உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா? இப்படி செய்யுங்கள்!!
Jun 28, 2018 Suganya 555 ஆன்மிகம்
🍀 உங்கள் வீட்டில் நிரந்தரமாக மகாலட்சுமி தங்க வேண்டுமா? எப்போதும் குறையாத செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமா? இது போன்ற கேள்விகளுக்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
🍀 அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது.
🍀 அதே போன்று நீங்களும் வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் சாம்பிராணி புகை போட்டு வாருங்கள். இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும்.
🍀 அந்த சாம்பிராணியை எப்படி போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அதற்கேற்ற சாம்பிராணியை போட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம்.
🍀 சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.
🍀 அகில் தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.
🍀 மருதாணி விதைகளில் தூபமிட சூனிய கோளாறுகள் விலகும்.
🍀 தூதுவளையில் தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.
🍀 சந்தனத்தில் தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
🍀 அருகம்புல்லில் தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்.
🍀 வெட்டிவேரில் தூபமிட காரியசித்தி உண்டாகும்.
🍀 வேப்பிலையில் தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
🍀 வெண்கடுகில் தூபமிட பகைமை விலகும்.
🍀 வெண்குங்கிலியத்தில் தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.
🍀 ஜவ்வாதில் தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.
🍀 வேப்பம்பட்டையில் தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.
🍀 நாய் கடுகில் தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.
🍀 துளசியில் தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.
🍀 கரிசலாங்கண்ணியில் தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
🍀 நன்னாரி வேரில் தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும்.
🍀 மருதாணி இலையில் தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.
🍀 மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கி பயன்படுத்தி தீராத செல்வ வளம் கிடைக்கப் பெறுங்கள்.