1. பூக்களை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பூக்களை கனவில் கண்டால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
2. என் மனைவிக்கு பேய் பிடித்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 உங்கள் மனைவிக்கு பேய் பிடித்தது போல் கனவு கண்டால் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு நிம்மதியில்லாத சூழல் உண்டாகும்.
3. இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 இறந்தவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
🌟 மேலும், இறந்தவர்களுக்கான தர்ப்பணம் முதலியவற்றை சிரத்தையோடு செய்தல் நன்மையை தரும்.
4. தண்ணீரில் அடித்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 தண்ணீரில் அடித்து செல்வது போல் கனவு கண்டால் கொடுக்கல் - வாங்கலில் கவனம் வேண்டும்.
🌟 தெளிவான சிந்தனைகள் இருந்தாலும் முடிவுகள் எடுப்பதில் குழப்பங்கள் உள்ளதை குறிக்கின்றது.
5. ஒருவரை கொலை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 ஒருவரை கொலை செய்வது போல் கனவு கண்டால் எடுத்த காரியத்தில் சில காலதாமதம் ஏற்படும்.
🌟 மேலும், பல வழிகளில் தேவையற்ற தன நஷ;டத்தை ஏற்படுத்தும்.
6. அடிக்கடி சுத்தமில்லாத கழிவறையில் மலம் கழிப்பது போல் கனவு வருகிறது. இதற்கு என்ன பலன்?
🌟 அடிக்கடி சுத்தமில்லாத கழிவறையில் மலம் கழிப்பது போல் கனவு கண்டால் சுபச் செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும்.
7. பிறரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பிறரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வது போல் கனவு கண்டால் பணத்தேக்கம் உண்டாகும்.