No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூர்வீகத்தில் வீடு கட்டுவது சரியா?

Jul 30, 2018   Ananthi   1084    வாஸ்து 

எல்லோருடைய மனதிலும் ஒரே கேள்வி என்னவென்றால், நாங்கள் பூர்வீகத்தினை விட்டுவிட்டு காலி செய்து வந்துவிட்டோம். ஆனால் இன்றைக்கு அதில் வீடு கட்டலாம் என்று உள்ளோம் அது சரியா? தவறா?.

பூர்வீகம் எனக்கு ஆகாது என்று எனது மனைவியின் பெயரில் அந்த சொத்தை மாற்றி பத்திர பதிவு செய்து விட்டேன். அது ஏதாவது எங்களை பாதிக்குமா?

எங்களுடைய பூர்வீகத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டு பிறகு அதையே நாங்கள் திருப்பியும் வாங்கி கொண்டோம். அது ஏதாவது எங்களை பாதிக்குமா?

இது போல இன்னும் ஏராளமான பூர்வீகம் சம்பந்தமான நிறைய கேள்விகள் எல்லோருடைய மனதிலும் எழும்.

ஒரு நபருக்கு பூர்வீகமோ அல்லது சொந்த வீடோ எதுவானாலும், அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்றால் அந்த வீட்டின் வாஸ்து குறையுள்ளது என்பது அர்த்தம். வீட்டை விட்டு வெளியேறுவதில் பலவகை உண்டு.

1. வேலைக்காக வெளியூர் அல்லது வெளிநாட்டில் தங்கி விடுவது.

2. வியாபார ரீதியாக அடிக்கடி வெளியூர் போய் வருவது

3. மனைவியை பிரிந்து கணவன் மட்டும் வருடகணக்கில் வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருப்பது.

4. கணவன் - மனைவிக்குள் பிரிவினை ஏற்பட்டு பிரிந்து இருப்பது.

5. காரணம் ஏதுமில்லாமலே கணவன் - மனைவி பிரிந்து இருப்பது.

6. குழந்தைகளை ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைப்பது.

இது போன்ற பிரச்சனைகளால் தான் நீங்கள் உங்கள் பூர்வீகத்தை விட்டுவிட்டு வந்திருப்பீர்கள். அதில் கட்டியுள்ள கட்டிட அமைப்பு தவறே என்பது மட்டும் உறுதி.

அன்றைய நாளில் கட்டிய கட்டிடங்கள் பெரும்பாலும் வாஸ்து விதிகளுக்கு உட்படாதவைகளே பெரும்பாலும் இருக்கும்.

இப்போது அதே இடத்தில் கட்ட கூடிய கட்டிடம் வாஸ்துவின் அடிப்படை விதிகளுடன் கட்டும் போது அவை எந்த மாதிரி சொத்தாக இருந்தாலும் உங்களுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.

பூவியை பொருத்த மட்டில் ஒரே ஒரு நிலப்பரப்புதான். அதில் பூர்வீகசொத்து, நான் வாங்கிய சொத்து, மாமியார் கொடுத்த சொத்து, மாமா கொடுத்த சொத்து என்றெல்லாம் எதுவும் கிடையாது. நீங்கள் கட்டக்கூடிய கட்டிடங்கள் மட்டுமே உங்களுடைய வாழ்வை தீர்மானிக்கும்.

அடிப்படையில் இடம் சதுரமாகவும், செவ்வகமாகவும் மட்டுமே இருக்க வேண்டும். அதாவது 1:2 என்ற விகிதத்தில் மட்டுமே இருக்க வேண்டும் அதை தவிர்த்து மற்ற அளவுகள் தவறானவைகள்.


Share this valuable content with your friends