No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வரப்போகும் குருப்பெயர்ச்சி : குருபகவான் நன்மையை மட்டும் தான் செய்வாரா?

Jul 06, 2018   Suganya   656    ஆன்மிகம் 

🌟 குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

🌟 இந்த ஒரு வருட குருப்பெயர்ச்சி காலத்தில் அந்த முழு வருடமும் நன்மையைத் தருவாரா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும். அதற்கு விடை இல்லை என்றுதான் கூறுகிறார்கள்.

🌟 நாம் ஏற்கெனவே பார்த்தபடி 5, 7, 9, 2, 11 ஆகிய இடங்களுக்கு நன்மை செய்யும் குருபகவான் மற்ற இடங்களான 1 (ஜென்ம ராசி), 3, 4, 6, 8, 10, 12 ஆகிய இடங்களுக்கு நன்மை குறைவாகவும், பாதிப்புகளை அதிகமாகவும் தருவார்.

🌟 இப்படி வருடம் முழுக்க நன்மையோ, கெடுதலோ தந்தால் அதை மனிதர்கள் தாங்கிக்கொள்வார்களா?. அதாவது வருடம் முழுக்க, பணமாகக் கொட்டினால் அகந்தை வந்துவிடும். அதேசமயம் வருடம் முழுவதும் துன்பமயமாக இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும்.

🌟 அதனால்தான் இறைவன் அந்த அளவையும் அதாவது நன்மை, தீமை எதுவானாலும் அளந்து தரும்படி பார்த்துக்கொண்டான். குழப்பமாக இருக்கும்! ஒன்றும் குழம்ப வேண்டாம்.

🌟 ஒருவருட பயணத்தில் குருபகவான் ஏறக்குறைய 5 1ஃ2 மாதங்கள் வக்கிரம் மற்றும் அஸ்தமனம் எனும் நிலையை அடைவதால் குரு பெயர்ச்சியின் மொத்த பலனும் பாதி அளவில்தான் (நன்மையோ, தீமையோ) நம்மை வந்தடையும்.

🌟 எனவே, பாதகமான பலன்கள் நடைபெறுமோ என அச்சப்படுபவர்கள் பயப்படத் தேவையில்லை. அதேசமயம் நற்பலன்கள் நடைபெறுபவர்கள் குரு வக்ரம் அல்லது அஸ்தமனம் அடைவதற்குள் சுபகாரியங்களைச் செய்துவிட வேண்டும். அதேசமயம் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய திசா புத்தி நடந்தால்தான் இந்த குருப்பெயர்ச்சி நன்மை தரும்.

🌟 மாறாக பாதகத்தை தரும் திசாபுத்தி நடந்தால் பெரிய நன்மை ஏதும் தராது. இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே அறிந்து கொள்ளலாம்.

🌟 எடுத்துக்காட்டாக குரு பார்வை வந்துவிட்டது தாராளமாக திருமணம், வீடுவாங்குதல், வீடுகட்டுதல் செய்யலாம் என பலன் சொல்வார்கள். ஆனால், ஆண்டுகள் பல கடந்தாலும் திருமணமோ அல்லது சொந்த வீடு முயற்சியோ கைகூடாமல் போவதையும் நாம் பார்த்திருப்போம்.

🌟 இதற்கு சாதகமாக இல்லாத திசாபுத்தியே காரணமாகும். இதை நாம் புரிந்து கொண்டால் போதும். பெரிய எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள மாட்டோம்.

🌟 6 மாதம் சாதகமும், 6 மாதம் பாதகமும் தரக்கூடிய குருப்பெயர்ச்சியானது இப்போதெல்லாம் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆனால், இதனால் யாருக்கு யோகம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குருப்பெயர்ச்சியின் போது ஆலயங்களுக்குச் செல்லுங்கள். மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

🌟 ஆலயங்களுக்கு நல்லெண்ணெய், பன்னீர், சந்தனம், பால், தயிர், மலர்மாலைகள், பூக்கள் என உங்கள் சக்திக்கு ஏற்றவாறு முடிந்ததை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் குருபகவான் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்பார்.


Share this valuable content with your friends


Tags