1. மாங்கல்ய கயிறு மஞ்சள் வண்ணம் கொண்டதாக தான் இருக்க வேண்டுமா? அதற்கு காரணம் என்ன?
🌟 மாங்கல்ய கயிறு மஞ்சள் வண்ணம் கொண்டதாக தான் இருக்க வேண்டும்.
🌟 ஏனெனில், மஞ்சள் வண்ணம் சுபிட்சத்தை குறிக்கக்கூடியது.
🌟 மஞ்சள் எல்லோரின் வீட்டில் இருப்பதால் தாலி சரடு மாற்றுவது எளிதான ஒன்றாகும் என்று கருதியே நம் முன்னோர்கள் மாங்கல்ய கயிறு மஞ்சள் வண்ணம் கொண்டதாக தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
2. குழந்தைக்கு உணவு ஊட்ட நல்ல ஓரை எது?
🌟 குழந்தைக்கு உணவு ஊட்ட சந்திர ஓரையை பயன்படுத்திக்கொள்ளவும்.
3. பெண் பூரட்டாதி 4-ம் பாதம், ஆண் சுவாதி 1-ம் பாதம். இருவருக்கும் பொருத்தம் வருமா?
🌟 பெண் பூரட்டாதி 4-ம் பாதம், ஆண் சுவாதி 1-ம் பாதம் இருந்தால் பொருத்தம் வரும்.
🌟 பாவக ரீதியான பொருத்தங்களை ஆய்வு செய்து திருமணம் செய்து கொள்ளவும்.
4. புதுமண தம்பதிகள் மூன்றாவது மாதம் தாலி பிரித்து கட்டும் சடங்கின் பொருள் என்ன?
🌟 திருமணத்தின் போது கட்டப்படும் தாலியை (பல நூல்கள் இணைத்து) மணப்பெண்ணின் நடைமுறைக்கு (ஒரே கயிறு அல்லது தாலி சங்கிலி) தகுந்தாற்போல் மாற்றி கட்டுவது அந்த சடங்கின் பொருள் ஆகும்.
5. ஒரு மனையில் 2 போர் போடலாமா? ஒரு போர் வடகிழக்கு மூலையில் உள்ளது. இரண்டாவது போர் தென்மேற்கு மூலையில் போடலாமா?
🌟 ஒரு மனையில் அவரவர் வசதிக்கு ஏற்ப போர் போட்டு கொள்ளலாம்.
🌟 வடகிழக்கு மூலையில் போர் போடலாம்.
🌟 தென்மேற்கு மூலையில் போர் போடுவதை தவிர்க்கவும்.
6. கன்னி மூலையில் பிள்ளையார் வைத்து வழிபடலாமா?
🌟 கன்னி மூலையில் பிள்ளையார் வைத்து வழிபடலாம்.