1. திருமணத்தன்று தாலி பிரித்து கோர்க்கலாமா?
🌟 திருமணத்தன்று தாலி பிரித்து கோர்க்கக்கூடாது. குறைத்த பட்சம் மூன்று நாட்களாவது இருக்க வேண்டும்.
2. சிம்ம ராசி, கும்ப லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 தற்பெருமை கொண்டவர்கள்.
🌟 சாதனைகள் பல செய்யும் திறமை உடையவர்கள்.
🌟 மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை விரும்பாதவர்கள்.
🌟 எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. லக்னத்தில் புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 அறிவுக்கூர்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.
🌟 சிறந்த ஆலோசகராக விளங்கக்கூடியவர்கள்.
🌟 இறை ஞானம் உடையவர்கள்.
🌟 அனைவரிடமும் பழகக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. நான் கும்ப ராசி, சதயம் நட்சத்திரம், மகர லக்னம். 5-ல் செவ்வாய் இருக்கிறது. இதற்கு என்ன பலன்?
🌟 திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அடிக்கடி தோன்றும்.
🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.
🌟 எதிலும் அவசரமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
🌟 எதிலும் திருப்தி இல்லாத நிலை உண்டாகும்.
5. நான் மகர லக்னம், மிதுன ராசி. 5ல் அதாவது, ரிஷபத்தில் குரு வக்ரத்தில் உள்ளது. இதற்கு என்ன பலன்?
🌟 மனதிற்கு பிடித்தவர்களுக்காக செலவு செய்யக்கூடியவர்கள்.
🌟 தொழில் சார்ந்த அலைச்சல்களால் எண்ணிய பலன் கிடைக்க காலதாமதமாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. லக்னத்தில் குரு மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 எதையும் முன்னின்று செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
🌟 சாஸ்திரங்களில் ஈடுபாடு உடையவர்கள்.
🌟 ஆராய்ச்சி பணிகளில் விருப்பம் கொண்டவர்கள்.
🌟 உதவும் மனப்பான்மை உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.