1. சிம்ம லக்னத்திற்கு ராகு திசை நடந்தால் என்ன பலன்?
💥 செய்யும் தொழிலில் முன்னேற்றமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும்.
💥 எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.
💥 குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் மேம்படும்.
2. காலபைரவரின் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?
💥 கோப வடிவம் இல்லாத சாந்த வடிவத்தில் உள்ள காலபைரவரின் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாம்.
3. எனக்கு இடது கண் புருவத்தின் நடுவில் மச்சம் உள்ளது. இது நன்மையா? தீமையா?
💥 ஆணாக இருக்கும் பட்சத்தில் இடது புருவத்தின் நடுவில் மச்சம் இருந்தால் முன்கோபம் உடையவர்கள்.
💥 எவரின் ஆலோசனையையும் எளிதில் ஏற்க மாட்டார்கள்.
💥 பெண்ணாக இருக்கும் பட்சத்தில் ஏழ்மை நிலையிலும், சிறந்த குணங்களை உடையவர்கள்.
4. சனி மகா திசை, குரு புத்தி நடந்தால் என்ன பலன்?
💥 தொழில் முனைவோர்க்கு வேலையாட்களால் சாதகமான பலன்கள் அமையும்.
💥 பொருட்சேர்க்கையும், ஆடைச் சேர்க்கையும் உண்டாகும்.
💥 உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
💥 மனைவி மற்றும் உறவினர்களுக்கிடையே பிரிவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
5. திருமணப்பொருத்தத்தில் 10க்கு 8 பொருத்தம் உள்ளது. ஆனால், யோனிப்பொருத்தம் இல்லை. திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாதா?
💥 பாவக ரீதியான ஆய்வுகள் சாதகமாக இருப்பின் தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.
6. மூலம் நட்சத்திரக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
💥 ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்கள்.
💥 சிறந்த பேச்சுத்திறனை உடையவர்கள்.
💥 தைரியத்துடன் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளக்கூடியவர்கள்.
7. வீட்டில் தேனீக்கள் கூடு கட்டினால் என்ன பலன்?
💥 வீட்டில் தேனீக்கள் கூடு கட்டுவது என்பது நல்லதல்ல.
💥 ஏனெனில், கூடு கலைந்தால் வீட்டில் உள்ளோருக்கு தேனீக்களால் தீங்கு நேரிடலாம்.
💥 தேன்கூடு வீட்டின் பின் பக்கத்தில் உள்ள மரங்களில் இருப்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.