1. என்னுடைய மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணுடன் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
🌟 புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று கவனத்துடன் இருக்கவும்.
2. ஒரு குழந்தையை கையில் எடுப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
🌟 குழந்தையை கனவில் காண்பது சுபிட்சமாகும்.
🌟 புதிய பொருட்சேர்க்கை மற்றும் பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வு போன்ற சுபச் செயல்கள் நடைபெறும்.
3. எனது ஜாதகம் கிழிந்து போவதாக கனவு கண்டால் என்ன பலன்?
🌟 உங்களின் ஜாதகம் கிழிந்து போவதாக கனவு கண்டால் சுபச் செய்திகள் விரைவில் நடைபெறும்.
🌟 உங்களின் மீது இருந்த அவப்பெயர்கள் நீங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
4. என் மனைவியின் கனவில் அடிக்கடி பாம்பு வருகிறது என்று கூறுகிறார். இதற்கு என்ன பலன்?
🌟 பாம்பை கனவில் காண்பது நெருங்கிய நண்பர்கள் மூலம் மனக்கசப்புகளோ அல்லது பொருள் இழப்போ ஏற்படும் என்பதை குறிக்கிறது.
🌟 புதிய சூழலால் சில சங்கடங்கள் உண்டாகும்.
5. நெருங்கிய நபர்கள் நம்மை பார்க்காமல் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 உங்களை வருத்திக் கொண்டிருந்த கவலைகள் கூடிய விரைவில் நீங்கும்.
🌟 அனைவரிடமும் நிதானமாகவும், அனுசரித்தும் நடந்து கொள்ளவும்.
6. மலத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 மலத்தை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.
7. பேய்-யுடன் சண்டை போடுவது போல் அடிக்கடி கனவு வருகிறது. இதற்கு என்ன பலன்?
🌟 பேய்-யுடன் சண்டை போடுவது போல் அடிக்கடி கனவு வந்தால் மனதில் மறைத்து வைத்திருந்த ரகசியம் வெளிப்படும் என்பதை உணர்த்துகிறது.