1. நிலைகால் வைத்த பிறகு குழந்தைக்கு மொட்டை அடிக்கலாமா?
🌟 புதிய வீடு கட்டி முடித்து, கிரகப்பிரவேசம் முடிந்த பிறகு குழந்தைக்கு மொட்டை அடிக்கலாம்.
2. கால பைரவருக்கு பூசணிக்காயில் விளக்கு போடுவது எப்படி?
🌟 பூசணிக்காயை இரண்டாக அறுத்து அதன் சதைப்பற்று உள்ள பகுதியில் அகல் விளக்கு அளவில் சதைப்பற்றை நீக்கி, அதில் வீட்டில் இருந்து எடுத்துச்சென்ற எண்ணெயை நிரப்பி எவருக்கும் பாதிக்காத வகையில் விளக்கு ஏற்றி வழிபடவும்.
3. அண்டங்காக்கை வீட்டிற்கு வருவது நல்லதா? கெட்டதா?
🌟 அண்டங்காக்கை வீட்டிற்கு வருவது நல்லது.
4. மணமகனை விட மணமகள் ஐந்து மாதங்கள் பெரியவராய் இருந்து பொருத்தம் அமைந்தால் திருமணம் செய்யலாமா?
🌟 நடைமுறையில் இது சாத்தியமாக உள்ளதால் மணமகனை விட மணமகள் ஐந்து மாதங்கள் பெரியவராய் இருந்து பொருத்தம் அமைந்தால் திருமணம் செய்யலாம்.
🌟 ஆனால் சாஸ்திர முறைப்படி ஆண் மூத்தவராகவும், பெண் இளையவராகவும் இருக்க வேண்டும்.
5. முதல் திருமணம் தோல்வி அடைந்தது. இரண்டாம் திருமணம் நல்ல முறையில் நடக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
🌟 திருச்செங்கோடு மலையில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரரை முழு மனதுடன் வணங்கி வர திருமணத்தில் இருந்த தடைகள் யாவும் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
6. காமாட்சி விளக்கை மகளுக்கு தானம் தரலாமா?
🌟 காமாட்சி விளக்கை மகளுக்கு தானம் தரலாம்.
🌟 மகளின் இல்வாழ்க்கை செழிப்புடன் இருக்கும்.
7. குழந்தை பிறந்து எத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்கு செல்ல வேண்டும்?
🌟 குழந்தை பிறந்து 16 நாட்கள் கழித்து கோவிலுக்கு செல்லலாம்.