1. மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம் உடைய ஆண், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம் உடைய பெண்ணை திருமணம் செய்யலாமா?
🌟 அதிபதி மற்றும் நட்சத்திர பொருத்தங்கள் சுமாரான அளவில் இருப்பதால் பாவக ரீதியான பொருத்தங்களை ஆய்வு செய்து திருமணம் செய்து கொள்ளவும்.
2. எனது தந்தை வைகாசி மாதம் இறைவனிடம் சேர்ந்தார். கிரகப்பிரவேசம் எப்போது செய்ய வேண்டும்?
🌟 மூன்று மாதம் கழித்து கிரகப்பிரவேசம் செய்து கொள்வது சிறந்தது.
3. நான் கும்ப லக்னம், 7-ல் சுக்கிரன் இருக்கிறது. இதற்கு என்ன பலன்?
🌟 தோற்றப் பொலிவு கொண்டவர்கள்.
🌟 சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்கள்.
🌟 பொருள் சேர்க்கும் திறமை உடையவர்கள்.
🌟 எதிர்பாராத அதிர்ஷ்டம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. 2-ல் குரு இருந்தால் என்ன பலன்?
🌟 நல்ல பேச்சாற்றல் உடையவர்கள்.
🌟 வசதி வாய்ப்பு மற்றும் நல்ல கண்பார்வை இருக்கும்.
🌟 அனைவரையும் கவரும் தோற்றப் பொலிவு கொண்டவர்கள்.
🌟 மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. பிறப்பின் போது நட்சத்திரத்திற்கும், இறப்பின் போது திதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன்?
🌟 பிறப்பின் போது நாம் பெற்ற உடல் மூலமே நாம் பெறும் சுக, துக்கங்கள் அமைகின்றன. இதற்கு மனோகாரகன் மற்றும் உடல்காரகனான சந்திரனே காரணம் ஆவார்.
🌟 உடலிலிருந்து ஆன்மாவானது பிரிந்த பிறகு உடலிற்கு எவ்வித சக்தியும் இருப்பதில்லை. எனவே, ஒருவர் இறந்த திதியில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் ஆன்மாவிற்கு சக்தி அளிக்கப்படுகிறது.
பிறப்பு :
🌟 பிறப்பின் போது மனோகாரகன் மற்றும் உடல் காரகனான சந்திரனே நட்சத்திரமாகவும், ராசியாகவும் வருவதால் நட்சத்திரத்திற்கும், ராசிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இறப்பு :
🌟 ஒருவர் இறப்பின் பின்பு, திதியின் மூலம் ஆன்மாவிற்கு சக்தியை அளிப்பதால் இறப்பிற்கு பின் திதி முக்கியத்துவம் பெறுகிறது.
🌟 இதனை பொறுத்தே பிறப்பின் போது நட்சத்திரத்திற்கும், இறப்பின்போது திதிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.