1. எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள். இருவருக்கும் கும்ப ராசி, சதயம் நட்சத்திரம். இவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 எளிதில் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.
🌟 காரியத்தில் வல்லவர்கள்.
🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.
🌟 நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.
2. நான் ரிஷப ராசி, லக்னத்திலிருந்து 8ம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 நீண்ட ஆயுளை உடையவர்கள்.
🌟 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.
🌟 முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உடையவர்கள்.
🌟 இவையாவும் பொது பலன்கள் ஆகும்.
3. ராகு, கேது மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சுத்த ஜாதகம் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்ளலாமா?அவ்வாறு திருமணம் செய்தால் உயிர் இழப்பு ஏற்படுமா?
🌟 ராகு, கேது மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சுத்த ஜாதகம் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அவ்வாறு திருமணம் செய்தால் உயிர் இழப்பு என்பது இருக்காது.
🌟 ஒருவரின் மரணம் என்பது அவரவர் சொந்த ஜாதகத்தை பொறுத்தே அமையும்.
4. வீட்டிற்குள் நல்ல பாம்பு வந்தால் நன்மையா? தீமையா?
🌟 வீட்டிற்குள் நல்ல பாம்பு வந்தால் நல்லதன்று.
5. கோவிலில் தேங்காய் அழுகியவாறு உடைந்தால் நன்மையா? தீமையா?
🌟 கோவிலில் தேங்காய் அழுகியவாறு உடைந்தால் எதிர்பார்த்த காரியங்களில் சில காலதாமதங்களுக்குப் பின் எண்ணிய வெற்றி கிடைக்கும்.