1. தெரிந்த நபர் ஒருவர் எனக்கு இனிப்பு தருவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மகிழ்ச்சியான சுபச் செய்திகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும்.
2. பாம்பு வீட்டிற்கு வருவது போலவும், அதற்கு பிறகு கீரிப்பிள்ளை வந்து பாம்பை துண்டு துண்டாக கடிப்பது போலவும் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முக்கிய முடிவுகளில் மற்றவர்களின் ஆலோசனையை விட நன்றாக சிந்தித்து சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் முடிவு செய்வது நன்மையை அளிக்கும்.
3. அம்மன் கோவிலுக்கு அபிஷேகப் பொருட்கள் மற்றும் பலவிதமான கனிகளை தயாராக வைத்துக்கொண்டு, கோவில் பூசாரியிடம் அபிஷேகத்திற்கு அனுமதி பெற்றுவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் கூடிய விரைவில் ஈடேறும்.
4. பச்சை நிற மீன்களை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பச்சை நிற மீன்களை கனவில் கண்டால் மகிழ்ச்சியான சுபச் செய்திகள் கிடைக்கும்.
5. திருமணமாகாத எனது தோழி கருவுற்று இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 திருமணமாகாத உங்களது தோழி கருவுற்று இருப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத வாய்ப்புகளால் சாதகமான சூழல் உங்கள் தோழிக்கு ஏற்படும்.
6. வீட்டில் உள்ளவர் அனைவருக்கும் துணி எடுத்துக்கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சில மாற்றங்களால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
7. அதிகாலை நேரத்தில் கடவுளை நேரில் பார்த்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 அதிகாலை நேரத்தில் கடவுளை நேரில் பார்த்தது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் கூடிய விரைவில் ஈடேறும்.