1. புரட்டாசி மாதம் குலதெய்வக் கோவிலில் ஆடு பலியிட்டு மொட்டைப் போடலாமா?
🍀 புரட்டாசி மாதம் குலதெய்வக் கோவிலில் ஆடு பலியிட்டு மொட்டைப் போடுதல் கூடாது.
🍀 புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
2. என் மனைவி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். நான் சிவபக்தன், பிரதோஷம் அன்று ஆலயம் செல்லலாமா?
🍀 தாராளமாக நீங்கள் சிவ ஆலய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
3. கடவுளின் கல் சிலையை வீட்டில் வைக்கலாமா? எந்த கடவுளின் கல் சிலையை வீட்டில் வைப்பது நல்லது?
🍀 கடவுளின் கல் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால், நித்தியப்படி பூஜைகள் செய்ய வேண்டும்.
4. ஆண்கள் விளக்கு ஏற்றலாமா?
🍀 ஆண்கள் விளக்கேற்றக்கூடாது. வீட்டில் உள்ள பெண்கள் சில நேரங்களில் ஏற்ற முடியாத சூழலில் மட்டும் ஆண்கள் விளக்கு ஏற்றலாம்.
5. ஆடி மாதம் வாசக்கால் வைக்கலாமா?
🍀 ஆடி மாதத்தை தவிர்த்து ஆவணி மாதம் செய்வது உத்தமம்.
6. எட்டில் சுப கிரகம் இருந்தால் நன்மை செய்யுமா?
🍀 எட்டில் உள்ள சுப கிரகங்கள் தனது திசையினால் முழு நன்மையோ அல்லது தீமையோ இல்லாமல், அக்கிரகம் அவ்வீட்டில் பெறும் பலத்தால் சுபர்களின் பார்வைகள் இருப்பின் நன்மை, தீமை என இரண்டுமே கலந்து செய்யும்.
7. ஒருவரது ஜாதகத்தில் ராசியும், லக்னமும் ஒன்றாக இருந்தால் என்ன பலன்?
🍀 ஒருவரது ஜாதகத்தில் ராசியும், லக்னமும் ஒன்றாக இருந்தால் லக்னாதிபதியின் தன்மையை பொறுத்து எல்லாம் உண்டாகும்.
🍀 லக்னாதிபதி பலம் பெற்றால் எல்லா வகையிலும் மேன்மை அடையக்கூடிய சூழல் மற்றும் எதிரிகளை வெல்லும் திறமை உண்டாகும்.
🍀 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறிக்கொள்ளக்கூடியவர்கள். லக்னாதிபதி பலம் இழந்தால் தன்னம்பிக்கை மற்றும் முயற்சிகளில் ஈடுபாடு இல்லாமல் மற்றவர்களை காரணம் காட்டி வாழ்வார்கள்.