1. லக்னத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?
🌟 முன்கோபம் உடையவர்கள்.
🌟 பிறருக்கு உதவும் மனப்பான்மை உடையவர்கள்.
🌟 பல துறைகளை பற்றிய அறிவும், ஞானமும் உடையவர்கள்.
🌟 எதையும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.
2. குரு மகா திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 வாகன யோகம் மேம்படும்.
🌟 புதிய மனை வாங்கும் முயற்சிகள் கைகூடும்.
🌟 இல்வாழ்க்கையின் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.
🌟 உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
3. பிறப்பு ஜாதகத்தில் உள்ள மாங்கல்ய தோஷத்திற்கு பரிகாரம் உண்டா? திருமணத்திற்கு பின் தெரிந்தால் என்ன செய்வது?
🌟 மாங்கல்ய தோஷத்திற்கு பரிகாரம் இருக்கின்றது. முதலில் குலதெய்வ வழிபாட்டை முடிந்தளவு மேற்கொண்டு வரவும்.
🌟 பின்பு ஸ்ரீரங்கம், ஸ்ரீ அரங்கநாதரை வெள்ளிக்கிழமையன்று சென்று மனமுருகி வழிபட்டு வரவும்.
4. ராகு திசை, புதன் புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
🌟 ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.
🌟 குடும்பத்தில் புதியவர்களின் வருகை ஏற்படும்.
🌟 தொழில் சம்பந்தமான போட்டிகள் அதிகரிக்கும்.
5. குரு, சனி சேர்ந்து கன்னி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?
🌟 நல்ல சிந்தனையும், அமைதியான நடவடிக்கையையும் உடையவர்கள்.
🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் உடையவர்கள்.
🌟 நிர்வாக திறமை உடையவர்கள்.
🌟 எடுத்தச் செயலை முடிக்க வேண்டும் என்ற திண்மை கொண்டவர்கள்.
6.பஞ்சமி திதியில் பெண் குழந்தை பிறந்தால் என்ன பலன்?
🌟 நண்பனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு காண்பது விரயச் கலைகளின் மேல் ஆர்வம் உடையவர்கள்.
🌟 நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
🌟 கற்பனை வளம் உடையவர்கள்.
🌟 கருணை மனப்பான்மை உடையவர்கள்.
7. முதுகின் நடுவில் கறுப்பு மச்சமிருந்தால் என்ன பலன்?
🌟 செல்வாக்கும், செல்வமும் உடையவர்கள்.
🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.
🌟 அனைவரையும் அனுசரித்து நடக்கக்கூடியவர்கள்.