1. கடக லக்னத்தில் ராகு, ஏழாம் இடமான மகரத்தில் கேது, செவ்வாய் மற்றும் புதன் இணைந்திருக்கிறது. இதற்கு என்ன பலன்?
💢 வாதத்திறமையில் வல்லவர்கள்.
💢 அறிவாற்றல் உடையவர்கள்.
💢 செல்வ வளம் உடையவர்கள்.
💢 இரகசியமான செயல்பாடுகளை உடையவர்கள்.
2. என் தந்தை இறந்து ஆறு மாதம் ஆகின்றது. இரண்டு மாதங்கள் அடைப்பு இருப்பதாக கூறினார்கள். ஆனால், நான் எதுவும் செய்யவில்லை. இதனால் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா?
💢 அடைப்பு இருந்து அதற்கான செயல்களை செய்யாவிடில் பாதிப்புகள் உண்டாகும்.
💢 எனவே, குடும்பத்தில் உள்ள பெரியோர்களை அணுகி தகுந்த ஆலோசனைகளை பெற்று அதற்கான செயல்களை செய்யவும்.
3. முகூர்த்தம் எழுதியவுடன் மணமகள் மற்றும் மணமகன் ஏன் பார்த்து கொள்ளக்கூடாது?
💢 முகூர்த்தம் எழுதியவுடன் மணமகள் மற்றும் மணமகன் பார்த்து கொள்ளக்கூடாது என்பது பின்னாளில் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு அதை தவிர்க்கும் பொருட்டே பின்பற்றப்படுகின்றது.
💢 மணமகள் - மணமகன் பார்த்து கொள்ளக்கூடாது என்பது ஒவ்வொரு குலவழக்கத்தின் படி பின்பற்றக்கூடியதாகும்.
4. நான்கு மாதங்கள் வித்தியாசம் உள்ள வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா?
💢 மணப் பெண்ணிற்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் பெரியோர்களின் சம்மதத்துடன் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.
5. குரு ஆறாமிடமும், சனி எட்டாம் இடமும் இருந்தால் என்ன பலன்?
💢 செலவுகள் அதிகம் செய்யக்கூடியவர்கள்.
💢 வாக்கு பலிதம் கொண்டவர்கள்.
💢 எண்ணிய செயல்களை சாதிக்கக்கூடியவர்கள்.
💢 பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
6. கோவிலில் தீபம் ஏற்றும்போது ஒரு விளக்கை ஏற்ற வேண்டுமா? அல்லது இரண்டு விளக்கை ஏற்ற வேண்டுமா?
💢 கோவிலில் தீபம் ஏற்றும்போது இரண்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
7. சிவன் சிலையை வீட்டில் வைக்கலாமா?
💢 சிவன் சிலையை வீட்டில் வைக்கலாம். ஒரு அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
8. நாகதோஷம் உள்ள ஆணுக்கு, களத்திர தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா?
💢 நாகதோஷம் உள்ள ஆணுக்கு, களத்திர தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்கக்கூடாது.