கேள்வி பதில் :
1. ரயில்பாதை அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
🏠 ரயில் செல்லும் பொழுது அதனுடைய அதிர்வுகளால் எளிதில் கட்டிடங்கள் பலம் இழந்து விடும். அதனால் ரயில்பாதையின் அருகில் குடியிருக்கக்கூடாது என்பார்கள்.
2. மேம்பாலங்கள் இருக்கும் இடங்களில் குடியிருப்பு இருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
🏠 நம்முடைய இடத்திற்கு மிக அருகில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான மேம்பாலங்கள் வருவது கண்டிப்பாக தவறு.
3. செல்போன் மற்றும் மின்சார கோபுரங்களுக்கு கீழ் வீடு கட்டக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
🏠 செல்போன் மற்றும் மின்சார கோபுரத்தில் ரேடியேஷன் கதிர்கள் அதிகமாக இருப்பதால் அதன் அருகில் குடியிருக்கக்கூடாது என்பார்கள்.
🏠 அதேபோல் நம்முடைய இடத்திற்கு மிகவும் அருகில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் செல்போன் கோபுரங்கள் மற்றும் மின்சார கோபுரங்கள் வருவது முற்றிலும் தவறு.
4. கோவில் கோபுரங்களின் நிழல் விழும்படியான இடத்தில் குடியிருப்பு இருக்கக்கூடாது என்கிறார்களே, அதற்கான காரணம் என்ன?
🏠 நம்முடைய இடத்திற்கு மிகவும் அருகில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான கோபுரம் வருவது முற்றிலும் தவறு. மற்ற இடங்களில் தாராளமாக குடியிருக்கலாம்.
5. மயானம் அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
🏠 மனிதனின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நலன் கருதியே மயானம் அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள்.
6. மலைகள், குன்றுகள் உள்ள இடங்களில் குடியிருப்பு இருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
🏠 நம்முடைய இடத்திற்கு மிக அருகில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உயரமான மலைகள், குன்றுகள் வருவது மிக மிகத் தவறு. காரணம் சூரியனிடமிருந்து வரக்கூடிய உயிர் சக்தி நமக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டு ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகள் வரக் காரணமாகிவிடும்.