1. ஜோதிடரை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 ஜோதிடரை கனவில் காண்பது சுபமானது அல்ல.
2. யானை துரத்துவது போல் அடிக்கடி கனவு வருகிறது. இது நல்லதா? கெட்டதா?
🌟 யானை துரத்துவது போல் அடிக்கடி கனவு வருவது நல்லதன்று.
🌟 யானை துரத்துவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில பிரச்சனைகளால் மன வருத்தங்கள் நேரிடலாம்.
3. பழங்களை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பழங்களை கனவில் கண்டால் தொழிலில் மாற்றம் உண்டாகும்.
🌟 ஆகவே, வீண் செலவுகளை தவிர்ப்பதால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.
4. கழுதை கடித்த மாதிரி கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 கழுதை கடித்த மாதிரி கனவில் கண்டால் துன்பங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
5. எனது தங்கை இறந்து விடுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
🌟 உங்கள் தங்கை இறந்து விடுவது போல் கனவு கண்டால் தங்கையின் மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கும்.
🌟 புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
🌟 மேலும், எண்ணிய எண்ணங்கள் நல்லமுறையில் ஈடேறும்.
6. அதிகாலையில் என் உடல் முழுவதும் அம்மை இருப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் அம்பிகையின் வேண்டுதல்களை சரிவர நிறைவேற்றப்படவில்லை என்பதை குறிக்கிறது.
🌟 ஆகவே, வேண்டுதல்களை சரிவர நிறைவேற்றினால் அனுகூலம் கிடைக்கும்.
🌟 மேலும், அம்பிகையின் அம்சத்தை வணங்கி வர சுபிட்சம் உண்டாகும்.