1. மகர ராசி, துலாம் லக்னம். 10ஆம் இடமான கடகத்தில் குரு, கேது சேர்ந்திருந்தால் என்ன பலன்?
🌟 கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடியவர்கள்.
🌟 அதீத கற்பனைத் திறன் கொண்டவர்கள்.
🌟 எதையும் சாதிக்கக்கூடிய மனதைரியம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. குலதெய்வ கோவிலிற்கு எப்போது செல்ல வேண்டும்?
🌟 குலதெய்வ கோவிலிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்லலாம்.
3. சனிக்கிழமையன்று முதன்முதலாக மாப்பிள்ளை வீடு பார்க்க செல்லலாமா?
🌟 சனிக்கிழமையன்று மாப்பிள்ளை பார்க்க செல்வதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் பார்க்க செல்லலாம்.
4. நவமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.
🌟 புதியதை விரும்பி செய்யக்கூடியவர்கள்.
🌟 மறைமுக சக்திகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
5. சந்திர திசை, கேது புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 தெய்வீக சிந்தனைகள் மேலோங்கும்.
🌟 நெருக்கடியான சூழல் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.
🌟 ஆராய்ச்சி துறைகளில் ஆர்வம் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. சந்திர திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 பொருள் சேர்க்கை உண்டாகும்.
🌟 கலை தொழிலில் ஈடுபாடு அதிகரிக்கும்.
🌟 வாகன யோகம் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. நான் கன்னி ராசி. எனக்கு சனி திசை நடக்கிறது. இதற்கு என்ன பலன்?
🌟 பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
🌟 ஆன்மீக பெரியோர்களின் ஆசிகள் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.