No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜாதகத்தில் பூர்வீகம் ஆகாது என்றால் என்ன செய்வது?

Sep 18, 2018   Ananthi   1546    வாஸ்து 

கேள்வி : பூர்வீகத்தை விட்டுவிட்டு தொழிலுக்காக வேறு ஊருக்கு சென்று, மீண்டும் இப்போது பூர்வீகத்திற்கு போய்விடலாம் என்று நினைத்தால், ஜாதகத்தில் பூர்வீகம் ஆகாது என்கிறார்கள். இதற்கு என்ன செய்வது?

பதில் : ஜாதக அமைப்பில் 9ம் இடம் பூர்வ புண்ணியம் என்று கூறுவார்கள். அதேபோல் தந்தை வழி சொந்தங்களையும், சொத்துக்களையும் குறிக்கக்கூடியது. இந்த 9ம் இடத்தில் உள்ள கிரக, நட்சத்திர தொடர்புகளை வைத்து ஒருவருக்கு பூர்வீகம் ஆகும், ஆகாது என்கிற பதிலை உங்களுடைய ஜாதகம் கூறும். அதேபோல் உங்களுடைய ஜாதகத்தில் 4ம் இடத்தில் உள்ள கிரக, நட்சத்திர தொடர்புகளை வைத்து ஒருவர் வாடகை வீட்டில் இருப்பாரா? கூரை வீட்டில் இருப்பாரா? ஓட்டு வீட்டில் இருப்பாரா? மாடிவீட்டில் இருப்பாரா? போன்ற விபரங்களை உங்களுடைய ஜாதகம் கூறும்.

இங்கு குறிப்பிடும் படியான அமைப்புகள் உங்களது பூர்வீக வீட்டில் இருக்கக்கூடும்.

அவைகள் :

தென்மேற்கு தவறுகளான,

1. தென்மேற்கில் கிணறு, போர், சம்ப் போன்ற அமைப்புகள் வருவது

2. தென்மேற்கில் கழிவறை, மலக்குழிகள் வருவது

3. தெற்கு, மேற்கு பகுதியில் காம்பவுண்ட் இல்லாத அமைப்பு

4. தென்மேற்கு, தெற்கு முக்கிய வாசல்

5. தென்மேற்கில் Hall அமைப்புகள்

6. தென்மேற்கில் பூஜையறை வருவது

7. தென்மேற்கில் தெருக்குத்து, தெருப்பார்வை வருவது போன்றவைகள்

வடகிழக்கு தவறுகளான,

1. வடகிழக்கு முழுவதும் மூடிய அமைப்பில் இருப்பது

2. வடகிழக்கில் கழிவறை மலக்குழிகள் வருவது போன்ற அமைப்புகள்

3. வடகிழக்கில் சமையலறை, பூஜையறை வருவது

4. வடகிழக்கில் உயரமான அமைப்பில் தண்ணீர் தொட்டி வருவது

5. வடகிழக்கில் உள்பகுதி, வெளிப்பகுதி இருபக்கமும் மாடிப்படி அமைப்புகள் வருவது.

வடமேற்கு தவறுகளான,

1. வடமேற்கு, வடக்கு தெருக்குத்து, தெருப்பார்வை வருவது

2. வடமேற்கில் கிணறு, போர், சம்ப் போன்ற அமைப்புகள் வருவது

3. வடமேற்கில் உள்ள மூலையில் படி அமைப்புகள் வருவது

4. நான்கு புறமும் காம்பவுண்ட் இல்லாத அமைப்புகள்

5. தென்மேற்கு, மேற்கில் முக்கிய வாசல் அமைப்புகள் இருப்பது.

மேற்குறிப்பிட்ட அமைப்புகள் உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடும். இந்த தவறுகளை சரி செய்யாவிட்டால் நீங்கள் பூர்வீக வீட்டிற்கு போவது கடினம். உங்களுடைய வீட்டை சரி செய்யும்போது உங்களுடைய வாழ்க்கையே மாற்றி அமைக்கப்படும்.


Share this valuable content with your friends


Tags

ஆவாரம் பூ பறிப்பதாக கனவு கண்டால் என்ன பலன்? இனிப்பு பண்டங்களை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கருட பகவான் சந்திராஷ்டமம் அன்று கடன் வாங்கலாமா? அம்மாவை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (04.05.2020) ஜங்ஷன் சமுதாயத்திற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள் இவர்களே! முதல் ஜாம பூஜை தொடங்குதல் டிசம்பர் 08 vaigunda yeegathasi ammavasai ஜாதகத்தில்... ராகு இங்கு இருந்தால்... வெற்றி மேல் வெற்றி... யாருக்கு? 2 வயது கைரேகையின் மூலம் ஒருவரின் எதிர்காலம் மற்றும் இறந்த காலத்தை அறிந்து கொள்ள இயலுமா? தினசரி ராசிபலன்கள் (26.06.2020) பெருச்சாளியை கனவில் கண்டால் என்ன பலன்? agriculture மரண யோகத்தில் குழந்தை பிறக்கலாமா? லக்னத்தில் செவ்வாய் இருந்தால்... அவர்களின் குணம் எப்படி இருக்கும்?