நிலையை அடைந்தாள்.

🌟 விசையை மயங்கியதும் செலுத்த ஆளில்லாத விமானம் நீண்ட நேரமாக வானில் பறந்து கொண்டு பின்னர் மெல்ல மெல்ல நகரத்தின் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய வனங்கள் சூழ்ந்த, புகைகள் நிறைந்த மயான பகுதியில் இறங்கியது.

🌟 மன்னனைக் கொன்ற நம்பிக்கை துரோகியான கட்டியங்காரன், மன்னனின் துணைவியையும், அவள் வயிற்றில் இருக்கக்கூடிய கருவினையும் அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்தப்புரத்திற்குள் நுழைந்தான். அந்தப்புரத்தில் பல இடங்களிலும் தேடி மன்னனின் துணைவியை காணவில்லை.

🌟 பின்பு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை ஓரளவு யூகித்தான். குறுக்கு வழியில் வந்தவன் குறுக்கு வழியிலேயே செயல்படுவான் என்பதுபோல அந்தப்புரத்தில் இருந்த அனைவரையும் அழைத்து ஒவ்வொருவரையும் மிரட்டியும், கொலை செய்தும் அங்கு நிகழ்ந்தது என்ன என்பதை தெரிந்து கொண்டான்.

🌟 விமானம் செய்தவன் யாரென்று அறிந்து அவனை அழைத்து வந்து, விமானம் எங்கே சென்றிருக்கின்றது என்ற விபரங்களையும் கேட்டான். சிறிதும் ஆசைப்படாத விமானம் செய்தவன் துரோகமும், அதிகாரமும் நிரம்பியுள்ள கட்டியங்காரனின் முன்னிலையில் எதையும் உரைக்காமல் வீழ்ந்தான்.

🌟 பின்பு தன் படைகளை நாலாபக்கமும் அனுப்பி மன்னனுடைய மனைவியை கொலை செய்வதற்கு உண்டான அனைத்து அதிகாரங்களையும் கொடுத்தனுப்பினான். படைகளும் எட்டுத் திக்கிலும் பரவி சென்றன.

🌟 மயக்க நிலையிலிருந்து தெளிந்த விசையை வயிற்றின் உள்ளிருந்த கருவானது துரோகமும், ரோகமும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த உலகத்திற்கு வர துடித்தது.

🌟 கதிரவன் மறைந்து இருள் சூழ்ந்த பகுதியாக விமானம் இருந்த இடம் மாறியது. அழகில் சிறந்த ஆடவர்களின் பாடல் மற்றும் ஆடல்களை கண்டவள் பேய்கள் நடனம் ஆடும் கூத்துகளையும் கண்டாள்.


🌟 அவற்றின் நிழல்கள் அசைந்து ஆடிக் கொண்டிருந்தன. இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள் அலறின. கோட்டன்கள் கூவிக் கொண்டிருந்தன. நரிகள் அனைத்தும் ஊளையிட்டு கொண்டிருந்தன.

🌟 வாழ்வில் இதுவரை காணாத அமங்கலம் நிறைந்த இந்த காட்சிகளையும், ஒலிகளையும் கேட்ட பின்பு இனி தன்னுடைய வாழ்க்கையின் கடைசி நொடி அடைந்து விட்டோம் என்பதை உணரத் துவங்கினாள்.

🌟 ஆனால் அவளுடைய வயிற்றிலிருந்த கருவானது முற்றிய நிலையில் வெளிவர துவங்கியது. வலியும், வேதனைகளும் நிறைந்த அந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்கு என்று யாரும் இல்லாத அந்த வேளையில் உச்சக்கட்ட துன்ப நிலையை அனுபவித்துக் கொண்டிருந்தாள். செய்த கர்மம் விடாது நிழல்போல அவளையும் பின்தொடர்ந்தது.


Share this valuable content with your friends