ருத்ராட்ச மாலை கனவில் தெரிந்தால் என்ன பலன்?
May 02, 2019 Ananthi 15742 கனவு பலன்கள்
1. மான் தோளில் உறங்குவதுபோல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 எதிர்ப்புகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
2. என்னை விரும்பும் நபர் எனது வீட்டிற்கு வந்து கொய்யாப்பழத்தினை எனக்கு கொடுத்து, நாங்கள் இருவரும் பகிர்ந்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் விரும்பிய எண்ணம் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.
3. மாதவிலக்குடன் கோவிலுக்கு சென்று வழிபடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதுவிதமான செயல்பாடுகளால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4. பெரியவர் ஒருவர் விபூதி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 நினைத்த காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
5. பணத்தை எனக்கு தெரியாமல் என் பையில் போட்டு எனக்கு திருட்டு பட்டம் கட்டுவது போல் கனவில் கண்டேன். இதற்கு என்ன பலன்?
🌟 மற்றவர்களிடம் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் செயல்பட்டால் உங்கள் மீதான மரியாதைகள் மேம்படும் என்பதைக் குறிக்கிறது.
6. ருத்ராட்ச மாலை கனவில் தெரிந்தால் என்ன பலன்?
🌟 ஆன்மீகம் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்வதற்காண சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
7. மாட்டு சாணம் கனவில் வந்தால் என்ன பலன்?
🌟 எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.