திருப்பதி கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
Aug 25, 2018 Ananthi 19063 கனவு பலன்கள்
1. உயிருடன் இருப்பவர் இறக்கும் தருவாயில் உள்ளது போல் கனவு கண்டால் என்ன பலன்?
✴ உயிருடன் இருப்பவர் இறக்கும் தருவாயில் உள்ளது போல் கனவு கண்டால் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் கூடிய விரைவில் நீங்கும்.
2. நான் குங்குமம் வாங்குவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
✴ குங்குமம் வாங்குவது போல் கனவு கண்டால் சுபம் உண்டாகும்.
3. திருப்பதி கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
✴ திருப்பதி கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் மாற்றமான சூழலால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
4. பணத்தை பங்கு பிரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
✴பணத்தை பங்கு பிரிப்பது போல் கனவு கண்டால் பணப்பற்றாக்குறையால் நெருக்கடியான சூழல் உண்டாகும்.
5. நான் இறந்து போய் ஆற்றில் கிடக்கும்போது மீன்கள் என்னை கொரித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
✴ இந்த மாதிரி கனவு கண்டால் பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
✴ சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.
6. என்னை தீ வைத்து கொளுத்துவது போல் கனவு கண்டால் நல்லதா? கெட்டதா?
✴ உங்களை தீ வைத்து கொளுத்துவது போல் கனவு கண்டால் நல்லது. வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்பதை உணர்த்துகிறது.