குழி கணக்கு மற்றும் நீள அகலத்திற்கும் வாஸ்துவுக்கும் என்ன தொடர்பு அதனால் ஏதாவது நன்மை தீமைகள் உண்டா என்று தெரிந்து கொள்வோம்.
நமது இந்தியாவை பொறுத்தவரை கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை முளம், வீசம், ஜான், கெச்சம் இது போன்ற அளவு முறைகளை பின்பற்றி வந்துள்ளார்கள். இந்த 70 வருடத்திற்குள் தான் உலகம் முழுவதும் மெட்ரீக் சிஸ்டம் என்கிற முறையை எல்லோரும் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளோம். அதாவது மீட்டர் அளவு முறைகளில் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக கடைப்பிடிக்கத் தொடங்கி உள்ளோம்.
அதே போல் ஒரு வீட்டிற்கு நீளம் மற்றும் அகலத்தை கணக்கிட பழங்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட முறை என்னவென்றால், அந்த குடும்பத்தின் எஜமானின் காலடியின் அளவையே அவர்கள் நீள அகலத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
இந்த அடிப்படை தெரியாத பல வாஸ்து நிபுணர்களும், பல வாஸ்து புத்தகங்களும் தமிழ்நாட்டு மக்களை குழப்பி கொண்டுள்ளார்கள். இந்த அடிப்படையில் உருவானது தான் குழிகணக்கு என்கிற முறையும், ஆயாதி என்கிற முறையும். இதில் சொல்லக்கூடிய விளக்கங்க் அனைத்தும் மூட நம்பிக்கையே, இதில் அறிவியல் சார்ந்த விஷயங்கள் ஏதும் இல்லை.
இதை தொடர்ந்து ஒரு வீட்டிற்கு வாசல் அமைக்க நவகோள்களை ஒருவரின் வீட்டில் பொருத்தும் போது புதன் கிரகம் வரக்கூடிய இடத்தில் வாசல் அமைத்து கொடுக்கிறார்கள். அதாவது ஒரு வீட்டிற்கு வடக்கு வாசல் என்றால் வடமேற்கு வடக்கு வாசலாகும், கிழக்கு வாசல் என்றால் தென்கிழக்கு கிழக்கு வாசலாகும். மேற்கு வாசல் என்றால் தென்மேற்கு மேற்கு வாசலாகவும், தெற்கு வாசல் என்றால் தென்மேற்கு தெற்கு வாசலக வரும்.
புதன் வாசல் என்கிற முறை கடைபிடிக்கும்போது இவ்வாறு அமையும். இங்கு இந்த வாசல் அமைப்பு அனைத்துமே தவறானவைகள். அதாவது நீச்ச பகுதியிலேயே வாசல்கள் அனைத்தும் இருக்கும்.
இதுபோன்ற வீடுகளில் வசிப்பவர்களின் நிலை என்ன?
1. ஆண்களாகிய வீட்டின் எஜமான் அல்லது மூத்த ஆண் வாரிசு அல்லது மூத்த பெண் என்றால் அந்த பெண்ணின் கணவன் இவர்கள் மூவருமே வெளியூர் வெளிநாடு சென்று அங்கேயே தங்கி விடுவது அல்லது அந்த வீட்டின் மனைவி பிரிந்து இருக்கிறார்கள்.
2. காதல் திருமணம் அல்லது மதம் மாறிய திருமணம் அல்லது உறவில் திருமணங்கள் செய்து கொள்வது.
3. குழந்தை பிறப்பு அரிதாகி தத்து கொடுத்தல் அல்லது தத்து எடுத்தல் போன்றவைகள் நடப்பது.
4. முதிர்கண்ணியாகவும், முதிர்காளைகளாகவும் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது.
5. குடும்ப உறவு, அண்ணன் தம்பி உறவு, சொந்தங்களின் உறவுகளில் மிகப்பெரிய விரிசலை உண்டுபண்ணி தனிமையில் இருப்பது.
6. ஆண் மற்றும் பெண்கள் திடீரென்று இறந்து விடுதல் அதாவது ஹார்ட் அட்டாக் போன்ற காரணங்கள்.
7. வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள் அதே நாட்டியிலேயே தங்கிவிடுதல். இதனால் பெற்றோர் தன்னுடைய வாரிசுகள் இருந்தும் அனாதையாக இருக்க கூடிய சூழ்நிலையில் இருப்பது.
8. ஆன்மீக பணி, சன்னியாசி வாழ்க்கை, பில்லி, சூனியம், செய்வினை போன்ற மூட நம்பிக்கையின் மீது அளவற்ற பற்றுடைவர்களாக இருப்பது.
இன்றைய நவீன காலத்தில் நீள, அகலம், குழி கணக்கு என்பது வெறும் அளவீடுகள் (measurements) மட்டுமே....