1. மிதுன லக்னத்திற்கு 12ல் குரு இருந்தால் நன்மை செய்யுமா?
🌟 12ல் குரு இருந்தால் வாழ்க்கையில் உள்ள அனைத்து விதமான சுக துக்கங்களை அளித்து, நம்மை பண்படுத்தி இறைநிலைக்கு அழைத்து செல்வார்.
🌟 இதை நன்மையாகவும், தீமையாகவும் அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் சூழலுக்கு தகுந்தாற் போல் எடுத்துக் கொள்வது சரியானதாகும்.
2. எனக்கு ஜாதகம் இல்லை, ஆனால் தொழிலில் கஷ;டம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
🌟 தொழிலில் உள்ள துன்பத்தை களைவதற்கு முதலில் குலதெய்வ வழிபாடு செய்யவும்.
🌟 பிரசன்னம் மூலம் உங்களின் இன்றைய நிலையையும், பிள்ளைகளின் ஜாதங்களை கொண்டு எதிர்காலம் பற்றியும் அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படவும்.
3. குரு தனித்து இருந்தால் நன்மை செய்வாரா?
🌟 தேவர்களின் குருவான பிரகஸ்பதி நாரதரின் கலகத்தால் பார்வதிதேவியிடம் பெற்ற சாபமாகும். அதாவது குருவாகிய நீ தனியாக இருக்கும் போது யாருக்கும் உபயோகமற்று இருப்பாய் என்பதே அந்த சாபமாகும்.
🌟 பின் பிரகஸ்பதி பார்வதிதேவியிடம் சாப விமோசனம் அளிக்க வேண்டி நின்றார். அதற்கு பலனாக தான், அதாவது உன் பார்வை மட்டுமே நன்மை அளிக்கும் என்ற வரத்தினை பெற்றார். அதாவது குருவின் பார்வை கோடி புண்ணியம் என்றதாகும்.
4. பிரதோஷ நாளில், சிவன் கோவிலில் எந்த முறையில் கோவிலை சுற்றி வலம் வர வேண்டும்?
🌟 எப்போதும் வழிபடுவது போல் அன்றும் சர்வேஸ்வரனை வழிபட்டு வரவும்.
5.எந்த லக்னத்திற்கு, எந்த திசை வாசல் உள்ள வீடு கட்டலாம்?
🌟 கிழக்கு திசை : மேஷம், சிம்மம், தனுசு போன்ற லக்னத்திற்கு உரியது.
🌟 மேற்கு திசை : மிதுனம், துலாம், கும்பம் போன்ற லக்னத்திற்கு உரியது.
🌟 வடக்கு திசை : கடகம், விருச்சிகம், மீனம் போன்ற லக்னத்திற்கு உரியது.
🌟 தெற்கு திசை : ரிஷபம், கன்னி, மகரம் போன்ற லக்னத்திற்கு உரியது.
6. லக்னத்தில் சனி, குரு மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?
🌟 அமைதியான நடவடிக்கை உடையவர்கள்.
🌟 பல வித்தைகளில் வல்லவர்கள்.
🌟 பெரிய பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.
🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.