1. வீட்டில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றலாமா?
🌟 வீட்டில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றலாம்.
2. கரிநாட்களில் வேறு வீட்டிற்கு குடிப்போகலாமா?
🌟 கரிநாட்களில் வேறு வீட்டிற்கு குடிப்போகக்கூடாது.
🌟 கரிநாட்களில் செய்யும் எந்த சுபச்செயலும் நற்பலனைத் தராது.
3. அஷ்டமி, நவமி மற்றும் கரிநாள் என்றால் என்ன? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
🌟 அஷ்டமி என்பது எட்டாவது திதியாகும். இது சுபமான திதியல்ல. அஷ்டமி திதியில் சுபச்செயல்கள் செய்வதை தவிர்க்கவும்.
🌟 நவமி என்பது ஒன்பதாவது திதியாகும். இது சுபமான திதி என்பதால் அன்று சுபகாரியங்கள் செய்யலாம்.
🌟 ஒருநாள் முழுமையாக தன் சுபத்தன்மையை இழக்கும் நாளே கரிநாள் எனப்படும். கரிநாள் சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற நாள் அல்ல. கரிநாளில் செய்யும் சுப நிகழ்ச்சிகள் மத்திமமான பலனைத் தரும்.
4. இரவில் தூக்கத்தின் போது தாலிக்கயிறு அறுந்து கீழே விழுந்துவிட்டது. இதற்கு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
🌟 தூக்கத்தில் இருக்கும் போது தாலிக்கயிறு அறுந்தால் அதற்கு ஏதும் பரிகாரம் இல்லை. தாலி கயிற்றை மாற்றி அணிந்துக்கொள்ளலாம்.
5. தாய், தந்தை மற்றும் பங்காளி இவர்களின் இறப்பிற்கு பின் எத்தனை நாட்களுக்குப் பிறகு கோவில் விஷேசங்களில் கலந்து கொள்ளலாம்?
🌟 தாய் இறந்து ஆறு மாதத்திற்குப் பிறகும், தந்தை இறந்து ஒரு வருடத்திற்குப் பிறகும் கோவில் விஷேசங்களில் கலந்து கொள்ளலாம்.
🌟 பங்காளி இறந்தால் உறவு நிலைக்கு ஏற்ப பெரியோர்களை கேட்டு அதை பின்பற்றவும்.
6. கும்ப ராசியில் குரு இருந்தால் என்ன பலன்?
🌟 வாக்குவன்மை உடையவர்கள்.
🌟 கொள்கை பிடிப்பு குணம் உடையவர்கள்.
🌟 கிடைப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள்.
🌟 வாதாடுவதில் வல்லவர்கள்.
🌟 நம்பிக்கைக்கு உரியவர்கள்.
🌟 இவையாவும் பொது பலன்கள் ஆகும்.