No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சபரிமலைக்கு தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஏன்?

Nov 28, 2018   Ananthi   524    ஆன்மிகம் 

கார்த்திகை வந்தால் சபரிமலைக்கு மாலைப் போடும் பழக்கம் இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வாறு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் யாத்திரையின் போது தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது எதற்காக மற்றும் எருமேலி பேட்டை துள்ளலின் மகத்துவம் என்ன என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

18வது முறையாக சபரிமலை யாத்திரைக்கு செல்லும் போது தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஏன்?

🌟 முதல்முறை தொடங்கி ஒவ்வொரு முறையும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும்போதும், ஐயப்பமார்களுக்கு பலவிதமான மனமாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஐயப்பன்மார்களுக்கு அவர்களுக்குள் இருக்கும் தீயகுணங்கள் அகன்று நல்ல குணங்கள் துளிர்க்கும்.

🌟 ஐயப்பமார்கள் அவர்களிடமிருந்த அஞ்ஞானங்களைத் துறந்து மெய்ஞ்ஞானத்தை அடைகிறார்கள். இதன் மூலம் அவர்களது பழைய பிறவியைத் துறந்து புனர் ஜென்மம் பெறுகின்றனர்.

🌟 தென்னையை நாம் மனித இனத்திற்கு இணையாகவே கருதுகின்றோம். அதனால் அதை தென்னம்பிள்ளை என்றே அழைக்கிறோம். மறுபிறவி எடுப்பதை குறிப்பதற்கே தென்னம்பிள்ளையை எடுத்துச்சென்று அங்கே நடுகிறோம்.

எருமேலி பேட்டை துள்ளலின் மகத்துவம் என்ன?

🌟 பேட்டைத்துள்ளல் என்பது, சுயநலமாக யோசிக்கும் எண்ணங்களை அறவே அகற்றுவதாகும். ஒவ்வொரு மனிதனும் ஜாதி, மதம், இனம், சமூக அந்தஸ்து இவற்றை அகற்றி, வண்ணம் பூசி நடனமாடி பக்தர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். நாம் எல்லோரும் ஒன்று என்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் வைபவமே பேட்டைத்துள்ளல். இங்கே வேட்டைபிரியரான சாஸ்தா, வேடவன் உருவத்தில் கிராத சாஸ்தாவாக அருள்பாலிக்கிறார்.

🌟 இந்த சாஸ்தா, காட்டில் உள்ள மிருகங்களை மட்டும் வேட்டையாடவில்லை. நம்முள் உள்ள மிருக குணத்தையும் வேட்டையாடி, நம்முள் உள்ள நான் என்ற உணர்வை அழித்து, நமக்குள் விழிப்புணர்வைப் புகுத்தி, நாம் எல்லோரும் சமம் என்று உணரவைத்து நம்மை நல்ல மனிதர்களாக மாற்றி அருள்கிறார்.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :
ஓம் மஹாத்யுதயே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
ஓம் கதா தங்காய நம
ஓம் கதா க்ரண்யை நம
ஓம் ரிக்வேத ரூபாய நம
ஓம் நக்ஷத்ராய நம
ஓம் சந்த்ர ரூபாய நம
ஓம் வலாஹகாய நம
ஓம் தூர்வாச்யாமாய நம


Share this valuable content with your friends


Tags

பூமி பூஜை போட வாஸ்து நாள் உகந்ததா? கடக லக்னம் உடையவர்கள் எந்த ராசிக்கல் அணிய வேண்டும்? ஆர்.கே.நாராயணன் தில்லையாடி வள்ளியம்மை jaguar war அமாவாசை அன்று பெண் குழந்தை பிறப்பது நல்லதா? 29.12.2019 Rasipalan in pdf format!! வார ராசிபலன் in pdf format மாலை போட்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூரம் நட்சத்திரம். எந்த ராசிக்கல் அணிந்தால் நல்லது? tamil month சிங்கம் வலது காலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கடவுள் ஊர்வலம் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? sathayam star நான் கடக ராசி அன்னை தெரசா ஒருவருக்கு அணிவித்த மாலையை மற்றொருவருக்கு அணிவிக்கலாமா? பாத்திரம் நிறைய பால் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளை நாய் குட்டிகளை கொஞ்சுவது போல் கனவு