1. வீட்டின் எதிரில் காலி மனை இருக்கலாமா?
🌟 வீட்டின் எதிரில் காலி மனை இருக்கலாம்.
2. எனது கொழுந்தனாருக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்திருந்தோம். திடீரென அம்மை போட்டுவிட்டது. இந்நிலையில் நிச்சயதார்த்த தேதியை மாற்றியுள்ளோம். தலைக்கு மூன்று தண்ணீர் ஊற்றி, பிறகு பத்து நாட்கள் கழித்து தழும்புடன் நிச்சயதார்த்தம் செய்யலாமா?
🌟 உடலில் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள் சரியானதும் நிச்சயதார்த்தம் செய்யவும்.
3. என் மகனிற்கு முதல் வருடத்தில் மொட்டை அடிக்கவில்லை. ஆதலால் மூன்று வருடம் கழித்து தான் மொட்டை அடிக்க வேண்டுமா?
🌟 உங்களின் மகனிற்கு முதல் வருடத்தில் மொட்டை அடிக்கவில்லையெனில், மூன்று வருடம் கழித்து தான் மொட்டை அடிக்க வேண்டும்.
4. பெண் குழந்தைக்கு பிறந்த முடியை செவ்வாய்க்கிழமையில் குலதெய்வ கோவில் இல்லாமல், வேறு கோவிலில் எடுக்கலாமா?
🌟 பெண் குழந்தைக்கு பிறந்த முடியை செவ்வாய்க்கிழமையில் குலதெய்வ கோவில் இல்லாமல், வேறு கோவிலில் வேறு வேண்டுதல் இருக்கும் பட்சத்தில் எடுக்கலாம்.
5. திருமணத்தடை நீங்க திருமணஞ்சேரி செல்வதாக இருந்தால் வளர்பிறையில் செல்லலாமா?
🌟 திருமணத்தடை நீங்க திருமணஞ்சேரி செல்வதாக இருந்தால் வளர்பிறையில் செல்லலாம்.
6. அமாவாசைக்கு மறுநாள் புதிய வேலையில் சேரலாமா?
🌟 அமாவாசைக்கு அடுத்து வரும் நாளை தவிர்த்து மற்ற நாட்களில் புதிய வேலையில் சேரலாம்.
7. காலையில் எழுந்தவுடன் எந்த திசையை பார்க்க வேண்டும்?
🌟 காலையில் எழுந்தவுடன் கிழக்கு திசையை பார்க்கலாம்.
8. சூரிய திசையால் ஏற்படும் பலன்கள் யாவை?
🌟 சூரியன் பலமாக இருக்கும் பட்சத்தில் எடுத்தச்செயலை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பார்கள்.
🌟 உடல் ஆரோக்கியம் மேம்படும்.
🌟 தந்தைக்கு மேன்மை உண்டாகும்.
🌟 அரசு சார்ந்த துறையில் பதவிகள் கிடைக்கும்.