கேள்வி :
வீட்டில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் தொடர்ந்து தீ விபத்து ஏற்படுவதற்கும், வாஸ்துவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
பதில் :
வீட்டின் காம்பவுண்ட்-க்கு உள் பகுதியில் மாட்டுத் தொழுவம் அமைத்திருக்க வாய்ப்புண்டு.
1. தென்கிழக்கில் மாட்டுத் தொழுவம் மற்றும் அதோடு சேர்த்து சோளத்தட்டு குவியல் வைத்திருப்பீர்கள்.
2. சோளத்தட்டு குவியலும், மாட்டுத் தொழுவத்தின் கொட்டகை அமைப்பும் வீட்டை விட உயரமாக இருக்க வாய்ப்புண்டு.
3. தென்கிழக்கில் காம்பவுண்ட், வீடு இரண்டையும் சேர்த்து மூடிய அமைப்பில் மாட்டுத் தொழுவத்தை உருவாக்கி இருப்பீர்கள்.
4. தென்கிழக்கில், தெற்குப்பகுதி அதிகப்படியான வளர்ச்சியிலும் கூட மாட்டுத் தொழுவத்தை உருவாக்கி இருப்பீர்கள்.
மேற்கூறிய இந்த அமைப்பில் வீட்டு மாட்டுத் தொழுவத்தை அமைத்து வைத்திருந்தால் தீ விபத்து என்பது தொடர்ந்து நடந்த வண்ணமே இருக்கும். அதோடு இல்லாமல் திருட்டு, போலீஸ் கேஸ், கோர்ட் விவகாரங்கள் போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும்.
தென்கிழக்கு பகுதியில் தவறு ஏற்படும்போது அந்த வீட்டில் உள்ள பெண்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
🌸 திருமணத்தடை
🌸 குழந்தைப்பேறு
🌸 வேலையின்மை
🌸 கணவன், மனைவி உறவில் விரிசல்
🌸 கருச்சிதைவு
🌸 கர்ப்பப்பை தொடர்பான பல பிரச்சனைகள்
🌸 வீட்டில் உள்ள அனைவருக்கும் வயிற்றுப் பகுதியில் நிரந்தர நோய் ஏற்படுதல்
🌸 ரத்த சோகை
🌸 ரத்த நாளங்களில் பிரச்சனை
🌸 புற்றுநோய் போன்ற கொடிய நோய் தாக்குதல்
🌸 தீ விபத்தில் உயிர் சேதம்
🌸 மின்சார ஷாக் அடித்து உயிர்சேதம்
🌸 விஷவாயு தாக்கி உயிர் சேதம்
🌸 எரிவாயு தாக்கி உயிர் சேதம் ஏற்படுதல்
பயோ கேஸ் அல்லது சாண எரிவாயு :
மாட்டுத் தொழுவம் உள்ள பெரும்பாலான வீடுகளில் இன்றும் சாண எரிவாயு அமைப்பானது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சாண எரிவாயு கலனை காம்பவுண்ட்-க்குள் எந்த ஒரு பகுதியிலும் வைக்கக்கூடாது. எந்த ஒரு பகுதியில் அமைத்தாலும் அது மிக கெடுதலான மோசமான பலனையே ஏற்படுத்துகிறது.
இதை தவிர்ப்பதற்கு காம்பவுண்ட்-க்கு வெளிப்பகுதியில் தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் அமைத்துக்கொள்ளலாம். அது கெடுதலான பலனை ஏற்படுத்துவதில்லை மாறாக சிறப்பான விஷயங்கள் எதையும் தருவதில்லை.