No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Aug 31, 2018   Ananthi   22942    கனவு பலன்கள் 

1. பூமியில் இருந்து நீர் கொப்பளித்து கொண்டு மேலே வருவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 பூமியில் இருந்து நீர் கொப்பளித்து கொண்டு மேலே வருவது போல் கனவு காண்பது தடைபட்ட செயல்களால் வர வேண்டிய பொருள் வரவு கூடிய விரைவில் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.

2. எதிரியை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எதிரியை அடிப்பது போல் கனவு கண்டால் உங்களின் திறமைகளை நீங்கள் அறியாமல் இருப்பதை உணர்த்துகிறது.

3. நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் துரத்துவது போல் கனவு கண்டால் செய்யாத குற்றத்திற்காக மனம் வருந்துவீர்கள் என்பதை குறிக்கின்றது.

4. கண் தெரியாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கண் தெரியாமல் போவது போல் கனவு கண்டால் புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

5. தென்னை மரத்தில் நிறைய பாலைகள் இருப்பதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தென்னை மரத்தில் நிறைய பாலைகள் இருப்பதாக கனவு கண்டால் முன்னேற்றம் உண்டாகும்.

6. பாம்பு காலினை சுற்றி தீண்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு காலினை சுற்றி தீண்டுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களால் ஏற்படும் விளைவுகள் மற்றவர்களை மட்டுமல்லாமல் உங்களையும் பாதிக்கக்கூடும் என்பதை உணர்த்துகிறது.

🌟 எனவே, செய்யும் செயல்களை பற்றியும், அதன் விளைவுகளை பற்றியும் நன்கு அறிந்து செயல்படவும்.


Share this valuable content with your friends