பஞ்சமி திதியில் தொழில் தொடங்கலாமா?
Mar 10, 2020 Ananthi 310 ஜோதிடர் பதில்கள்
1. பஞ்சமி திதியில் தொழில் தொடங்கலாமா?
🌟 பஞ்சமி திதியில் தொழில் தொடங்கலாம்.
2. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 எதிலும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
🌟 வைராக்கியம் உடையவர்கள்.
🌟 குறுகிய மனப்பான்மையை கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. வானத்தில் மின்னல் தோன்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை அளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.
4. வீட்டில் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
5. சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 சிவலிங்கத்தை கனவில் கண்டால் வாழ்க்கையை பற்றிய புரிதல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
6. குரு திசை நடந்தால் என்ன பலன்?
🌟 குரு பலம் பெற்று திசை நடத்தினால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
🌟 வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.
🌟 அரசுவழியில் அனுகூலமான சூழல் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.