🏠ஒருவருக்கு குலம் செழிக்க குலதெய்வம் எப்படி முக்கியமோ அதுபோல, குலம் காக்க நிச்சயம் அந்த வீட்டில் ஒரு குழந்தை எனும் தெய்வம் வேண்டும்.
🏠இவ்வுலகில் ஒருவர் எவ்வளவு பணம், பொருள், புகழ் என அனைத்தும் வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் குழந்தைச் செல்வம் இல்லையெனில் அதைவிட மிகப்பெரிய துன்பம், துயரம் வேறு ஏதுமில்லை. இதில் ஆண்களைவிட பெண்கள் சந்திக்கும் அவமானங்கள் மிக கொடியது.
🏠ஒரு வீட்டிற்கு அனைத்து திசைகளும் மிக முக்கியம். அதில் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதி குழந்தை பிறப்பை உறுதி செய்யும் திசைகளாகும். வீட்டின் தென்கிழக்கு என்பது பெண்கள் தொடர்பான இடமாகும். ஆகையால், அங்கு சமையலறை அமைத்து நம் முன்னோர்கள் வாழ்ந்தனர். அதேபோன்று தென்மேற்கு திசையில்தான் கணவன், மனைவி உறங்கும் படுக்கையறை இடமாக இருக்க வேண்டும். இவை இரண்டு திசைகளும் குழந்தை பிறப்பை உறுதி செய்யும்.
🏠ஒரு வீட்டில் குழந்தை இல்லை என்பதை விட குழந்தை பிறப்பு தாமதமாகுதல் என கொள்ளலாம். வாஸ்து தவறுகள் கீழ்க்கண்ட அமைப்பில் இருக்கலாம்.
🏠வீட்டின் தென்கிழக்கு பகுதியில் கழிவறை அல்லது பள்ளம் போன்ற அமைப்புகள்.
🏠தென்கிழக்கு நீண்டு அல்லது கட் போன்ற அமைப்புகள்.
🏠வடகிழக்கு பகுதி மூடிய அல்லது உயர்ந்த அமைப்புகள்.
🏠வடமேற்கு படிக்கட்டு அடியில் கழிவறை அமைப்பு.
🏠படுக்கை அறை வடமேற்கு இருந்து, அங்கு கணவன், மனைவி உறங்குவது.
🏠தென்மேற்கு படுக்கையறையில் தென்கிழக்கு கழிவறை அல்லது தென்மேற்கில் பூஜையறை போன்ற அமைப்பு வருவது.
🏠மேலும், இதுபோன்ற சில தவறுகள் இருப்பின் அதை சரி செய்து உங்கள் வீட்டில் மழலை செல்வம் விளையாட வாழ்த்துக்கள்.