1. பூமியில் இருந்து நீர் கொப்பளித்து கொண்டு மேலே வருவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
🌟 பூமியில் இருந்து நீர் கொப்பளித்து கொண்டு மேலே வருவது போல் கனவு காண்பது தடைபட்ட செயல்களால் வர வேண்டிய பொருள் வரவு கூடிய விரைவில் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.
2. எதிரியை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 எதிரியை அடிப்பது போல் கனவு கண்டால் உங்களின் திறமைகளை நீங்கள் அறியாமல் இருப்பதை உணர்த்துகிறது.
3. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 நாய் துரத்துவது போல் கனவு கண்டால் செய்யாத குற்றத்திற்காக மனம் வருந்துவீர்கள் என்பதை குறிக்கின்றது.
4. கண் தெரியாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 கண் தெரியாமல் போவது போல் கனவு கண்டால் புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
5. தென்னை மரத்தில் நிறைய பாலைகள் இருப்பதாக கனவு கண்டால் என்ன பலன்?
🌟 தென்னை மரத்தில் நிறைய பாலைகள் இருப்பதாக கனவு கண்டால் முன்னேற்றம் உண்டாகும்.
6. பாம்பு காலினை சுற்றி தீண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பாம்பு காலினை சுற்றி தீண்டுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களால் ஏற்படும் விளைவுகள் மற்றவர்களை மட்டுமல்லாமல் உங்களையும் பாதிக்கக்கூடும் என்பதை உணர்த்துகிறது.
🌟 எனவே, செய்யும் செயல்களை பற்றியும், அதன் விளைவுகளை பற்றியும் நன்கு அறிந்து செயல்படவும்.